districts

கோயம்புத்தூர் முக்கிய செய்திகள்

பரிசு விழுந்திருப்பதாக குறுஞ்செய்தி அனுப்பி கார் ஓட்டுநரிடம் ரூ.13 லட்சம் மோசடி

கோவை, டிச. 10- பரிசு விழுந்திருப்பதாக குறுஞ்செய்தி அனுப்பி கார் ஓட்டு நரிடம் ரூ13 லட்சம் மோசடி செய்த சம்பவம் கோவையில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கோவை - சிங்காநல்லூரை   சேர்ந்தவர் சசிகுமார் (27). கார்  ஓட்டுநர்.  இவர் கோவை மாநகர சைபர் கிரைம் போலீசில் புகார்  அளித்துள்ளார், அதில், கடந்த சில நாட்களுக்கு முன்பு எனது  செல்போன் எண்ணுக்கு ஒரு குறுஞ்செய்தி வந்தது. இதில்  எனக்கு பரிசு விழுந்திருப்பதாக அதில் தெரிவிக்கப்பட்டி ருந்த்து. சிறிது நேரத்திலேயே ஒருவர் என்னை செல் போனில் அழைத்து,  என்னிடம் பரிசை அனுப்ப வேண்டு மானால் அதற்கு ஜி.எஸ்.டி வரி, ஆர்.பி.ஐ வரி, அனுப்பு வதற்கான தொகை ஆகியவற்றினை செலுத்த வேண்டும். அதற்கான பணத்தை முதலில் நீங்கள் அனுப்புங்கள் என  ஒரு வங்கி எண்ணை கொடுத்தனர். இதனை உண்மை என  நம்பிய நான் அந்த மர்ம நபர் கூறிய வங்கி கணக்கிற்கு ரூ.13  லட்சத்து 20 ஆயிரத்தை அனுப்பி வைத்தேன். ஆனால் அவர்கள் சொன்ன படி எனக்கு எந்த பரிசு பொருட்களும் கிடைக்கவில்லை. மேலும், நான் செலுத்திய பணத்தையும் எனது கணக்கில்  வரவு வைக்க முடியவில்லை. அப்போது தான் நான் ஏமாற்றப் பட்டதை  அறிந்தேன்.  போலியான குறுஞ்செய்தி அனுப்பி  நூதன முறையில் என்னிடம் பணத்தை மோசடி செய்துள் ளனர். இதனால் நான் அதிர்ச்சி அடைந்தேன். இழந்த என்  பணத்தை மீட்டுத்தர வேண்டும் என அந்த புகாரில் தெரி வித்துள்ளார். இதுகுறித்து, சைபர் கிரைம்  போலீசார் வழக்குப் பதிவு செய்து மோசடி நபர் குறித்து விசாரணை நடத்தி வரு கின்றனர்.

சாலை விபத்து

உதகை,டிச.10- உதகைக்கு சுற்றுலா வந்த காரும், லாரியும் மோதி விபத்து ஒருவர் உயிரி ழந்த சம்பவம் பெரும்  சோகத்தை ஏற்படுத்தி வுள்ளது. நீலகிரி மாவட்டத்தில், இரண்டு நாட்களாக கடும்  பனி மூட்டம் நிலவி வரு கிறது. இந்நிலையில் உதகை யிலிருந்து மைசூர் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள தலைக்குந்தா என்ற இடத்தில் கடும் பனிமூட்டம் காரணமாக மலைக்காய்கறிகளை ஏற்றி  வந்த லாரியும், கர்நாடக மாநிலம் கொள்ளேகாலில் இருந்து உதகைக்கு சுற் றுலா வந்த காரும் நேருக்கு நேர் மோதியது. இதில் காரில் பயணித்த மகா நந்தா  (32) என்பவர் சம்பவ இடத் தில் உயிரிழந்தார், உடன் பயணித்த இரண்டு பெண்கள், ஒரு ஆண் என  மூன்று பேர் பலத்த காயங் களுடன் உதகை அரசு மருத் துவமனையில் அனுமதிக் கப்பட்டனர்.

பெண்ணுக்கு பாலியல் தொல்லை - எஸ்பி அலுவலக ஊழியர் கைது

உதகை, டிச.10- 5 ஆண்டுகளாக பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த நீல கிரி மாவட்ட காவல் கண்காணிப் பாளர் அலுவலக அலுவலர் கைது  செய்யப்பட்டு சிறையில் அடைக் கப்பட்டார். நீலகிரி மாவட்ட கூடலூர் பகுதி யை சேர்ந்தவர் மோகன கிருஷ்ணன்  (51). இவர் நீலகிரி மாவட்ட காவல்  கண்காணிப்பாளர் அலுவல கத்தில் அமைச்சுப்பணி கண்காணிப் பாளராக  பணியாற்றி வருகிறார். இவர் கடந்த 2018ஆம் ஆண்டு முதல் தனது அலுவலகத்தில் பணி புரிந்து வரும்  திருமணமான 38 வயது  பெண்ணிற்கு  பாலியல் தொந்தரவு கொடுத்து வந்துள்ளார். மோகன கிருஷ்ணனின் தொடர்ந்து அத்து மீறிய நிலையில், அந்த பெண் ஊழியர் எச்சரிக்கை செய்துள்ளார்.  ஆனால் அதை பொருட்படுத் தாமல் மோகன கிருஷ்ணன் தொடர்ந்து பாலியல் சீண்டல்களில் ஈடுபட்டு வந்துள்ளார். ஒரு கட்டத்தில்  வீட்டுக்கே சென்று உள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த பெண் இதுகுறித்து  நீலகிரி  காவல் கண்காணிப்பாளர் ஆஷிஸ்  ராவத்திடம் புகார் மனு அளித்துள் ளார். இந்த  புகாரை பெற்றுக் கொண்ட ஆஷிஷ் ராவத்  “விசாகா  விசாரணை குழுவுக்கு பரிந்துரை செய்து உள்ளார்.  பாலியல் தொல்லை குறித்து விசாரித்த விசாக குழு, மோகன கிருஷ்ணன் பாலியல் தொந்தரவு கொடுத்ததை உறுதி செய்தது. இதையடுத்து பெண் ஊழியர் உதகை அனைத்து மகளிர் போலீஸ்  நிலையத்தில் புகார் அளித்தார். இதைதொடர்ந்து காவல் ஆய் வாளர் சரஸ்வதி தலைமையிலான போலீசார் இந்திய தண்டனைச் சட்டம் 376 (பணியிடத்தில் பாலியல்  தொல்லை கொடுத்தல்) என்ற பிரிவில் வழக்கு பதிவு செய்து மோகன கிருஷ்ணனை கைது செய்த னர். இதைத் தொடர்ந்து அவரை உதகை கூடுதல் மகிளா நீதிமன்ற நீதிபதி முன் ஆஜர்ப்படுத்தி சிறை யில் அடைத்தனர். இந்த சம்பவம் நீலகிரி மாவட்டத்தில் பரபரப்பை ஏற் படுத்தி உள்ளது.  கைது செய்யப்பட்ட மோகன  கிருஷ்ணனின் மனைவி குழந்தைகள்  நல பாதுகாப்பு குழுவில் உறுப்பின ராக உள்ளார் என்பது குறிப்பிடத் தக்கது. தற்போது, கைது செய்யப்பட் டுள்ள மோகனகிருஷ்ணன் 1998ஆம் ஆண்டு அலுவலக உதவியாளராக பணியில் சேர்ந்துள்ளார். இதை யடுத்து கடந்த 2004ஆம் ஆண்டு முதல் உதகையில் உள்ள மாவட்ட காவல் கண்காணிப்ளர் அலுவ லகத்தில் பணிபுரிந்து வந்தார். இவர்  அப்போது முதல் 38 வயது பெண் ஊழியர் தவிர பலருக்கும் பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். இது  சம்பந்தமாக 3 பேர் புகார் கொடுத் ள்ளனர். இது குறித்தும் விசாகா கமிட்டியினர் தற்போது தீவிர விசா ரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில், பாலியல் புகாரில்  சிக்கிய அதிகாரியை போலீஸ் காவல்  துறை கண்காணிப்பாளர் ஆஷிஸ் ராவத் பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார்.

நடக்க இருப்பவை

சமூக நல்லிணக்க கருத்தரங்கம் நாள்: 11.12.2022 ஞாயிறு நேரம்: மாலை 5 மணி இடம்: எம்.ஜெ.திருமண மண்டபம், நேரு வீதி, அந்தியூர் சிறப்புரை: பு.பா.பிரின்ஸ் கஜேந்திரபாபு பொதுச்செயலாளர், பொதுப்பள்ளிக்கான மாநில மேடை ஏற்பாடு :  தமிழ்நாடு சிறுபான்மை     மக்கள் நலக்குழு

வனக்கோட்டத்தில் விலங்குகள் கணக்கெடுப்பு:  சிறுத்தை, கரடி காலடித் தடங்கள் பதிவு

திருப்பூர், டிச.10- திருப்பூர் வனக்கோட்டத்தில் மழைக்கு பிந்தைய புலிகள்  கணக்கெடுப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. இதில்  சிறுத்தை, கரடி காலடித் தடங்கள் பதிவு செய்யப்பட்டுள்ள தாக வனத்துறையினர் தெரிவித்தனர். திருப்பூர் மாவட்டம் உடுமலையை அடுத்த ஆனை மலை புலிகள் காப்பக பகுதியில் உடுமலை மற்றும் அமராவதி  வனச்சரகங்கள் உள்ளன. இங்கு யானை, புலி, செந்நாய்,  சிறுத்தை, புள்ளிமான், கடமான், காட்டுப்பன்றி, முள்ளம் பன்றி, கரடி, காட்டெருமை, மலைப்பாம்பு, சாம்பல் அணில்  உள்ளிட்ட ஏராளமான வனவிலங்குகள் வசித்து வருகின்றன.  இந்த வனச்சரகங்களில் ஆண்டுதோறும் கோடை காலம்  மற்றும் குளிர் காலத்தில் புலிகள் மற்றும் வன விலங்குகள்  கணக்கெடுப்பு பணிகள் நடைபெறும். இதன் அடிப்படையில் உடுமலை மற்றும் அமராவதி வனச்சரகத்தில் குளிர்கால கணக்கெடுப்பு பணி தொடங்கி உள்ளது. வரும் 12 ஆம் தேதி  வரை இப்பணி நடைபெற உள்ளது.  உடுமலை அமராவதி வனச் சரகங்கள் மற்றும் வெளி மண் டல பகுதியான கொழுமம், வந்தரவு வனங்களில் உள்ள 34  சுற்றுகளில் கணக்கெடுப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதற் காக வனப் பகுதியில் 53 நேர்கோட்டு பாதை அமைக்கப்பட் டுள்ளது. வனப் பணியாளர்கள் ஜி.பி.ஆர்.எஸ். கருவி உதவியு டன் கணக்கெடுப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். ஒரு நாளுக்கு 5 கிலோமீட்டர் வீதம் மூன்று நாட்களில்  15 கிலோ மீட்டர் தூரம் சென்று சுற்றுகளில் காணப்படுகின்ற புலி, சிறுத்தை உள்ளிட்ட மாமிச உண்ணிகள் மற்றும் மிகப்பெ ரிய தாவர உண்ணிகளின் தடயங்கள் குறித்து பதிவு செய்யப் படுகிறது. அடுத்த மூன்று நாட்களில் நேர்கோட்டுப் பாதையில்  நடந்து சென்று நேரடியாக காணப்படும் வன விலங்குகளின் காலடி குளம்பினங்கள், பறவைகள், மனிதர்கள் மற்றும் வன விலங்குகள் நடமாட்டம் ஆகியவை குறித்து பதிவு செய்யப்ப டும்.  மேலும் யானை, காட்டெருமை சாணம், புள்ளிமான், கட மான், காட்டுப் பன்றி, நீலகிரி மந்தி, சிங்கவால் குரங்கு ஆகி யவற்றின் புழுக்கை மற்றும் சாணங்கள் குறித்தும் கணக்கெ டுப்பு நடைபெறும். அதே பாதையில் திரும்பி வரும்போது ஒவ் வொரு 400 மீட்டரிலும் உள்ள தாவர வகைகளும் கணக்கீடு  செய்யப்பட உள்ளது. இறுதி நாளான 12ஆம் தேதி கணக்கெ டுக்கப்பட்ட வனவிலங்குகள் குறித்த இறுதி அறிக்கை தயார்  செய்யப்பட்டு சமர்ப்பிக்கப்பட உள்ளதாக வனத்துறையினர் தெரிவித்தனர்.   மேலும்,வெள்ளியன்று ஆனைமலை புலிகள் காப்ப கம், திருப்பூர் வனக்கோட்டம், கோம்பு மேற்கு சுற்றில், சின் னார் மற்றும் கட்டளை மாரியம்மன் வனப்பகுதியில் புலிகள்  கணக்கெடுப்பின் ஐந்தாம் நாளில் நேர்கோட்டுப் பாதையில்  நடந்து தாவர உண்ணிகளின் நேரடி கணக்கெடுப்பு மற்றும்  தரைபரப்பு பிளாட் பணி மேற்கொள்ளப்பட்டது. இங்கு சிறுத் தையின் எச்சம், யானைகளின் நடமாட்டம் போன்றவை காணப்பட்டு பதிவு செய்யப்பட்டது. இந்த கணக்கெடுப்பு பயிற்சியில் திருப்பூர் வனக்கோட்ட உதவி வன பாது காவலர் மற்றும் உதவி இயக்குனர் கணேஷ் ராம் மற்றும் வனப்  பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

விழிப்புணர்வு கருத்தரங்கம்

திருப்பூர், டிச.10- திருப்பூா் சிக்கண்ணா அரசு கலைக் கல்லூரியில் விழிப்புணர்வு கருத்தரங்கம் வெள்ளிக்கிழமை நடைபெற் றது. சர்வதேச ஊழல் எதிர்ப்பு  தினத்தையொட்டி திருப்பூர் சிக்கண்ணா அரசு கலைக் கல்லூரி நாட்டு நலப்பணித் திட்ட அலகு 2 சார்பில் ஊழ லுக்கு எதிராக உலகை ஒன்றி ணைப்போம் என்ற விழிப்பு ணர்வு கருத்தரங்கம் வெள் ளிக்கிழமை நடைபெற்றது. இந்த கருத்தரங்கில் பங் கேற்ற மாணவ, மாணவியர் சர்வதேச ஊழல் எதிர்ப்பு தின உறுதிமொழி எடுத்துக்  கொண்டனர். இதில், கல் லூரி மாணவ, மாணவியர் மற் றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.

உடுமலை அணைகளின் நிலவரம் 

திருமூர்த்தி அணை நீர்மட்டம்:45.32/60அடி நீர்வரத்து:817கன அடி
வெளியேற்றம்:751கனஅடி

அமராவதி அணை நீர்மட்டம்: 89.51/90அடி.நீர்வரத்து:1451கனஅடி
வெளியேற்றம்:1409கனஅடி
மழையளவு:10மிமீ

நகராட்சி நிர்வாகத்திற்கு தேவையான  அலுவலர்களை  நிரப்பக் கோரி சிபிஎம் உண்ணாவிரத போராட்டம் அறிவிப்பு

அவிநாசி,டிச.10- திருமுருகன்பூண்டி நகராட்சி நிர்வாகத் திற்கு தேவையான அலுவலர்களை உடனே  நியமிக்க கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் உண்ணாவிரத போராட்டம் அறி விக்கப்பட்டுள்ளது. திருமுருகன்பூண்டி நகராட்சி தரம் உயர்த் தப்பட்டு ஒரு வருட காலம் கடந்த நிலையில்,  புதிய வரிவிதிப்பு, பெயர் மாற்றம், புதிய குடி நீர் இணைப்பு, வரைபடம் போன்ற அனும திக்கு மக்களை அலைக்கழிக்க செய்யும் திருமுருகன் பூண்டி நகராட்சி நிர்வா கத்தை கண்டித்து  நகராட்சி நிர்வாகத்திற்கு தேவையான அலுவலர்களை உடனே நிய மிக்க கோரியும், பொது சுகாதாரம், குடிநீர் விநியோகம், தெருவிளக்கு, வரி வசூல் போன்ற பணிகளை தனியாருக்கு வழங்கும் அரசாணை 115,152 உடனடியாக வாபஸ் பெற கோரியும், லஞ்சம் இல்லாத நகராட்சி நிர்வாகத்தை நடத்த வலியுறுத்தல் உள் ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி டிசம்பர் 14 ஆம் தேதி திருமுருகன்பூண்டி பகுதி  கிளைகள் சார்பில்  நகராட்சி அலுவலகம் முன் பாக உண்ணாவிரதப் போராட்டம் நடத்த இருப்பதாக, அறிவிப்பு வெளியிட்டுள்ளனர்.

சாட்சி சொல்ல வந்தவர்களை தாக்க முயற்சியா?

நீதிமன்றம் முன்பு கூடியிருந்தவர்கள் கைது

கோவை, டிச.10- கொலை குற்ற வழக்கில் சாட்சி சொல்ல வந்தவரை  தாக்குவதற்காக கோவை நீதிமன்றம் முன்பு கூடியிருந்த தாக 7 பேர் கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற் படுத்தியுள்ளது. கோவை கணபதி அடுத்த காமராஜபுரம் பகுதியில் வசித்து  வருபவர் சுகந்தராம் (22). கடந்த ஆண்டு பிரதீப் என்பவரை  சில நபர்கள் அரிவாளால் வெட்டி உள்ளனர். அதற்காக  கோவை நீதிமன்றத்தில் சாட்சி சொல்வதற்காக வெள்ளி யன்று காலை சுகந்தராம் மற்றும் அவரது நண்பர்கள் வந்துள் ளனர். இதனிடையே, கோவை ஒருங்கினைந்த நீதிமன்றத் தின் முன்பு அதிகமான நபர்கள் நின்று கொண்டிருப்பதாக கோவை பந்தய சாலை காவல்துறையிக்கு தகவல் கிடைத் துள்ளது. சம்பவ இடத்திற்கு போலீசார் சென்றுள்ளனர்.  இதனைபார்த்த சுகந்தராம் மற்றும் அவரது நண்பர்கள்  அங்கிருந்து புறப்பட்டுள்ளனர். இதனைக்கண்ட போலீசார்,  எதற்காக இங்கு இப்படி கூடி இருக்கிறீர்கள் என கேட்டுள் ளனர். அதற்கு சுகந்தராம் உள்ளிட்டோரிடம் தொடர்ந்து  விசாரித்த போது, அவர்கள் கோர்ட்டில் சாட்சி சொல்ல வந்த  எதிரணியினரை தாக்குவதற்காக கூடி இருந்ததாக  தெரிகிறது. இதையடுத்து போலீசார் அவர்கள் அனை வரையும் காவல் நிலையத்துக்கு அழைத்து சென்றனர்.  பின்னர் சுகந்தராம் மற்றும் அவருடன் இருந்த சஞ்சீவ்  குமார்(20), சுதீர் (18), கணபதி பாலாஜி லேஅவுட்  பகுதியைச் சேர்ந்த  17 வயது சிறுவன், பாப்பநாயக்கன் பாளையம் பகுதியைச் சேர்ந்த சுபாஷ் (24), துடியலூர்  ஹவுஸிங் யூனிட் பகுதியைச் சேர்ந்த  சஞ்சய்( 23 ), திருச்சி  மாவட்டம் மணப்பாறையை சேர்ந்த   தமிழ்மணி (23 )ஆகிய  7 பேரையும் போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்டவர்களின் உறவினர்கள், நண்பர்கள் அனைவரும் போலீசாரிடம்  வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அனைவரையும் அப்புறப்படுத்தி விட்டு நீதிமன்றம்  அழைத்து சென்று நேர் நிறுத்தி சிறையில் அடைத்தனர். கைது  செய்யப்பட்டவர்களை போலீசார் அழைத்துக்கொண்டு செல்லவிடாமல் தடுக்க முயன்ற சம்பவம் அப்பகுதியில் பர பரப்பை ஏற்படுத்தியது.

காவிரி உபரிநீர் திட்டத்தை நிறைவேற்றிடுக

1000 கிராமங்களில் மக்கள் சந்திப்பு இயக்கம்

தருமபுரி, டிச.10- காவிரி உபரிநீர் திட்டத்தை நிறை வேற்ற கோரி 2023ஆம் ஆண்டு ஜனவரி  5ஆம்தேதி முதல் 31 ம் தேதி வரை  ஆயிரம் கிராமங்களில் ஒரு இலட்சம் குடும்பத்தை சந்திக்கும் மக்கள் சந்திப்பு  இயக்கம் நடத்துவது என மார்க் கம்யூனிஸ்ட் கட்சி முடிவெடுத்துள்ளது. இதுகுறித்து மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் தருமபுரி மாவட்டக் குழு செயலாளர் ஏ.குமார் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, மழைக்காலங்களில் காவிரியில் உபரியாகச் செல்லும் நீரை ஏரிகளில் நிரப்பும்  காவிரி உபரி நீர் திட்டத்தை உடனடி யாகச் செயல்படுத்த வலியுறுத்தியும்,  மாவட்ட வளர்ச்சிக் கோரிக்கைகளை முன்வைத்தும் 2023 ஜனவரி 5 முதல்  31 முடிய 1000 கிராமங்களில் ஒரு  லட்சம் குடும்பங்களைச் சந்திக்கும் மக்கள் சந்திப்பு இயக்கம்  மார்க்சிஸ்ட்  கம்யூனிஸ்ட்கட்சியினர் நடத்த உள்ளது.  சமீபத்தில் பெய்த மழையால் மாவட் டத்தில் பல இடங்களில் சாலைகள்  சேதமடைந்து குண்டும், குழியுமாகக்  காட்சி அளிக்கின்றன.  இச்சாலை களைப் பராமரிக்க உடனடி நடவ டிக்கை எடுக்க வேண்டும்.  சமீபத்தில் தமிழக முதல்வர் தரும புரி மாவட்டத்தில் வனவிலங்கு சரணாலயம் அமைக்கப்படும் என  அறிவித்துள்ளார். இதன் மூலம் 686  ச.கி.மீ. பாதுகாக்கப்பட்ட காடுகள் என குறிப்பிடப்பட்டுள்ளது.  இதனால் வனத்தை ஒட்டியுள்ள பகுதிகளில் புறம்போக்கு நிலங்களில் சாகுபடி செய்து வரும் விவசாயிகளை நிலத்தில்  இருந்து  வெளியேற்றம் செய்யும்  முயற்சியில் வனத்துறை ஈடுபட் டுள்ளது. இதனால் விவசாயிகளின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகி உள்ளது. எனவே, விவசாயிகள் நில  வெளியேற்றத்தைக் கைவிட்டு பல்லாண்டு  காலமாக புறம்போக்கு  நிலங்களில் சாகுபடி செய்து வரும்  விவசாயிகளுக்கு பட்டா வழங்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.