திருப்பூர், ஜூன் 6 – திருப்பூர் மாவட்ட மக்களின் போக்குவ ரத்துத் தேவையை ஈடுசெய்யும் வகையில் அரசுப் பேருந்துகள் மற்றும் பயணிகள் ரயில் களை முழுமையாக தடங்கல் இல்லாமல் தொடர்ச்சியாக இயக்க வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தி உள்ளது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திருப் பூர் மாவட்ட செயற்குழுக் கூட்டம் கடந்த 3ஆம் தேதி மாவட்ட செயற்குழு உறுப்பினர் எஸ். ஆர்.மதுசூதனன் தலைமையில் நடைபெற் றது. மாவட்டச் செயலாளர் செ.முத்துக்கண் ணன், மாநிலக்குழு உறுப்பினர் கே.காமராஜ் உள்பட மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மா னம் வருமாறு: திருப்பூரில் இருந்து அவிநாசி வழியாக கோவை செல்லும் வழித்தடத்தில் வாரந் தோறும் திங்கள்கிழமை காலை மற்றும் சனிக் கிழமை இரவு மற்றும் பண்டிகை நாட்களில் அரசுப்பேருந்துகள் வழக்கமான நடைகள் இயக்கப்படாமல் மிகக்குறைவாக இயக் கப்படுகின்றன. இதனால் அன்றாடம் வேலை, மருத்துவமனை மற்றும் கல்லூரிகளுக்குச் செல்லக்கூடிய நூற்றுக்கணக்கானவர்கள் பேருந்து கிடைக்காமல் அவதிப்படுகின்ற னர். இது ஒவ்வொரு வாரமும் தொடர் கதை யாக உள்ளது. அதேபோல் சுற்றுவட்டார கிரா மப்புறங்களுக்கு இயக்கப்படும் புறநகரப் பேருந்துகளும் பெரும் எண்ணிக்கையில் நிறுத்தப்பட்டு விட்டதால் கிராமப்புற மக்க ளும் பெரும் சிரமப்படுகின்றனர்.
ஆனால் இந்த விசயத்தில் அரசுப் போக்கு வரத்துக் கழக நிர்வாகத்தினர் பாராமுகமாக உள்ளனர். ஏற்கெனவே நகர, கிராமப்புறங்க ளுக்கு கூடுதல் பேருந்து வசதி தேவைப்படும் நிலையில், இருக்கும் பேருந்துகளையும் இயக்காமல் நிறுத்துவது கடும் பாதிப்பை ஏற் படுத்தும். குறிப்பாக போக்குவரத்துக் கழ கத்தில் போதிய எண்ணிக்கையில் ஓட்டுநர் கள், நடத்துநர்கள் இல்லாத நிலையில் காலி பணியிடங்கள் நிரப்பப்படாமல் உள்ளன. எனவே, அரசு நிர்வாகம் போக்குவரத்துக் கழ கத்தில் காலிப்பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும். தேவையான எல்லா ஊர்க ளுக்கும் பேருந்துகளை முழுமையாக அனைத்து நடைகளும் இயக்க வேண்டும். இப்பிரச்சனை நீண்ட காலமாக தொடர்ந்து கொண்டிருக்கும் நிலையில் போக்குவரத்துக் கழக நிர்வாகமும், மாநில அரசும் உரிய நடவடிக்கை எடுக்காவிட்டால் இக்கோரிக்கையை வலியுறுத்தி மக்களைத் திரட்டிப் போராட்டம் நடத்தவது என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தீர்மானித்துள் ளது.
அதேபோல் சேலம் கோட்ட ரயில்வே நிர் வாகமும் பயணிகளுக்கு உரிய ரயில்களை முழுமையாக இயக்காமல் அடிக்கடி ஏதே னும் காரணம் சொல்லி நிறுத்தி விடுகின்ற னர். ரயில்வே நிர்வாகத்தின் இந்த செயல் தனி யார் பேருந்துகள் லாப நோக்கத்திற்கு மறை முகமாக உதவி செய்வதாக உள்ளது. கோவை – சேலம் பயணிகள் ரயில் இந்த வழித்தடத்தில் உள்ள திருப்பூர், ஈரோடு மட்டு மின்றி இடையில் உள்ள சிற்றூர்களுக்கும் பயணம் செய்வதற்கு ஏற்றதாக உள்ளது. ஆனால் இந்த ரயிலை அடிக்கடி நிறுத்தி விடு கின்றனர். ரயில்வே பராமரிப்புப் பணிகளுக் காக இந்த ரயிலை நிறுத்துவதாக சேலம் கோட்ட நிர்வாகம் கூறுகிறது. ஆனால் நிர்வா கரீதியாக உரிய பராமரிப்பு நடைமுறைகள் இருக்கும் நிலையில், இதுபோல் பல நாட்க ளுக்கு, சில சமயம் வாரக்கணக்கில் இந்த ரயிலை நிறுத்திவிடுவது பொருத்தமான கார ணமாகத் தெரியவில்லை. இந்திய முழுவதும் ரயில்வே துறையில் 3.50 லட்சம் காலி பணியி டங்கள் நிரப்பப்படாமல் இருக்கும் சூழ்நிலை யில் ரயில் பயணிகளுக்கு உரிய சேவைகள் வழங்குவதில் பலவித பாதிப்புகள் உள் ளன. எனவே காலி பணியிடங்களை நிரப்ப ரயில்வே வாரியமும், மத்திய அரசும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். சேலம் கோட் டத்தில் கோவை – சேலம் பயணிகள் ரயிலை சீராக தொடர்ச்சியாக இயக்குவதற்கு உட னடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியு றுத்தி உள்ளது.
திருப்பூர் மாநகரில் டாக்டர் கலைஞர் பேருந்து நிலையம் எதிரில் தேசிய நெடுஞ் சாலையில் அமைக்கப்பட்டுள்ள பாலத்திற்கு கீழே உள்ள பகுதியை மாநகராட்சி நிர்வாகம் வாகன நிறுத்தமாக அறிவித்து வாடகை கட்ட ணம் வசூலிப்பதற்கு குத்தகைக்கு விட்டுள் ளது. ஏற்கெனவே இங்கு வாகன நிறுத்தம் என வாடகை வசூலிக்க முடிவு செய்து அறிவித்த போது ஆரம்ப நிலையிலேயே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இதற்கு கடும் எதிர்ப்புத் தெரிவித்தது. திருப்பூர் மாநகரில் போக்குவரத்து நெருக்கடி மிகுந்த டாக்டர் கலைஞர் பேருந்து நிலையம் பகுதியில் மாநகராட்சிக்குச் சொந் தமில்லாத, நெடுஞ்சாலையின் ஒரு பகுதியை வாகன நிறுத்தமாக பிரித்து வாடகை வசூ லிப்பது வணிகநோக்கம் கொண்டது. இதை ஏற்க முடியாது. சீரான போக்குவரத்துக்கு அந்த இடத்தை முறையாக பயன்படுத்த வேண்டும். பேருந்து நிலையம் அருகிலேயே வாகன நிறுத்த வளாகம் சீர்மிகு நகரம் திட்டத் தில் கட்டப்பட்டிருக்கும் நிலையில், சாலை யோரம் நிறுத்தப்படும் வாகனங்களுக்கு வாடகை வசூலிப்பதைக் கைவிட வேண்டும் என்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திருப்பூர் மாவட்ட செயற்குழு வலியுறுத்திக் கேட்டுக் கொண்டுள்ளது.