districts

img

ரூகோஸ் வெள்ளை ஈ மற்றும் நோய்களை கட்டுப்படுத்தி தென்னை மரங்களை பாதுகாக்க விவசாயிகள் கோரிக்கை

திருப்பூர், பிப்.3 – திருப்பூர் மாவட்டத்தில் தென்னை மரங்களில் ரூகோஸ் வெள்ளை ஈ மற் றும் நோய்களைக் கட்டுப்படுத்தி தென்னை விவசாயிகளைப் பாதுகாக்க  நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவ சாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.  திருப்பூர் மாவட்டத்தில் பிரதான பயி ராக  60 ஆயிரம் ஹெக்டேருக்கு மேல்  தென்னை மரங்களை விவசாயிகள் பயிர் செய்துள்ளனர். தற்போது ரூகோஸ் வெள்ளை ஈக்கள் தாக்குத லால் தென்னை மரங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. கடந்த 2000-ஆம் ஆண்டிலிருந்து ஈரி யோபைடு (சிலந்திப்பூச்சி) நோய் தாக்குதல், தஞ்சாவூர் வாடல் நோய், கேரளா வாடல் நோய், கருந்தழைப் புழுக்கள் தாக்குதல், வேர் வாடல் நோய், குருத்து அழுகல் நோய், வேர்  அழுகல் நோய், பூங்கொத்து கருகு தல், ஊசி நோய் எனப் பல்வேறு நோய்  தாக்குதல்களாலும் தென்னை மரங்கள்  தொடர் பாதிப்புக்குள்ளாகி வருகின் றன. 2016-ஆம் ஆண்டிலிருந்து ரூகோஸ்  வெள்ளை ஈக்கள் தாக்குதல் தொடர்கி றது. ரூகோஸ் வெள்ளை ஈக்கள் சாறு உறிஞ்சுவதால் தென்னை மரங்களில் இலைகள் கருப்பு நிறமாக மாறி கடு மையாக பாதிக்கப்பட்டு 70 சதவிகித காய்ப்பு இழந்துவிட்டது. ஒரு மரத்திற்கு சராசரியாக 100 காய் கள் ஆண்டுக்கு கிடைக்கும் நிலை மாறி,  30 காய்கள்தான் கிடைக்கிறது. நோய்த்  தாக்குதலுக்கு முன்பு நன்கு முற்றிய தேங்காய் ஒன்று 400 கிராமில் இருந்து 650 கிராம் வரை எடை கிடைத்து வந் தது. தற்போது 200 கிராமில் இருந்து 400  கிராம் என எடை சுருங்கி விட்டது. காய்ப்பு இழந்தும், எடை குறைந்தும் விட்டதால் விலை உயர்வு ஏற்பட்டது. எனினும் விவசாயிகளுக்கு பயன் இல் லாமல் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இது குறித்து தமிழ்நாடு விவசாயி கள் சங்க மாவட்டத் தலைவர் எஸ்.ஆர். மதுசூதனன் கூறியதாவது: வெள்ளை  ஈக்களைக் கட்டுப்படுத்த தோட்டக்க லைத் துறையும் ஒன்றிய அரசின் தென்னை வளர்ச்சி வாரியமும் பரிந்து ரைத்த வேப்ப எண்ணெய் தெளிப்பது பலனளிக்கவில்லை. வேப்ப மரங்களே ரூகோஸ் வெள்ளை ஈ தாக்குதலுக்கு உட்பட்டு பாதிக்கப்பட்டிருப்பதைப் பர வலாக காண முடிகிறது.  தென்னை மரங்கள் பொலிவிழந்து காட்சி தருகின்றன. தென்னை ஓலையில்  இருந்து தடுக்குப் பின்னுதல், சீமார் புல்  உரித்து எடுத்தல் உள்ளிட்டவை மேற் கொண்டு பயனற்றதாக மாறி வருகி றது.  வேப்ப எண்ணெய் தெளிக்க செலவு  அதிகமாகிறது இதற்கு வெள்ளை ஈக்க ளும் கட்டுப்படவில்லை. விவசாயிகள்  பலர் வெள்ளை ஈக்களைக் கட்டுப்ப டுத்த வேர் மூலம் மேனோகிரப்டோ பாஸ், காண்டாப் உட்பட பூச்சி மருந்து கள் அதிகமாக பயன்படுத்துகின்றனர். இதனால் இயற்கையான முறையில் விவசாயம் செய்யும் விவசாயிகளுக்கு பாதிப்பை உருவாக்குகிறது. ரசாயன மருந்துக்களைப் பயன்படுத்தும் விவ சாயிகள் பயனடைந்து வந்தனர். தற் போது அதுவும் பயனளிக்காமல் வெள்ளை ஈக்கள் பல்கி பெருகி யுள்ளன.  ஒன்றிய அரசின் நிறுவனமான தென்னை வளர்ச்சி வாரியம் வெள்ளை  ஈக்களைக் கட்டுப்படுத்த உரிய ஆய்வு களை மேற்கொள்வதாகத் தெரிய வில்லை.

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள  திருமூர்த்தி நகரில் 120 ஏக்கர் பரப்பள வில் தென்னை வளர்ச்சி வாரியம் அமைத்துள்ளது. இந்த அலுவலக வளா கத்தில் வளர்த்துள்ள தென்னை மரங்க ளிலேயே வெள்ளை ஈ நோய் தாக்கு தல் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் வெள்ளை ஈ தாக்குத லோடு தென்னை மரங்கள் நோய் எதிர்ப்பு சக்தியை இழந்துள்ள நிலை யில் நோய் எதிர்ப்பு சக்தியை உயர்த்த வேண்டும். உரிய அளவில் உர மேலாண்மை செய்யவும் தென்னை பயிர் செய்துள்ள விவசாயிகளின் வாழ் வாதாரம் பாதுகாக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். குறிப்பாக, 70 சதவீதத்திற்கு மேல்  காய்ப்பிழந்துள்ள நிலையில் தென்னை விவசாயிகளுக்கும் முழுமையான மானியத்தில் நுண்ணூட்ட சத்துக் கள் அடங்கிய உரங்கள் போதுமான அளவு மானிய விலையில் வழங்க வேண்டும். தென்னை பயிர் செய்துள்ள பகுதிகளில் விவசாயிகள் செலவை குறைக்க, 10:26:26 காம்ப்ளக்ஸ் கிடைக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.  வெள்ளை ஈயை கட்டுப்படுத்த ஒருங்கிணைந்த பயிர் பாதுகாப்பு செய்ய விவசாயிகளுக்கு பயிற்சியும், உதவியும் அளிக்க வேண்டும்  தடை செய்யப்பட்ட மோனோகிரடோபாஸ் விற்பனை செய்வதை தடை செய்ய வேண்டும். பூச்சிக்கொல்லி மருந்துகள் அதிகமாக பயன்படுத்துவதையும், களைக் கொல்லி மருந்துளையும் பயன்படுத்துவதையும் தடுக்க வேண் டும். தமிழ்நாடு அரசின் தோட்டக்க லைத் துறை மற்றும் ஒன்றிய அரசின் வளர்ச்சி வாரியம் இணைந்து வெள்ளை  ஈயை கட்டுப்படுத்த துரிதமாக ஆய்வு கள் மேற்கொள்ள வேண்டும் என்றும் எஸ்.ஆர்.மதுசூதனன் கேட்டுக் கொண் டுள்ளார்.