உடுமலை, டிச.16- குடிமங்கலம் ஒன்றியத்தில் 20 மேற்பட்ட தடுப்பணைகள் கட்டுவதில் முறைகேடுகள் நடைபெறுகிறது என்று உடுமலையில் வெள்ளியன்று நடை பெற்ற கோட்ட அளவிலான விவசாயி கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் விவ சாயிகள் குற்றஞ்சாட்டினர். உடுமலை, வருவாய் கோட்டாட் சியர் ஜஸ்வந்த் கண்ணன் தலைமையில் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் வெள்ளியன்று கோட்டாட்சியர் அலுவ லக கூட்டரங்கில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் உடுமலை வட்டாட்சியர், வருவாய்த்துறையினர், வேளாண் துறை, பொதுப்பணித்துறை உட்பட பல் வேறு துறை அதிகாரிகள், அலுவலர் கள் மற்றும் விவசாயிகள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் கலந்து கொண்ட விவசாயிகள் பேசியதாவது. மௌனகுருசாமி: சென்ற விவசாய குறை தீர்க்கும் கூட்டத்தில் பெறப்பட்ட மனுக்களுக்கு, தீர்வு காணப்பட் டுள்ளது என்பதை தெரிவிப்பதுடன், பெறப்படும் மனுக்களுக்குத் தீர்வு காணும் வகையில், துறையின் அதி காரிகள் முழுமையாக கூட்டத்தில் பங் கேற்க உரிய நடவடிக்கையை கோட் டாட்சியர் எடுக்க வேண்டும். பி.எம் கிஷான் திட்டத்தில் நிதி, விவசாயிக ளுக்குக் கிடைக்க தீர்வு காண வேண் டும். பெரியகோட்டை ஊராட்சியில், பழனி இணைப்புச் சாலையில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி பழுத டைந்த சாலையை பராமரிக்க நடவ டிக்கை எடுக்க வேண்டும். உடுமலை உழவர் சந்தையில் போதிய இடவசதி செய்து தரவேண்டும், ராஜேந்திரா சாலையின் இருபுறமும் வாகனங் களை நிறுத்துவதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.எனவே அதனை சரிசெய்ய நடவடிக்கை எடுக்க வேண் டும் என்றார். கோபால்: ஜல்லிபட்டி அரசு பள்ளி அருகே உள்ள பள்ளி மற்றும் அரசுக்குச் சொந்தமான நிலங்கள் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு வருகிறது. அதுகுறித்து உடனடி ஆய்வு செய்து அரசு நிலத்தை மீட்க வேண்டும்.
உடுக்கம்பாளையம் பரமசிவம்: பிஏபி மூன்றாம் மண்டல பாசனத்திற் காக விரைவில் தண்ணீர் திறக்கப்பட உள்ள நிலையில் அனைத்து வேளாண் கூட்டுறவு சங்கங்களில் உரங்களை போதிய இருப்பு வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். விவசாயிகளின் பல ஆண்டு கோரிக்கையான ஜம்பு கள் மலையில் அரசு ஆவணங்களின் படி ஆக்கிரமிப்புகளை அகற்றிட உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் வாளவாடி பெருமாள் கோவில் நிலங் களை முறைப்படி ஏலம் விட்டு வரு வாயை உயர்த்த அறநிலையதுறையி னர் உரிய நடவடிக்கை எடுக்க வேண் டும். வனவிலங்குகளால் விவசாயிகள் பாதிப்படைந்து வரும் நிலையில் வனத் துறையினர், விவசாயிகள் பங்கேற்கும் கூட்டம் நடத்துவது குறித்து உறுதி செய்ய வேண்டும். நான்கு வழிச்சாலை பணிகளுக்காக அமராவதி பகுதியில் மண் எடுக்க வழங்கப்பட்டிருந்த அனு மதி காலம் நிறைவு பெற்றும், தொடர்ந்து நாள்தோறும் பல லோடு மண் எடுக்கப் பட்டு வருகிறது. இதுகுறித்து உடனடி நட வடிக்கை எடுக்க வேண்டும் என்றார். நீரா பெரியசாமி: குடிமங்கலம் ஒன்றி யத்தில் 20 மேற்பட்ட இடங்களில் தடுப் பணைகள் கட்டப்பட்டு வருகிறது. தடுப் பணைகள் கட்டுவதில் பல்வேறு முறை கேடுகள் நடைபெறுகிறது. விவசாயிக ளுக்கு இந்த தடுப்பணைகள் பயன்படு கிறதா, ஒதுக்கப்பட்ட நிதி முழுவதும் பயன்படுத்திக் கட்டப்பட்டுள்ளதா என் பதை கோட்டாட்சியர் ஆய்வு செய்து தவறு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் குடிமங்க லம் ஒன்றியம், பெரியபட்டி கிராமத்தில் விவசாய நிலம் ஆக்கிரமிப்பு செய்யப் பட்டுள்ளது. ஆக்கிரமிப்பினை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என் றார்.
ஶ்ரீதர்: குடிமங்கலம் ஒன்றியம், விரு கல்பட்டியில் இயங்கி வரும் அரசு நியா யவிலைக்கடை கட்டி பல வருடங்கள் ஆனநிலையில் மிகவும் பழுதடைந்துள் ளது. எனவே புதிய கட்டிடம் கட்டித் தர வேண்டும். மேலும் ஒன்றிய பகுதியில் சிறு, குறு விவசாயிகள் சூரியசக்தி மின் உற்பத்தி செய்து பயன்படுத்துவதில் ஆர்வமாக உள்ள நிலையில், இங்குள்ள விவசாயிகளைப் புறக்க ணிக்கும் வகையில் வேளாண்மை பொறியியல்துறை செயல்பட்டு வரு கிறது. கள அலுவலர் யார் என்பதே தெரி யவில்லை. மேலும் கலைஞர் கிராமம் புற வேளாண் வளர்ச்சி திட்டத்திலும், கிராமங்களிலுள்ள விவசாயிகளுக்கு பொறியியல் துறை செயல்படுத்தப்ப டும் திட்டங்கள் தெரிவதில்லை. மானிய திட்ட பயனாளிகள் பட்டியலை வெளி யிடச் சம்பந்தப்பட்ட துறையினர் நடவ டிக்கை எடுக்க வேண்டும் என்றார். இதையடுத்து வருவாய் கோட் டாட்சியர் விவசாயிகளின் மனுக்க ளுக்கு, விரைவாக துறைரீதியான நட வடிக்கை எடுக்கப்படும், என்றார்.