districts

img

23ஆவது மாநாடு செங்கொடி நாள்: திருப்பூரில் உற்சாக கொடியேற்றம்

திருப்பூர், மார்ச் 23- இந்திய விடுதலைப் போராட்டத்தின் மகத்தான தியாகிகள் பகத்சிங், ராஜ குரு, சுகதேவ் ஆகியோரின் தியாகத் திருநாளான மார்ச் 23ஆம் தேதி, மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 23ஆவது தமிழ் மாநில மாநாட்டு செய்தியை மக்க ளிடம் கொண்டு சேர்க்கும் வகையில் திருப்பூர் மாவட்டத்தில் பல்வேறு பகு திகளில் செங்கொடி ஏற்றப்பட்டது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திருப்பூர் மாவட்ட அலுவலகமான தியாகி பழனிசாமி நிலையத்தின் முன் பாக புதனன்று நடைபெற்ற கொடி நாள்  நிகழ்வுக்கு வடக்கு மாநகரக்குழு உறுப்பினர் பா.சௌந்தரராசன் தலைமை வகித்தார். இதில் கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் கே. உண்ணிகிருஷ்ணன் செங்கொடியை ஏற்றி வைத்தார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் எஸ்.சுப்ரமணியன் உள் பட கட்சி அணியினர் கலந்து கொண்டு  எழுச்சி முழக்கம் எழுப்பினர். அதேபோல் திருப்பூர் தெற்கு ஒன்றி யம் இடுவாய் ஊராட்சியில் மாநில மாநாட்டை குறிக்கும் வகையில் 23  செங்கொடிகள் ஏற்றி கொண்டாடப் பட்டது. இந்நிகழ்ச்சியில் இடுவாய் மார்க்சிஸ்ட் கட்சி வடக்கு கிளை செய லாளர் கருப்புசாமி தலைமை வகித் தார்.

இடுவாய் ஊராட்சி மன்ற தலைவர் கே.கணேசன், தெற்கு ஒன்றிய குழு  செயலாளர் சி.மூர்த்தி ஆகியோர் கலந்து கொண்டு பகத்சிங் தியாகம் மற் றும் கட்சியின் 23ஆவது மாநில மாநாட் டுச் செய்தி குறித்து உரையாற்றினர்.  இந்த நிகழ்ச்சியில் பெருந்திரளானோர் கலந்து கொண்டனர்.  தெற்கு மாநகரக்குழு அலுவலக மான பி.ஆர்.நிலையம் முன்பாகவும் தியாகி பகத்சிங் உருவப்படம் வைக் கப்பட்டு மலர் அஞ்சலி செலுத்தப்பட் டது. கட்சியின் செங்கொடி ஏற்றி வைக் கப்பட்டது. இதில் தெற்கு மாநகரச் செயலாளர் டி.ஜெயபால், ஒன்றியச் செயலாளர் சி.மூர்த்தி, மாநகரக்குழு உறுப்பினர் பி.பாலன் உள்பட கட்சி அணியினர் கலந்து கொண்டனர்.  காங் கேயம் பேருந்து நிலையம் அருகில் போக்குவரத்து ஊழியர் சங்க ஈரோடு மண்டல பொருளாளர் நாச்சிமுத்து  தலைமையில் கட்சியின் மாவட்டக் குழு உறுப்பினர் கே.திருவேங்கட சாமி, ஒன்றியக்குழு உறுப்பினர்கள் குமாரசாமி, கணேசன், தங்கவேல் மற் றும் போக்குவரத்து ஊழியர் சங்கத் தைச் சேர்ந்த வின்சென்ட், மின் ஊழியர் அமைப்பின் சுந்தரம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். திருப்பூர் மாவட் டத்தின் பல்வேறு பகுதிகளிலும் கிளை களில் செங்கொடி ஏற்றி எழுச்சியுடன் கடைப்பிடிக்கப்பட்டது.