districts

img

ஒப்பந்த ஊழியர்களை பணி நிரந்தரம் செய்திடுக

ஈரோடு, மே 21- 10 ஆண்டுகளுக்கு மேல் பணிபுரியும் ஒப்பந்த ஊழி யர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என தமிழ் நாடு தொலைதொடர்பு ஒப் பந்த ஊழியர் சங்கம் வலியு றுத்தியுள்ளது. தமிழ்நாடு தொலை தொடர்பு ஒப்பந்த தொழிலா ளர் சங்க பெருந்துறை கிளை மாநாடு பெருந்துறை தொலைபேசி நிலைய வளாகத்தில் கிளை தலைவர் சுப்பிரமணி தலைமையில் நடை பெற்றது. மாவட்ட செயலாளர் கே.பழனிச் சாமி துவக்க உரையாற்றினார். மாநிலச் செய லாளர் எம்.சையத் இத்ரீஸ் சிறப்புரையாற்றி னார். பிஎஸ்என்எல் ஊழியர் சங்க மாவட்ட  செயலாளர் எஸ்.பாலு, கிளை செயலாளர் பி.கிருஷ்ணமூர்த்தி, ஓய்வூதியர் சங்க அமைப் பாளர் சி.மணி, செயலாளர் ஏ.ஈஸ்வரன், வி. ராமகோடிராஜன் ஆகியோர் வாழ்த்துரை யாற்றினர். இம்மாநாட்டில், 10 ஆண்டுகளுக்கு மேல் பணிபுரியும் ஒப்பந்த ஊழியர்களை பணி  நிரந்தரம் செய்ய வேண்டும். அவுட்சோர்சிங் உட்பட அனைத்து பகுதி ஒப்பந்த ஊழியர் களுக்கும் குறைந்தபட்ச ஊதியம், பிஎப், இஎஸ்ஐ, போனஸ், கிராஜூவிட்டி ஆகிய வற்றை அமல்படுத்த வேண்டும். அவுட்சோர் சிங் திட்டத்தை கைவிட வேண்டும். தேசிய பணமாக்கல் திட்டத்தின் மூலம் பிஎஸ்என்எல் உட்பட அனைத்து பொதுத்துறை நிறுவனங் களின் சொத்துக்களை சூறையாடும் திட் டத்தை ஒன்றிய அரசு கைவிட வேண்டும் உள் ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மாநாட்டில் கிளை துணைச்செயலாளர் சுப் பிரமணியனின் மகள் எஸ்.மஹா ஸ்வேதா 11  ஆம் தேர்வில் காஞ்சிகோவில் அரசுப் பள்ளி யில் முதல் மாணவியாக வந்தமைக்கு வாழ்த்துகளும், நினைவு பரிசுகளும் வழங் கப்பட்டது. இதைத்தொடர்ந்து சங்கத்தின் கிளை  தலைவராக எஸ்.கோபால், துணைத்தலைவ ராக பி.அண்ணாதுரை, செயலாளராக எஸ். தினகரன், துணைச்செயலாளராக ஏ.சுப்பிர மணி, பொருளாளராக கே.முத்துசாமி, அமைப்பு செயலாளர்களாக கே.அலாவுதீன், எஸ்.என்.சம்பத்குமார் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டன. நிறைவாக கே.முத்துசாமி நன்றி கூறினார்.