தருமபுரி, ஆக. 31- தேர்தல் கால வாக்கு றுதியை தமிழக அரசு நிறை வேற்ற வலியுறுத்தி தமிழ் நாடு சத்துணவு ஊழியர் சங்கத்தினர் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட் டனர். தருமபுரி மாவட்ட ஆட்சி யர் அலுவலகம் முன்பு நடை பெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு சங்கத்தின் மாவட்ட தலைவர் சி.காவேரி தலைமை வகித்தார். மாநில செயலாளர் பெ. மகேஸ்வரி, மாவட்ட செயலாளர் தேவகி ஆகியோர் கோரிக்கைகளை விளக்கி பேசினர். தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் மாநில துணைத்தலைவர் கோ.பழனியம் மாள், மாவட்ட செயலாளர் ஏ.சேகர், தமிழ் நாடு பொது நூலகத்துறை அலுவலர் சங்க மாநிலத் தலைவர் பிரபாகரன் ஆகியோர் வாழ்த்தி பேசினர் . இதில், தமிழக முதல்வரின் காலை சிற்றுண்டி உணவு திட்டத்தினை அனைத்து பள்ளிகளுக்கும் விரிவுபடுத்தவேண்டும். இத்திட்டதை சத்துணவு ஊழியர்கள் மூலம் சமைத்து வழங்க அனுமதிக்க வேண்டும். தேர்தல் காலத்தில் சத்துணவு ஊழியர் களுக்கு அளித்த வாக்குறுதியை நிறை வேற்றவேண்டுமென உள்ளிட்ட கோரிக்கை களை முழக்கங்களாக எழுப்பினர். முடிவில், ராஜா நன்றி கூறினார்.