கோவை, ஏப்.13- காலிபாட்டில்களை திரும்பப்பெறும் திட்டத்தில், ஒப்பந்ததாரர்கள் நியமிக்கப்படா ததால், டாஸ்மாக் கடைகளில் ஊழியர்கள் நிற்கக்கூட முடியாத அளவிற்கு காலி மது பாட்டில்கள் குவிந்து கிடப்பதும், லேபிள் ஒட்டி பாட்டிலை திரும்பப்பெற தனி கவனம் செலுத்த வேண்டியது இருப்பதால், ஊழி யர்களின் பணிச்சுமையும் கூடி அவதிக் குள்ளாகியுள்ளனர். நீதிமன்ற அறிவுறுத்தல்படி, டாஸ்மாக் கடைகளில் காலி பாட்டில்கள் திரும்ப பெறும் திட்டம் ஏப்ரல் 1 ஆம் தேதி முதல் செயல் படுத்தப்பட்டு வருகிறது. கோவை மாவட்டத் தில், இத்திட்டத்தின் கீழ் டாஸ்மாக் கடை களில் மதுபாட்டிலில் ஸ்டிக்கர் ஒட்டப்பட்டு கூடுதலாக ரூ.10 பெற்றுகொண்டு விற்பனை செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. காலி பாட் டில்களை மீண்டும் கடையில் ஒப்படைத்து விட்டு கூடுதலாக வழங்கிய ரூ.10ஐ பெற்று கொள்ளலாம் என்று அறிவுறுத்தப்பட்டுள் ளது.
இந்நிலையில், பாட்டில்களை திரும்பப் பெறும் திட்டத்தின் நோக்கம் நல்லது என் றாலும், இதனை நடைமுறைப்படுத்த, முறை யான திட்டமிடல் இல்லாமல் தொடங்கப் பட்டுள்ள இத்திட்டத்தால் டாஸ்மாக் கடை ஊழியர்களுக்கு கூடுதல் பணிச்சுமை ஏற் பட்டுள்ளதாக டாஸ்மாக் ஊழியர்கள் நொந்து கொள்கின்றனர். இதுகுறித்து டாஸ்மாக் ஊழியர்கள் கூறு கையில், காலி பாட்டில்களை கொள்முதல் செய்வதற்கு ஒப்பந்ததாரர்கள் இதுவரை யில், நியமிக்கப்படவில்லை. பெரும்பாலான டாஸ்மாக் கடைகளில் பாட்டில்கள் தேங்கி கிடக்கின்றன. இதனால், இட நெருக்கடி ஏற் பட்டு நெருக்கடியுடன் பணி செய்ய வேண் டிய நிலை ஏற்பட்டுள்ளது. முறையான திட்ட மிடல் இல்லாத காரணத்தினால், அதிகளவில் மதுபாட்டில்கள் விற்பனையாகும் கடை களில் மதுபாட்டில்களில் ஸ்டிக்கர் மட்டும் ஒட்டப்பட்டு கூடுதல் பணம் பெறாமல் விற் பனை செய்யப்படுகிறது. கூடுதல் பணம் பெறாத கடைகளில் மீண்டும் பாட்டில்களை கொண்டு வர வேண்டாம் என்றும், வேறெங் காவது தூக்கியெறிந்து விடுங்கள் என்றும் தெரிவித்து வருகின்றனர். இதனால் காலி மதுபாட்டில்களை திரும்ப பெறும் திட்டத்தின் நோக்கமே சிதைந்து போயுள்ளது, என்ற னர்.
இது தொடர்பாக கோவை மாவட்ட டாஸ் மாக் ஊழியர்கள் சங்க பொதுச்செயலாளர் செயலாளர் ஏ.ஜான் அந்தோணிராஜ் கூறுகை யில், கோவை மாவட்டத்தில் பெரும்பாலான டாஸ்மாக் கடைகள் மிகச்சிறிய அறைகள் கொண்டதாகவே இருக்கிறது. இதில் விற் பனைக்கு வைக்கப்பட்டுள்ள மதுபாட்டில் பெட்டிகளால் ஏற்கெனவே பணியாளர்க ளுக்கு போதிய இடவசியில்லாமல் இட நெருக்கடி காணப்படுகிறது. தற்போது, காலி மதுபாட்டில்கள் வைப்பதற்கு இடமில்லா மல் மிகவும் சிரமத்திற்குள்ளாகி வருகின்ற னர். காலி பாட்டில்களை திருடுவதற்கு வாய்ப் புள்ளதால் வெளியிலும் வைக்க முடியாத நிலை உள்ளது. இந்த திட்டம் செயல்பாட் டிற்கு வந்து 10 நாள்களுக்கு மேலாகியும் ஒப் பந்ததாரர்கள் நியமிக்கப்படவில்லை. இத னால், அனைத்து கடைகளிலும் காலி பாட்டில் கள் வைக்க இடமில்லாமல் இட நெருக்கடி ஏற்பட்டுள்ளது. அதேபோல் பெரும்பாலான டாஸ்மாக் கடைகளில் பணியாளர்கள் பற் றாக்குறை இருந்து வருகிறது. ஏற்கெனவே பணிச்சுமையுடன் ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில், காலி பாட்டில் கள் திரும்ப பெறும் திட்டத்தால் ஊழியர் களுக்கு மேலும் பணிச்சுமை அதிகரித்துள் ளது. இதனால், கூடுதலாக பல மணி நேரம் பணியாற்றி வருகின்றனர். விற்பனை, கணக்கு வழக்கு பராமரிப்பு, மதுபாட்டில் இருப்பு, பணம் கையாளுதல், வங்கிக்கு செல் லுதல் உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்கி டையே காலி பாட்டில்கள் பெறும் திட்டம் ஊழி யர்களுக்கு பெரும் சிரமங்களை ஏற்படுத்தி வருகிறது. விற்பனை நேரத்தில் காலி பாட் டில்களை பெறுவதிலும் பெரும் சிக்கல் ஏற் பட்டுள்ளது.
எந்த கடையில் வேண்டுமானாலும் காலி பாட்டில்களை திரும்ப வழங்கலாம் என்று அறிவிப்பில் உள்ளது. ஆனால், கோவையில் எந்த கடையில் மது வாங்குகிறார்களோ அதே கடையிலே திரும்ப ஒப்படைக்க அறிவு றுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் விற்பனை யாகும் அனைத்து பாட்டில்களையும் திரும் பப்பெற முடியாத நிலை காணப்படுகிறது. மாவட்டத்திலுள்ள எந்த கடையிலும் காலி பாட்டில்களை திரும்ப ஒப்படைக்கலாம் என்று அறிவித்தால் மட்டுமே விற்பனையா கும் அனைத்து மது பாட்டில்களையும் திரும் பப்பெற முடியும், என்றார். இது தொடர்பாக டாஸ்மாக் அதிகாரிகள் கூறுகையில், காலி மதுபாட்டில்களை திரும் பப்பெறும் திட்டத்தின் மூலம் பொது இடங் களில் காலி பாட்டில்களை வீசிச்செல்லும் நிலை குறைந்துள்ளது. காலி மதுபாட்டில் களை கொள்முதல் செய்வதற்கான ஒப்பந் ததாரர்கள் தேர்வு ஏப்ரல் 18 ஆம் தேதி நடை பெறுகிறது. ஒப்பந்ததரார்கள் நியமிக்கப் பட்டவுடன் காலி பாட்டில்கள் தேங்கும் பிரச் சனைக்கு தீர்வு ஏற்படும், என்றார்.