districts

கோயம்புத்தூர் முக்கிய செய்திகள்

சீராக குடிநீரை விநியோகம் செய்திடுக

உதகை, மே 3- லவ்டேல் கெரடா லைன் பகுதியில் இரண்டு மாதங்க ளாக முறையாக குடிநீர் விநியோகம் இல்லை என்ப தால், மக்கபெரும் அவதிக்குள்ளாவதாகவும், முறையான  குடிநீர் வசதியை செய்து தர வேண்டும் என இப்பகுதி  மக்கள் வலியுறுத்துகின்றனர். உதகை நகராட்சி 36 ஆவது வார்டு லவ்டேல் கெரடா  லைனில் 200க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின் றனர். இந்நிலையில் கடந்த இரண்டு மாதங்களாக குடிநீர் வினியோகம் இல்லை.  இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் மற்றும்  நகராட்சி நிர்வாகத்திடம் பலமுறை புகார் தெரிவித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் அதிருப்தி  அடைந்த கிராம மக்கள் வியாழன்று காலி குடங்களுடன் லவ்டேல் காவல் நிலைத்தின் எதிரே உள்ள சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். பின்பு போலீசார் பேச்சு வார்த்தை நடத்தி சமாதானப்படுத்தினர்.  இச்சம்பவத்தால் உதகை - மஞ்சூர்  சாலையில் அரை மணி  நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

பழுதடையும் ஆழ்குழாய் மோட்டார்: சீரமைக்க சிபிஎம் வலியுறுத்தல்

திருப்பூர், மே 3 - கோடைக் காலத்தில் அடிக்கடி  பழுதாகும் ஆழ்துளை மோட்டார்க ளில் தரமான பாகங்களைக் கொண்டு சரி செய்து தண்ணீர் வழங்க மார்க்சிஸ்ட் கட்சி கோரி யுள்ளது. திருப்பூர் மாநகராட்சி 14 ஆவது  வார்டுக்கு உட்பட்ட நேதாஜி நகரில் அங்கன் வாடி மையத்துக்கு அருகில் உள்ள ஆழ்துளை மோட் டார் அடிக்கடி பழுதாகி விடுவ தால், இப்பகுதியில் உள்ள சுமார் 17  தெருக் குழாய்களில் தண்ணீர் வரு வதில்லை. இந்த ஆழ்துளைக் கிணற்று நீரை மக்கள் அன்றாடம் பயன்ப டுத்தி வரும் நிலையில், 10 நாட்க ளுக்கு ஒருமுறை பழுதாகி, மீண் டும் சரி செய்துவரும் வரை, வாட்டி யெடுக்கும் வெப்பத்துக்குத் தாக் குப் பிடிக்க முடியாமல் மக்கள் பரி தவிக்கின்றனர். எனவே, மின் மோட்டார் அடிக் கடி பழுதாகாமல் இருக்க, தரமான  உதிரி பாகங்களைக் கொண்டு சரி செய்து மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என்று வலியுறுத்தி, செவ்வாயன்று மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நேதாஜி நகர் கிளையின் சார்பில் பொது மக்களிடம் கையெழுத்துப் பெற்று, முதலாம் மண்டல உதவி  ஆணையரிடம் மனு அளிக்கப்பட் டது. இந்நிழ்ச்சியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வேலம்பா ளையம் நகரச் செயலாளர் ச.நந்த கோபால், நகரக் குழு உறுப்பினர் ஆர்.சுகுமார், கிளைச் செயலாளர் பி.பாபு ஆகியோர் கலந்து கொண் டனர். மின் மோட்டார் மூலம் உறிஞசல் காங்கயம் ஊராட்சி ஒன்றியத் துக்குட்பட்ட நத்தக்காடையூர் ஊராட்சியில் 7 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு காவிரி கூட்டு குடிநீர் திட்டத்தின் மூலம் அனைத்து பகுதிக்கும் குடி நீர் விநியோகிக்கப்பட்டு வருகி றது. மேலும் ஆங்காங்கே ஆழ்குழா யில் இருந்து தண்ணீர் எடுத்து விநி யோகம் செய்யப்படுகிறது. பல் வேறு இடங்களில் பொதுமக்கள் பயன்பாட்டுக்காக, ஊராட்சி மூலம்  பொது குடிநீர் குழாய்கள் அமைக் கப்பட்டுள்ளன. குடிநீர் வரும்போது பெரும்பா லான வீடுகள் மற்றும் சில வர்த் தக நிறுவனங்களில், மின் மோட் டாரை பொருத்தி குடிநீரை உறிஞ்சு கின்றனர். இதனால் பொது குழாய் களை நம்பி உள்ள சாமானிய மக்க ளுக்கு, குடிநீர் சரிவர கிடைப்ப தில்லை. இந்நிலையில், பொது குழாய்களை மட்டுமே குடிநீருக்கு சார்ந்திருக்கும் மக்கள் நலன் கருதி, மின் மோட்டார் பொருத்தி  உறிஞ்சுபவர்களை கண்டறிந்து, நடவடிக்கை எடுக்க நத்தக்கா டையூர் ஊராட்சி நிர்வாகம் முன் வர  வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கண்காணிப்பு கேமராக்கள் இயங்கவில்லையா? கள ஆய்வு அறிக்கை தர ஆட்சியர் உத்தரவு

ஈரோடு, மே 3- வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள கட்டுப்பாட்டு அறையில் தொடர்ந்து கண்காணிப்பு கேமராக்கள் பழுதடைந்து வருவதால், கண்காணிப்பு இணைப்புகளை கள ஆய்வு செய்து அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என ஒப்பந்ததாரருக்கு ஈரோடு மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா உத்தரவிட்டுள்ளார்.  ஈரோடு நாடாளுமன்ற தொகுதிக் கான 6 சட்டமன்ற தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு இயந்திரங்கள் சித்தோடு  அரசு பொறியியல் கல்லூரியில் வைக் கப்பட்டுள்ளது. இவற்றின் பாதுகாப் பிற்காக 3 அடுக்கு காவல் போடப் பட்டுள்ளது. மேலும் கண்காணிப்பு கேம ராக்கள் அமைக்கப்பட்டு கண்காணிக் கப்பட்டு வருகிறது. இந்நிலையில்  கடந்த ஏப்.28 ஆம் தேதியன்று நள்ளி ரவு அரை மணி நேரமும், செவ்வாயன்று  காலையிலும் கட்டுப்பாட்டு அறை யில் உள்ள திரையில் கண்காணிப்பு  கேமராக்களின் காட்சிகள் தெரிய வில்லை.  இது குறித்து மாவட்ட தேர்தல் அலு வலரும் மாவட்ட ஆட்சியருமான ராஜ கோபால் சுன்கரா விடுத்த செய்தி குறிப் பில், கண்காணிப்பு கேமராக்களின் கட் டுப்பாட்டு அறை அட்மின் பிளாக்கில் செயல்பட்டு வருகிறது. கட்டுப்பாட்டு அறையில் வேட்பாளர்கள் பிரநிதிகள் மற்றும் அரசு அலுவலர்களும் 24  நேரமும் சுழற்சி முறையில் கண்கா ணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நி லையில், ஞாயிறன்று காலை சுமார்  7 மணி அளவில் கட்டுப்பாட்டு அறை யில் குமாரபாளையம் சட்டமன்ற தொகு திக்குட்பட்ட சிசிடிவி பதிவுகள் தெரி யவில்லை. இது தொடர்பாக வேட்பா ளர் பிரநிதிகளுடன் ஆய்வு செய்த தில் இருப்பு அறையில் உள்ள கண்கா ணிப்பு கேமராக்கள் பழுதேதும் இல்லா மல் செயல்பட்டு வந்தது தெரிய வந்தது. இருப்பு அறையின் வெளியே வைக்கப்பட்டிருந்த தொலைக்காட்சி சாதனத்தில் சிசிடிவி காட்சிப்பதிவுகள் இருந்துள்ளதும், இருப்பு அறையில் இருந்து அட்மின் பிளாக்கில் உள்ள கட்டுப்பாட்டு அறைக்கு வரும் கண் காணிப்பு கேமராவின் கம்பி இணைப் பில் பழுது ஏற்பட்டதால் கட்டுப்பாட்டு அறையில் கண்காணிப்பு பதிவுகள் தெரியவில்லை என்பதும் கண்டறியப் பட்டு 9 மணியளவில் சரி செய்யப்பட் டது. இதுகுறித்த விவரங்களை வேட் பாளர்களின் பிரநிதிகளுக்கு விளக்கப் பட்டது. மேலும், நியமனம் செய்யப்பட்ட ஒப்பந்ததாரருக்கு மீண்டும் காண்கா ணிப்பு இணைப்புகளை கள ஆய்வு செய்து அறிக்கை சமர்ப்பிக்கவும், இனி  வருங்காலங்களில் இதுபோன்ற தவறு கள் நிகழாவண்ணம் இருக்கவும் உரிய அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளார்.

நீரேற்று நிலையத்தில் ஆட்சியர் திடீர் ஆய்வு

நாமக்கல், மே 3- நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம் 33 வார்டுகளை கொண்ட முதல் நிலை நகராட்சி பகுதியாகும். இந்த நகராட்சி  பகுதியில் சுமார் 85 ஆயிரம் பொதுமக்கள் வசித்து வரு கின்றனர். மொத்தம் சுமார் 22 ஆயிரத்து 53 குடியிருப் புகள் உள்ளது. இந்த குடியிருப்பு வசிக்கும் பொதுமக்க ளுக்கு குமாரபாளையம் நகராட்சி சார்பில், காவேரி ஆற்றின்  கரையோரம் நீரேற்று நிலையம் அமைத்து, அங்கிருந்து சுத்திகரிக்கப்பட்ட குடிநீரை 71 லட்சத்து 6 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட 8 மேல்நிலைத் தொட்டிகள் மூலம் நாள்தோறும் நபருக்கு 90 லிட்டர் வீதம் குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. தற்பொழுது காவிரியாற்றில் நீர்வ ரத்து குறைந்து வறண்டு காணப்படுவதால், நகராட்சி சார்பில்  பொதுமக்களுக்கு முறையான சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்கப்படுவது குறித்து, மாவட்ட ஆட்சியர் ச.உமா திடீர் ஆய்வு மேற்கொண்டார். கால்வாய் தூர்வாரப்பட்டு குடிநீர்  வசதி ஏற்படுத்தி 25 குதிரை திறன் கொண்ட நீர் மூழ்கி மோட்டார், 60 குதிரை திறன் கொண்ட மோட்டர் வைத்து  குடிநீர் முறையாக சுத்திகரிக்கப்பட்டு, சுமார் 13,98 குடிநீர்  குழாய்கள் மூலமாகவும் 93 பொது குடிநீர் குழாய்கள் மூல மாகவும், பொதுமக்களுக்கு முறையாக குடிநீர் வழங்கப்படு வதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த ஆய்வின்போது, குமாரபாளையம் நகராட்சி ஆணையர் குமரன், பொறி யாளர் ராஜேந்திரன் ஆகியோர் உடனிருந்தனர்.

தரக்குறைவாக நடத்தும் அதிகாரிகள் தூய்மைப் பணியாளர்கள் ஆட்சியரிடம் மனு

கோவை, மே.3- இழிவாகப் பேசி அடிமை போல் நடத்தும் ஒத்தக்கால் மண்டபம் பேரூராட்சி அதிகாரிகள் மீது நடவடிக்கைக்கு எடுக்க கோரி தூய்மைப் பணியாளர்கள் மாவட்ட ஆட்சிய ரிடம் மனு அளித்தனர். கோவை மாவட்டம், ஒத்தக்கால் மண்டபம் பேரூராட்சி யில் மூன்றாண்டுகள் முதல் 20 ஆண்டுகள் வரை 50க்கும்  மேற்பட்டோர் தூய்மை பணியாளர்களாக வேலை செய்து  வருகின்றனர். இவர்களை ஒத்தக்கால் மண்டபம் பேரூராட்சி யில் பணிபுரியும் அதிகாரிகள் ஒருமையில் பேசி, இழி வாக நடத்துவது வாடிக்கையாக இருந்து வருகிறது. இத னால், ஆவேசமடைந்த தூய்மைப் பணியாளர்கள் தங்களை  அடிமை போல் நடத்தி வரும் அதிகாரிகள் மீது உரிய நடவ டிக்கை எடுக்க வேண்டும். பகுதிநேர வேலை அளிக்கப்பட வேண்டும். பணி நிரந்தரம் ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக் களை நிறைவேற்ற வேண்டும். அதிகப்படியாக வேலை வாங்குவது குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன  உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மாவட்ட ஆட்சிய ரிடம் மனு அளித்தனர். முன்னதாக, சிஐடியு மாவட்ட ஊரக வளர்ச்சித் துறை ஊழி யர் சங்க மாவட்டச் செயலாளர் ரத்தினகுமார் தலைமை யில் ஏராளமான தூய்மைப் பணியாளர்கள் ஒன்றிணைந்து மனுவாக அளித்தனர்.

நான்கு மாவட்ட குடிநீர் பிரச்சனை:  அதிகாரிகள் ஆலோசனை

திருப்பூர், மே 3- மேட்டுப்பாளையம் நகராட்சி அலுவலக கூட்டரங்கில் வியாழனன்று திருப்பூர், கோவை, நீலகிரி மற்றும் ஈரோடு  ஆகிய மாவட்டத்திற்கு உட்பட்ட மாநகராட்சிகள், நகராட்சி கள் மற்றும் பேரூராட்சி பகுதிகளில் பொதுமக்களுக்கு தங்கு  தடையின்றி குடிநீர் விநியோகம் செய்வது தொடர்பான அலு வலர்களின் ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது.  திருப்பூர் மாநகராட்சி ஆணையாளர் பவன்குமார் ஜி. கிரியப்பனர், கோவை மாநகராட்சி ஆணையாளர் மா.சிவ குரு பிரபாகரன் மற்றும் ஈரோடு மாநகராட்சி ஆணையாளர் வ.சிவகிருஷ்ணமூர்த்தி ஆகியோர் முன்னிலையில், நக ராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை முதன்மைச்  செயலாளர் தா.கார்த்திகேயன் தலைமையில் இக்கூட்டம் நடைபெற்றது. திருப்பூர் மாவட்டத்திற்கு உட்பட்ட மாநக ராட்சி, 5 நகராட்சிகள், 15 பேரூராட்சிகள், கோவை மாவட்டத் திற்கு உட்பட்ட மாநகராட்சி, 7 நகராட்சிகள், 33 பேரூராட்சி கள், நீலகிரி மாவட்டத்திற்கு உட்பட்ட 1 நகராட்சி, 11 பேரூராட்சி கள், மற்றும் ஈரோடு மாவட்டத்திற்குட்பட்ட மாநகராட்சி, 4 நக ராட்சிகள் மற்றும் 42 பேரூராட்சிகள் ஆகிய பகுதிகளில் பொது மக்களுக்கு வழங்கப்படும் குடிநீர் விநியோகம் குறித்து விரி வாக ஆய்வு மேற்கொண்டு, பொதுமக்களுக்கு தங்கு தடை யின்றி குடிநீர் கிடைத்திட அனைத்து துறை அலுவலர்க ளும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என அலுவ லர்களுக்கு முதன்மைச் செயலாளர் கார்த்திகேயன் அறிவுறு த்தினார். தொடர்ந்து, இப்பகுதிக்கான அணைகளின் நீர்மட்டம், நீர்  இருப்பு மற்றும் நீர் வெளியேற்றம் குறித்தும் ஆய்வு மேற் கொண்டார். மேலும், புதிதாக ஆழ்குழாய் அமைக்கவும், பழு தடைந்த ஆழ்குழாய் கிணறுகளை சரி செய்யவும், பொது மக்கள் பயன்பெறும் வகையில் தேவையான இடங்களில் தண்ணீர் பந்தல் கூடுதலாக அமைத்திடவும், ஏற்கெனவே அமைக்கப்பட்டுள்ள தண்ணீர் பந்தல்களை முறையாக கண்காணித்திடவும், தண்ணீர் பந்தல்களை சுகாதாரமாக வைத்திடவும், கோடை வெயிலின் தாக்கம் குறித்து மக்க ளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் எனவும் அறிவு றுத்தினார்.

போலீஸ் பாதுகாப்பிற்காக முஸ்லீம் நபர் மீது பொய் புகார்

கோவை, மே 3- தனக்கு தனிபட்ட போலீஸ் பாதுகாப்பு வேண் டும் என்பதற்காக மீன்கடை நடத்தி வரும் அசா ருதீன் என்பவர் மீது பொய் புகார் அளித்த இந்து  முன்னணி நிர்வாகி சூரிய பிரசாத் என்பவரை செல்வபுரம் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். கோவை, செல்வபுரம் பகுதியைச் சேர்ந்தவர் சூர்ய பிரசாத். இவர், இந்து முன்னணியின் செல்வ புரம் நகரத் தலைவராக இருந்து வருகிறார். இவர் தனக்கு அச்சுறுத்தல் இருப்பதால் தனிப்பட்ட போலீஸ் பாதுகாப்பு வழங்க வேண்டும் என கோவை மாநகர காவல் துறையில் கேட்டிருந்தார்.  ஆனால் அவருக்கு தனிப்பட்ட பாதுகாப்பு வழங் கப்படவில்லை. இந்நிலையில், கடந்த 30 ஆம் தேதி இரவு செல்வபுரம் வடக்கு அடுக்குமாடி குடியி ருப்பைச் சேர்ந்த மீன் கடை நடத்தி வரும் அசா ருதீன் என்பவரை மிரட்டி, தன்னை செல்போனில் படம் எடுத்ததாகக் கூறி, போலீஸில் ஒப்படைத் தார். மேலும், தனது உயிருக்கு அச்சுறுத்தல் இருப் பதாக போலீசாரிடம் தெரிவித்தார். செல்வபுரம் போலீசார் அந்த செல்போனை ஆய்வு செய்த போது, அந்த செல்போனில் புகைப்படங்கள் ஏதும் இல்லாமல் இருந்தது தெரியவந்தது. இத னையடுத்து அந்த செல்போனை சைபர் தடய வியல் துறையினருக்கு சோதனைக்கு போலீசார் அனுப்பினர். அதை சோதித்த தடயவியல் துறை அதிகாரிகள் அந்த செல்போனில் இருந்து புகைப் படம் மற்றும் வீடியோ காட்சிகள் எதுவும் டெலிட் செய்யப்படவில்லை என்பதை உறுதி செய்தனர். இதனையடுத்து சந்தேகம் அடைந்த செல்வபுரம் போலீசார் சூரிய பிரசாத்திடம் மேற்கொண்ட விசா ரணையில், தனக்கு தனி பாதுகாவலர் வேண்டும் என்பதற்காக அசாருதீனை மிரட்டி செல்போனை பறித்து பொய் புகார் அளித்து இருப்பது தெரிய வந்தது.  இதையடுத்து அசாருதீனிடம் புகாரை பெற்ற செல்வபுரம் போலீசார், அதன் அடிப்படையில் இந்து முன்னணி பிரமுகர் சூர்ய பிரசாத்தை கைது  செய்தனர். அவர் மீது கொலை மிரட்டல், கலகம் செய்ய தூண்டுதல், முறையற்ற தடுப்பு, ஆபாச மாக பேசுதல் உட்பட ஐந்து பிரிவுகளில் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

தேர்தல் பிரச்சாரத்தில் மோடி ஈடுபடுவதை தடை செய்க

கோவை, மே 3- நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு பிரத மர் மோடி பல்வேறு மாநிலங்களுக்கு சென்று  பொதுமக்களிடையே பிரச்சாரம் மேற் கொண்டு வருகிறார். பிரச்சாரத்தின் போது அவர் பேசிய பல்வேறு கருத்துக்களுக்கு காங்கிரஸ் கட்சியினர், இந்தியா கூட்டணி தலைவர்கள் எதிர்ப்புகளை பதிவு செய்து வருகின்றனர். இந்நிலையில் மன்மோகன் சிங் பிரதமராக இருந்தபோது நாட்டின் சொத் துக்களில் முதன்மை உரிமை இஸ்லாமியர்க ளுக்கு தான் உள்ளது என்று சொன்னதாக ராஜஸ்தான் மாநில பிரச்சாரக் கூட்டத்தில் பிரதமர் மோடி திரித்து பேசி வருகிறார். இது மட்டுமின்றி, இஸ்லாமியர்கள் அதிக குழந்தை பெற்றெடுப்பதாகவும், காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் உங்களிடம் உள்ள இரு மாடு களில் ஒன்றை பிடுங்கி மற்றவர்களுக்கு கொடுத்துவிடுவார்கள் எனவும் வெறுப்பை கக்கி வருகிறார். இதுபோன்ற பேச்சுக்கள் சிறுபான்மை மக்களின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் விளை விப்பதாகவும், சமூகத்தில் மத மோதலை தூண்டுவதாகவும், அமைதியை சீர்குலைப் பதாகவும் உள்ளது. எனவே, தேர்தல் ஆணை யம் உடனடியாக இவ்விஷயத்தில் தலை யிட்டு பிரதமர் மோடி தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபடுவதை தடை செய்ய வேண்டும். தேர்த லில் நிற்பதற்கு தகுதி நீக்கம் செய்ய வேண் டும் என வலியுறுத்தி மாவட்ட தேர்தல் அலுவ லர் கிராந்திகுமார் பாடியிடம், இந்திய ஒற் றுமை இயக்கத்தினர் மனு அளித்தனர். இந்த மனு கொடுக்கும் இயக்கத்தில் கோவை மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் நேருதாஸ், பேராசிரியர் காமராஜ், டென்னிஸ் கோவில்பிள்ளை ஆகியோர் உடனிருந்தனர்.

பவானி ஆற்றில் குளிக்கவோ, துணி துவைக்கவோ கூடாது

மே.பாளையம், மே 3- நீர்பிடிப்பு பகுதிகளில் போதிய மழை யின்மை மற்றும் கடும் கோடை வெப்பத்தால் பவானி ஆற்றின் நீரோட்டம் மிகவும் குறை வாக உள்ளது. குறைந்த அளவே உள்ள ஆற்று நீரை நீரேற்று நிலையம் அருகே தற்காலிகமாக தேக்கி தண்ணீரை பம்பிங் செய்து பொது மக்களுக்கு குடிநீராக விநியோ கம் செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில், குடிநீர் தேவைக்காக தேக்கப்படும் ஆற்று  நீரில் இறங்கி குளிப்பதும், துணி துவைக்க வும் செய்கின்றனர். கோடை வெயிலின் தாக் கத்தை குறைக்க பொது மக்கள் ஆற்றில் இறங்கி குளிக்கின்றனர் என்ற போதிலும் இது ஆபத்தை விளைவிக்க கூடியது என்றும், குடி நீர் தேவைக்காக நீரெடுக்கும் இடத்தில் குளிப் பதும் துவைப்பதும் தண்ணீரை அசுத்தப் படுத்தி  சுகாதார சீர்கேட்டை ஏற்படுத்த வாய்ப் புள்ளது எனவும் அதிகாரிகள் தரப்பில் தெரி விக்கப்படுகிறது.  இதனையடுத்து நீரேற்று நிலையம் அருகே மற்றும் பவானி கரையோர பகுதி களில் யாரும் குளிக்கவோ துணி துவைக் கவோ அல்லது வேறு காரணங்களுக்காக ஆற்றினுள் இறங்கக் கூடாது. மீறினால் சட் டப்படி தண்டிக்கப்படுவீர்கள்” என எச்ச ரிக்கை அறிவிப்பு வைக்கப்பட்டுள்ளது. இது வரை மழைக்காலங்களில் ஏற்படும் வெள்ள பெருக்கின் போது இது போன்ற எச்சரிக்கை அறிவிப்புகள் வைக்கப்பட்டு வந்த நிலை யில் தற்போது கோடை காலத்தில்  ஆற்றில் தண்ணீர் வெகுவாக குறைந்து காணப்படும் போது எச்சரிக்கை அறிவிப்பு வைக்கப்பட்டுள் ளது கடும் வறட்சியை உணர்த்தியுள்ளது. 

குற்ற வழக்குப்பதிவு செய்ய வலியுறுத்தி உண்ணாவிரதம்

திருப்பூர், மே 3- திருப்பூர் மாவட்டத்தில் சட்ட விரோ தமாக செயல்பட்டதாக அபராதம் விதித் தும் குற்ற வழக்கு பதிவு செய்யப்படாத கல்குவாரி மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் மாவட்ட ஆட்சியர் அலு வலகம் முன்பாக தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தினர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். திருப்பூர் மாவட்டம், பல்லடம் வட் டத்திற்கு உட்பட்ட கோடங்கி பாளை யம் பகுதியில் தனியார் கல்குவாரி செயல்பட்டு வருகிறது. சட்ட விரோத மாக கனிமவளத்தை கல் குவாரி கொள் ளையடித்து வருவதாக அப்பகுதி விவ சாயிகள் மற்றும் சட்டவிரோத கல் குவாரி எதிர்ப்பு இயக்கத்தினர் பல முறை புகார் மனு அளித்துள்ளனர். மேலும், இந்த கல்குவாரிக்கு எதிராக கடந்த சில மாதங்களுக்கு முன்பு விஜயகுமார் என் பவர் தொடர் உண்ணாவிரதப் போராட் டத்திலும் ஈடுபட்டார். இது தொடர்பாக ஆய்வு மேற்கொண்ட கண்காணிப்புக் குழுவினர், இங்கு அனுமதிக்கப்பட்ட அளவை விட கூடுதலாக கனிம வளம் கொள்ளையடிக்கப்பட்டதாக உறுதிப் படுத்தினர். கல்குவாரிக்கு அபராதம் விதிக்கப்பட்டது. இருப்பினும், அந்த கல்குவாரி உரிமையாளர் மீது குற்ற வழக்குப்பதிவு செய்யாமல் உள்ளது.  இந்நிலையில், உடனடியாக கல் குவாரி உரிமையாளர் மீது குற்ற வழக் குப்பதிவு செய்ய வேண்டும்.  அதற்கு உடந்தையாக இருந்த அலுவலர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியு றுத்தி திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலு வலகம் முன்பாக தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தினர் வியாழனன்று உண்ணாவிரத போராட்டத்தில் ஈடு பட்டனர்.  கோடங்கிபாளையம் பகுதியில் மட் டுமல்லாது திருப்பூர் மாவட்டத்தின் பல் வேறு பகுதிகளில் முறைகேடாக கல் குவாரிகள் செயல்பட்டு வருகிறது. அர சின் விதிமுறைகளை எள் அளவும் பின் பற்றாமல் செயல்பட்டு வருகிறது. உடனே அவற்றின் மீதும் ஆய்வு மேற் கொண்டு நடவடிக்கை எடுக்க வேண் டும் என விவசாயிகள் பாதுகாப்பு சங்கத் தினர் கோரிக்கை முழக்கமிட்டனர். கோரிக்கை நிறைவேறும் வரை உண் ணாவிரத போராட்டத்தில் தொடர்ந்து ஈடுபடப் போவதாகவும் தெரிவித்தனர்.