districts

img

ஏற்காடு மலைப் பாதையில் காட்டுத்தீ

சேலம், ஏப் 24- சேலம் மாவட்டம் ஏற்காடு மலைப்பாதை யில் திடீரென காட்டுத்தீ பரவியதால் சுற்று லாப் பயணிகள் கவனமுடன் செல்ல அறிவு றுத்தப்பட்டுள்ளது. சேலம் மாவட்டம், ஏற்காடு  பகுதி தமிழ கத்தின் முக்கிய சுற்றுலாத்தலமாக இருந்து வருகிறது. ஏழைகளின் ஊட்டி என்று அனை வராலும் அழைக்கப்படும் ஏற்காடு மலைப்ப குதிக்கு கோடை காலங்களில் சுற்றுலாப் பய ணிகள் அதிகமாக வந்து செல்வது வழக் கம். ஏற்காடு அடிவாரம் முதல் ஏற்காடு வரை  உள்ள மலைப்பாதை 22 கிலோமீட்டர் தொலைவு கொண்டது. இதில் 30-க்கும் மேற் பட்ட கொண்டை ஊசி வளைவுகள் காணப் படுகிறது. பரவலான வனப்பரப்பைக் கொண்டுள்ள இப்பகுதியில் எட்டாவது கொண்டை ஊசி வளைவு அருகில் திடீ ரென காட்டு தீ பரவியது. சம்பவத்தைத் தொடர்ந்து தீயணைப்பு வீரர்கள் மற்றும் காவல்துறையினர் காட்டுத் தீயை அணைக்க முயற்சித்து வருகின்றனர். மேலே செல்லும் சுற்றுலாப் பயணிகள் மற்றும்  பொதுமக்கள் பாதுகாப்புடன் செல்லவும், மலைப்பாதையில் எளிதில் தீப்பற்றக்கூடிய பொருட்களை எடுத்துச் செல்ல வேண்டாம் எனவும் கேட்டுக் கொண்டுள்ளனர்.