பள்ளிபாளையம், மார்ச் 22- கூலி உயர்வு குறித்த பேச்சு வார்த்தையை ஏப்ரல் 26 ஆம்தேதிக் குள் தீர்வு காண வேண்டும் என விசைத்தறி தொழிலாளர் சங்கம் வலியுறுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டம், பள்ளி பாளையத்தில் உள்ள விசைத்தறி தொழிலாளர்களுக்கு 75 சதவிகித கூலி உயர்வு உள்ளிட்ட ஒன்பது அம்ச கோரிக்கைகளை வலியு றுத்தி பிரச்சார இயக்கம் நாமக்கல் லில் நடைபெற்றது. நாமக்கல் மாவட்ட விசைத்தறி தொழிலாளர் சங்கத்தின் சார்பில் பள்ளிபாளையம் ஓடப்பள்ளி பிரிவு சாலை அருகே இருசக்கர வாகன பிரச்சார இயக்கத்திற்கு சங்க ஒன்றிய உதவி செயலாளர் கே. குமார் தலைமை ஏற்றார். இப்பிரச்சார இயக்கம், அன்னை சத்யா நகர், புதுப்பா ளையம், காவேரி ஆர். எஸ், எஸ்பிபி காலனி, பள்ளிபாளையம், ஆவரங் காடு, வெடியரசம்பாளையம், ஆவத்தி பாளையம், அக்ரஹாரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகள் வழியாக பிரச்சாரம் மேற்கொள் ளப்பட்டது. இப்பிரச்சார இயக்கத்தில் பங் கேற்ற தலைவர்கள் பேசுகையில், பள்ளிபாளையம் பகுதியில் உள்ள விசைத்தறி தொழிலாளர்களுக்கு கூலி உயர்வு ஒப்பந்தம் முடிந்து சுமார் 24 மாத காலம் ஆகிறது.
தொழிற்சங்கத்தின் சார்பில் பல் வேறு கட்ட போராட்டங்களை நடத் தியும் தீர்வு காணாத நிலையில், கடந்த பிப்ரவரி மாத இறுதியில், வேலைநிறுத்த போராட்டத்தை மேற்கொள்வதென முடிவெடுக் கப்பட்டது. இந்நிலையில் விசைத் தறி ஜவுளி உரிமையாளர்கள் தரப்பினர் தொழிற்சங்கத்தினரை அழைத்து பேச்சுவார்த்தை நடத் தினர். இரண்டு மாத காலத்திற்குள், அதாவது ஏப்ரல் 26 ஆம் தேதிக் குள், புதிய கூலி உயர்வு ஒப்பந்தம் ஏற்படுத்தப்படும். எனவே வேலை நிறுத்த போராட்டத்தை ஒத்தி வைக்க வேண்டும் என கேட்டுக் கொண்டார்கள். அதன் அடிப்படை யில் வேலை நிறுத்த போராட்டம் தற்காலிகமாக வாபஸ் பெறப் பட்டது. தற்போது நாட்கள் குறை வாகவே உள்ளதால், போர்க்கால அடிப்படையில் உடனடியாக கூலி உயர்வு பேச்சுவார்த்தை சமூகமாக பேசி தீர்க்கும் வகையில், தமிழக அரசும், மாவட்ட நிர்வாகமும், இதில் தலையிட்டு தீர்வு காண வேண்டும் என்றனர். இவ்வியக்கத்தில், விசைத்தறி தொழிலாளர் சங்க மாவட்ட செய லாளர் எம்.அசோகன், தலைவர் கே.மோகன், ஒன்றிய செயலாளர் முத்துக்குமார், ஒன்றிய பொரு ளாளர் முருகேசன், ஒன்றிய குழு உறுப்பினர் வாசு மற்றும் நாமக்கல் மாவட்ட விசைத்தறி தொழிலாளர் சங்கத்தை சேர்ந்த திரளானோர் பங் கேற்றனர்.