கோவை, ஜன.18- கோவை மதுக்கரை அருகே குடி யிருப்பு பகுதிக்குள் நுழைந்த சிறுத் தையை உயிருடன் பிடிக்க கடந்த இரண்டு நாட்களாக வனத்துறையினர் தீவிர முயற்சி மேற்கொண்டு வருகின்ற னர். கோவை மதுக்கரை வனச்சரகத்திற் குட்பட்ட சுகுணாபுரம் பகுதியில் உள்ள தன்னாசி ஆண்டவர் கோயில், கோல மாவு மலைப்பகுதியில் கடந்த நவம்பர் மாதம் முதல் சிறுத்தை ஒன்றின் நடமாட் டம் இருந்து வந்தது. இதையடுத்து, மாவட்ட வன அலுவலர் உத்தரவின் பேரில் சிறுத்தையை பிடிக்க 3 இடங்க ளில் கூண்டுகள் வைக்கப்பட்டன. இந் நிலையில், திங்களன்று காலை குனிய முத்தூர் அடுத்த பி.கே.புதூர் பகுதியில் உள்ள தனியார் குடோனில் சிறுத்தை இருந்ததைக் கண்டு, குடோன் ஊழியர் ஒருவர் வனத்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தார். இதையடுத்து, வனத்துறையினர் வந்து குடோன் முழு வதும் இருந்த ஓடுகளில் வலை விரித் துள்ளனர். வெளியே செல்ல உள்ள 2 வழிகளிலும் வனத்துறையினர் கூண்டு வைத்துள்ளனர். கூண்டில் இறைச்சி வைக்கப்பட்டு அதனை சுற்றியும் வலை அமைக்கப்பட்டுள்ளது. மயக்க ஊசி செலுத்தி பிடிக்க முடியுமா என ஆய்வு செய்தபோது, அதில் சிக்கல் இருப்பது தெரிய வந்ததால், சிறுத்தை தானாக கூண்டில் சிக்கும் வரை காத்திருக்க முடிவு செய்துள்ளனர். மேலும், சிறுத்தையின் நடவடிக்கை களை கண்காணிக்க கூண்டுகளுக்கு அருகிலேயே இரவுநேர கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. இந்த கேமராவில் செவ்வாயன்று அதி காலை பதிவாகியுள்ள சிறுத்தை புலி கூண்டை நோக்கி நெருங்கி வந்து செல் லும் காட்சிகளை வனத்துறை அதிகாரி கள் வெளியிட்டுள்ளனர். இந்நிலை யில், கோவை மண்டல வனக்காப்பாளர் ராமசுப்பிரமணியம் சிறுத்தை புலி பதுங்கி உள்ள குடோனை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இதைத்தொடர்ந்து செய்தியாளர் களிடம் அவர் கூறுகையில், தற்போது குடோனில் பதுங்கியுள்ள சிறுத்தை ஏற் கனவே குடியிருப்புப் பகுதிகளில் சுற்றித் திரிந்து நாய்களை வேட்டையாடியது என்பதை வனக்கால்நடை மருத்து வர்கள் உறுதி செய்துள்ளனர். சுமார் 3 வயது மதிக்கத்தக்க ஆண் சிறுத்தை யாக இருக்கக் கூடும். இரவுக்குள் கூண் டில் சிறுத்தை பிடிபடும் என நம்பிக்கை தெரிவித்தார். பாழடைந்த குடோனில் பதுங்கி உள்ளதால் மயக்க ஊசி செலுத்தி பிடிப்பதில் சிக்கல் உள்ளது. அதனை மயக்க ஊசி செலுத்தி பிடிக்கும் திட்டம் இல்லை. சிறுத்தை பிடிபட்ட பிறகு அதன் உடல் நலத்தை கண்கா ணித்த பின்னர் அதனை, கோவை மாவட் டத்தில் உள்ள அடர் வனப்பகுதியில் கொண்டு சென்று விட முடிவு செய்துள் ளோம், என்றார்.