ஈரோடு, ஜுலை 8- 41 மாத கால பணி நீக்க காலத்தை பணிக்காலமாக முறைப்படுத்தி அறிவிக்க வேண்டுமென தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை சாலைப்பணியாளர் சங்கம் வலியுறுத்தியுள்ளது. தமிழ்நாடு நெடுஞ் சாலைத்துறை சாலைப்பணியாளர் சங்க 8ஆவது கோட்ட மாநாடு கோபியில் இரண்டு நாட்கள் நடைபெற்றது. கோட்ட தலைவர் என்.முருகவேல் தலைமை ஏற்றார். உட் கோட்ட தலைவர் மா.பழனிவேலு வரவேற் றார். மாநில தலைவர் எஸ்.செந்தில் நாதன் மாநாட்டை துவக்கிவைத்து உரை யாற்றினார். இதனைத்தொடர்ந்து, வேலை அறிக்கை, வரவு-செலவு முன்மொழியப் பட்டது. மாநில தலைவர் மா.பாலசுப்பிர மணியன் சிறப்புரையாற்றினார். 41 மாத கால பணி நீக்க காலத்தை பணிக்காலமாக முறைப்படுத்தி அறிவிக்க வேண்டும்.
சாலைப்பணியாளர்கள் தொழில் நுட்ப கல்வித்திறன் பெறாத ஊழியருக் குரிய ஊதியம் ரூ.5200, தர ஊதியம் ரூ.20 ஆயிரம், ரூ.1900 வழங்க வேண்டும். இறந்த வர்களின் வாரிசுகளுக்கு கருணை அடிப் படையில் பணி நியமனம் வழங்க வேண்டும். ஆபத்துப்படி, நிரந்தர பயணப்படி, சீருடை சலவைப்படி வழங்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. முன்னதாக, வெள்ளியன்று சாலைப்பணி யாளர்களின் குடும்பத்துடன் பேரணி நடை பெற்றது. உதவி கோட்ட பொறியாளர் அலுவ லகம் முன்பு தொடங்கிய பேரணியை அரசு ஊழியர் சங்க மாவட்ட இணை செயலாளர் கே.பெருமாள் தொடங்கி வைத்தார். ஜீயான் தியேட்டர் அருகே பேரணி நிறைவடைந்து அங்கு பொது மாநாடு நடைபெற்றது. அரசு ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் ச.விஜய மனோகரன் தொடக்க உரையாற்றினார். மாநில துணை பொது செயலாளர் மு. சீனிவாசன் சிறப்புரையாற்றினார். மாநாட்டின் நிறைவாக நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர், இதில், கோட்ட தலைவ ராக என்.முருகவேல், கோட்ட செயலாள ராக ரா.கருப்புச்சாமி, கோட்டப் பொருளாள ராக ஆர்.முருகன், மாநில செயற்குழ உறுப் பினராக பி.கதிரவன் உள்ளிட்டோர் தேர்வு செய்யப்பட்டனர். மாநாட்டை நிறைவு செய்து, மாநில பொது செயலாளர் ஆ.அம்ச ராஜ் உரையாற்றினார். முடிவில், எஸ்.ஜெப மாலைராஜ் நன்றி கூறினார்.