districts

img

ஈரோடு புத்தகத் திருவிழா இன்று தொடக்கம்

ஈரோடு, ஆக. 3- ஈரோடு மாவட்ட நிர்வாகம் மற்றும் மக்கள் சிந்தனைப் பேரவை இணைந்து நடத்தும் ஈரோடு  புத்தகத் திருவிழா இன்று (வெள்ளி)  தொடங்குகிறது. இதுதொடர்பான ஒருங்கி ணைப்பு கூட்டம் ஈரோடு மாவட்ட  ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில்  மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால்  சுன்கரா தலைமையில் நடை பெற்றது. இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் தெரிவித்ததாவது, ஈரோடு மாவட்ட நிர்வாகம் மற்றும்  மக்கள் சிந்தனைப் பேரவை இணைந்து நடத்தும் ஈரோடு புத்தகத் திருவிழா ஈரோடு சி.என்.சி  கல்லூரி மைதானத்தில் ஆக.4 ஆம்  முதல் 15ஆம் தேதி வரை 12 நாட் கள் நடைபெறுகிறது. நாள்தோறும் காலை 11 மணி முதல் இரவு 9.30 மணி வரை புத்தக கண்காட்சி நடைபெறும். இங்கு 230-க்கும் மேற்பட்ட தமிழ் மற்றும் ஆங்கில புத்தக அரங்குகள் இடம் பெற் றுள்ளது. வெளிநாடுகள் மற்றும் பிறமாநிலங்களிலிருந்தும் ஆங்கில நூல் பதிப்பாளர்கள் வர  உள்ளனர்.  தினந்தோறும் மாலை 6  மணிளவில் சொற்பொழிவு நிகழ்வு களும், புத்தக சேமிப்பு உண்டியல்,  நூல் ஆர்வலர் சான்றிதழ் போன்ற  மாணவர்கள் வாசிப்பு ஆர்வத்தை  தூண்டும் பல சிறப்பு திட்டங்கள்  நடைபெற உள்ளது. மேலும், பொது மக்கள் புத்தக கண்காட்சிக்கு வரு வதற்காக, போக்குவரத்து வசதி  மற்றும் காவல்துறை மூலம் பாது காப்பு வசதி மற்றும் மருத்துவ வசதி ஆகியவை ஏற்பாடு செய்யப் பட்டுள்ளது. இந்த புத்தக திருவிழா விற்கு பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவியர்கள் மற்றும் பொதுமக்கள் உட்பட அனைவரும் அதிக அளவில் கலந்து கொண்டு தங்களது வாசிப்பு திறனை மென்மேலும் அதிகரித்துக் கொள்ள வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன் என்றார்.  இக்கூட்டத்தில், மாவட்ட ஆட்சி யரின் நேர்முக உதவியாளர் (பொ)  கணேஷ், உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) சூர்யா, உதவி ஆட்சியர் (பயிற்சி) காயத்ரி, மக்கள்  சிந்தனை பேரவை ஸ்டாலின் குண சேகரன் மற்றும் அரசு அலுவலர் கள் உட்பட பலர் கலந்து கொண் டனர்.