நாமக்கல், ஏப்.25- கோடை வெப்பத்தால் திருமணிமுத்தாறு வறண்டு காணப்படுவதால், அப்பகுதி விவ சாயிகள் கவலை அடைந்துள்ளனர். தமிழ்நாட்டில் தொடர்ந்து அதிகரித்து வரும் வெயிலின் தாக்கத்தால், பொதுமக்க ளின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக் கப்பட்டுள்ளது. இந்நிலையில் நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு அருகே பாயும் திருமணிமுத்தாற்றில் தண்ணீர் வற்றி, ஆற் றுப்படுகையில் வசிக்கும் விவசாயிகள் விவ சாயம் செய்ய முடியாமல் தவித்து வருகின்ற னர். தற்சமயம், நாடு முழுவதும் நாளுக்கு நாள் வெயிலின் தாக்கம் 104 டிகிரிக்கும் அதிக மாக அதிகரித்த வண்ணம் உள்ளது. சேலம் மாவட்டம், ஏற்காடு மலையில் உற்பத்தியாகி, சேலம், ஆட்டையாம்பட்டி, மாமுண்டி, ஆத்துமேடு, கருங்கல்பட்டி, சோமணம்பட்டி, கொன்னையார், இலுப்புலி, மாணிக்கம்பா ளையம் வழியாக இறுதியில் நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் காவிரியாற்றில் கலக்கும் திருமணிமுத்தாற்றில் தற்சமயம் தண்ணீர் முழுவதுமாக வற்றி காணப்படுகின் றது. மழைக்காலங்களில் திருமணிமுத்தாறு தண்ணீர் வரத்து அதிகரித்து ரம்மியமாக காணப்படும். அச்சமயங்களில், சுற்றியுள்ள விவசாயக் கிணறுகள், குளம், குட்டைகளில் ஊற்று மூலமாக தண்ணீர் அதிகரித்து காணப் படும். மேலும், ஆற்றுப்படுக்கையில் வசிக்கும் ஆயிரக்கணக்கான ஏக்கர் விவசாய நிலங்க ளில் நெல், பருத்தி, சோளம், மக்காச்சோளம், கரும்பு உள்ளிட்ட பல்வேறு பயிர்களை விவ சாயிகள் விளைவித்து லாபம் ஈட்டி வந்த னர். தற்சமயம், கோடை வெப்பத்தின் ருத்ர தாண்டவத்தால் திருமணிமுத்தாற்றில் தண் ணீரின்றி வறண்டு, பாலைவனம் போல் காட்சி யளிக்கின்றது. இதனால் விவசாயம் செய்ய முடியாமல் விவசாயிகள் விழிபிதுங்கியுள்ள னர்.