திருப்பூர், அக்.7- விவசாய விளை நிலங்கள் அதிக முள்ள பகுதிகளில் குளிர்பதனக் கிடங்குகள் அமைக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை வைத் துள்ளனர். திருப்பூர் மாவட்டம், பல்லடம் சுற் றுவட்டாரப் பகுதிகளில் தக்காளி விவ சாயம் அதிக அளவில் நடைபெறு கிறது. சில மாதங்களுக்கு முன்பு தக்காளி விலை ரூ.100 முதல் ரூ.200 வரை விற்பனையானது. இதனால் இந்தியா முழுவதும் மக்கள் மிகுந்த சிரமத்துக் உள்ளானார்கள். ஆனால் தற்பொழுது தக்காளி விலை கடு மையாக வீழ்ச்சியடைந்துள்ளது. இத னால், தக்காளி சாகுபடி செய்யப் பட்ட நிலங்களில் தக்காளி பறிக்கப்ப டாமல் செடிகளிலேயே விட்டு அழு கும் நிலை ஏற்பட்டுள்ளது. பல பகுதி களில் தக்காளி அறுவடைக்குத் தயா ராக உள்ளது. ஆனால், விலை வீழ்ச்சி யடைந்துள்ளது. உழவா் சந்தைக ளில் 14 கிலோ தக்காளி ரூ.100க்குக் கீழ் விற்பனை செய்யப்பட்டு வருகி றது. இதனால், விவசாயிகளுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது. சாகுபடி செலவு செய்த பணத்தை எடுக்க முடி யாமலும், பறிப்புக் கூலிக்கும், வண்டி வாடகைக்கும்கூட கட்டுப்படியாகாத நிலை ஏற்பட்டு உள்ளது. இதனால் அவை அறுவடை செய்யப்படாமல் செடிகளிலேயே பழுத்து வீணாகி வருகின்றன. இது குறித்து தக்காளி விவசாயி கள் கூறுகையில், 1 ஏக்கர் தக்காளி சாகுபடி செய்ய ரூ.20 ஆயிரம் வரை செலவாகிறது. ஏக்கருக்கு 300 கிலோ மகசூல் கிடைக்கும். 1 கிலோ தக்காளி ரூ.40 க்கு விற்பனை செய்தால்தான் விவசாயிக்கு கட்டுப்படியாகும். ஆனால், தற்போது விவசாயிகளி டமிருந்து 1 கிலோ தக்காளி ரூ.7க்குத் தான் வாங்கப்படுகிறது. 14 கிலோ கொண்ட ஒரு கூடை தக்காளி ரூ. 100க்கு எங்களிடம் இருந்து வாங் கப்படுகிறது. தற்பொழுது தக்காளி வரத்தும் அதிகமாகியுள்ளது. விலை மிகவும் சரிந்து, பறிப்புக்கூலி கூட கிடைக்காத நிலை ஏற்பட்டுள்ளது. 1 கூடை தக்காளிக்கு அறுவடைக் கூலி ரூ.20, வண்டி வாடகை மற்றும் சுங்கம் ரூ.30 என மொத்தம் ரூ.50க்குமேல் செலவாகிறது. இந்நிலையில், 1 கூடை ரூ.90, ரூ.100-க்கு தக்காளி விற் றால் எப்படி கட்டுபடியாகு?. எனவே, தக்காளி விவசாயிகளுக்கு உரிய விலை கிடைக்க தமிழக அரசு நடவ டிக்கை எடுக்க வேண்டும். மேலும், அதிக விளைச்சல் காரணமாக தக்காளி போன்ற விளைப்பொருள்க ளைப் பாதுகாக்க வசதியின்றி வீணாகி வருகின்றன. எனவே, விவ சாய விளை நிலங்கள் அதிகமுள்ள பகுதிகளில் குளிர்பதனக் கிடங்கு கள் அமைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். பல்லடம் பகுதி யில் தக்காளி ஜாம் தயாரிக்கும் தொழிற்சாலை அமைக்க நடவ டிக்கை எடுக்க வேண்டும் என்று கூறினர்.