உதகை, ஜன. 16- நீலகிரி மாவட்டத்தில் உறைபனி யின் தாக்கம் நாளுக்கு நாள் அதிக ரித்து வருகிற நிலையில், தேயிலைச் செடி உள்ளிட்டவைகள் கருகி வரு வது விவசாயிகளை கவலையடையச் செய்துள்ளது. உதகையில் குறைந்தபட்ச வெப்ப நிலை 1.7 ஆக பதிவாகி இருந்தது. இதன் காரணமாக மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளான அப்பர் பவானி, அவ லாஞ்சியில் வெள்ளை கம்பளம் விரித் தாற்போல் உறைபனி படர்ந்து காணப் பட்டது. அவலாஞ்சியில் குறைந்தபட்ச வெப்பநிலை ஜீரோ டிகிரி செல்சியசாக இருந்தது. கடுங்குளிர் நிலவுவதால் தேயிலை தோட்ட வேலைக்கு செல் லும் தொழிலாளர்கள் பெரிதும் பாதிக் கப்பட்டு உள்ளனர். உறைபனி தாக்கம் தொடர்வ தால் இத்தலார், காந்தி கண்டி, அவ லாஞ்சி, எமரால்டு பகுதிகளில் தேயி லைச் செடிகள் கருகி வருகின்றன. தொழிற்சாலைகளுக்கு தேயிலை கொள் முதல் அடியோடு குறைந்துள்ளது. இதுகுறித்து தேயிலை தோட்ட தொழிலாளர்கள் கூறுகையில், பனிக்கா லம் தாமதமாக தொடங்கியுள்ள நிலை யில் உறைபனியின் தாக்கம் அதிகமாக இருக்கிறது. பகலில் வெயில் அடித்தா லும், இரவில் உறைபனி இருப்பதால் பயிர்கள் கருகி விடுகிறது. தேயிலை கொழுந்துகள் கருகி உள்ளதால், பச்சை தேயிலை பறிக்க முடியவில்லை. மழை பெய்து பசுமை திரும்பி செடிகளில் கொழுந்து விட்டால் மட்டுமே பச்சை தேயிலையை பறிக்க முடியும். அது வரை எங்களுக்கு வேலை இருக்காது. ஆகவே, பனியால் கருகிய பயிர்க ளுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண் டும். அதேபோல, தேயிலை தோட்ட தொழிலாளர்களுக்கும் நிவாரணம் வழங்க வேண்டும் என்றார். உதகயில், நாள்தோறும் 5 ஆயி ரம் கிலோ கொள்முதல் செய்யும் தொழிற் சாலைகளுக்கு, தற்போது 2 ஆயிரம் கிலோ வரை மட்டுமே பசுந்தேயிலை பறிக்க முடிகிறது என்பது குறிப்பிடத் தக்கது.