districts

img

பயிர் சேதம்: நிவாரணம் கேட்டு ஆட்சியரிடம் விவசாயி முறையீடு

தருமபுரி, நவ.29- மழை நீரால் சேதம டைந்த பயிருக்கு நிவாரணம் கேட்டு ‌விவசாயி ஒருவர் குடும்பத்துடன் தருமபுரி ஆட் சியரிடம் மனு அளித்தார்.  தருமபுரி மாவட்டம், பூகானஅள்ளி அருகேவுள்ள எர்ரப்பட்டி கிராமத்தை சேர்ந்த விவசாயி வேங்கன். இவரது கிராமத்தில் உள்ள  ஏரியானது சமீபத்தில் பெய்த மழையால் நிரம்பியது.  இந்த  ஏரியின் உபரிநீரானது விளைநிலத்தில் புகுந்தது. இதனால், பருத்தி, நெல் உள்ளிட்ட பயிர்களில் தேவைக்கு அதிகமாக தண்ணீர் தேங்கியிருப்பதால், பயிர்கள் அழுகியது.  இதே போன்று அப்பகுதியில் உள்ள பலரது விவசாய நிலத் தில் தண்ணீர் புகுந்ததால் பயிர் சேதமடைந்துள்ளது. கடந்த காலங்களில் ஏரி நிரம்பும் போது பாதுகாப்பு கருதி அளவுக் கதிமாக வரக்கூடிய உபநீரை ஏரியின் மதகு வழியாக மட் டுமே திறந்து விடப்பட்டது., அரசு ஆவணத்திலும் கிராம வரைப்படத்திலுமே ஏரியின் மதகு வழியாக தான்  உபரி நீர் வெளியேற்றயப்பட்டிருப்பதாக  ஆவணங்களில் குறிப்பிடப் பட்டிருக்கிறது. ஏற்கனவே இருந்ததை போல மதகு வழியாக உபநீர் வெளியேற்றப்பட்டிருந்தால் விளைநிலம் பாதித்திருக் காது. எனவே பாதிக்க்கப்பட்டிருக்கும் பயிர்களுக்கு உரிய இழப்பீடும், தங்களது விளை நிலம் எந்த வகையிலும் பாதிக் காத வகையில், ஏரியின் மதகு வழியாக  உபநீரை வெளியேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி ஆட்சியர் அலுவலகத்தி்ல் மனு அளித்தார்.