உதகை, டிச.6- நீலகிரி மாவட்டத்தை பாதுகாக்க கட்டிட விதிமீறல்கள் மீது கடும் நடவ டிக்கை எடுக்க வேண்டும் என நீலகிரி சுற்றுச்சூழல் சங்கங்களின் கூட்ட மைப்பு வலியுறுத்தியுள்ளது. இதுகுறித்து நீலகிரி சுற்றுச்சூழல் சங்கங்களின் கூட்டமைப்பு தலை வரும், முன்னாள் ஐஏஎஸ் அதிகாரியு மான சுர்ஜித் கே.சவுத்ரி செய்தியாளர் களிடம் கூறுகையில், நீலகிரி மாவட் டம் தமிழகத்துக்கு இயற்கையின் கொடையாகும். நீலகிரி மாவட்டம் இந்தியாவின் ஒரே முழுமையான பசுமையான மலைவாசஸ்தலமா கும். இது வெளியிலிருந்து மிகப் பெரிய மக்கள் தொகை அழுத்தத்தி னால் பாதிப்படைந்துள்ளது. சமீப காலமாக பல கட்டுமானங்கள் கட்டிட விதிகளை மீறுவதால் சுற்றுச்சூழல் மற்றும் நிர்வாகத்துக்கு கடுமையான சவாலை ஏற்படுத்தியுள்ளது. கற்றுச்சூழல் மற்றும் சூழலியல், வனவிலங்குகள், தாவரங்கள் மற் றும் விலங்கினங்களைப் பாதுகாக்க வும், பழங்குடியினர் மற்றும் படுகர் கள் போன்ற பூர்வீக சமூகங்களைப் பாதுகாக்கவும் அரசு குறிப்பிடத்தக்க முயற்சிகளை மேற்கொண்டுள்ளது. மலைவாசஸ்தல கட்டிட விதிகள் மீறல் கள் அரங்கேறி வருகின்றன. பொது மற்றும் தனியார் துறைகள் மலைப் பகுதிகளில் ஒரு சிந்தனையற்ற நடை முறையை கடைபிடிப்பது மட்டு மின்றி இந்த விதிகள் முற்றிலும் மீறு கின்றனர்.
உள்ளூர் அதிகார அமைப்பு, விதிகளை வேண்டு மென்றே மீறுபவர்களுக்கு எதிராக சரியான நேரத்தில் மற்றும் உடனடி யான நடவடிக்கையை எடுக்க இய லாத நிலையில் உள்ளன. பஞ்சாயத்து ஊழியர்கள், விதி களின் சிக்கலான தன்மையைப் புரிந்து கொள்ள இயலாதவர்களாக உள்ளனர். எனவே, விதிகளை செயல் படுத்தத் தவறி விடுகின்றனர். இது தொடர்பாக நீலகிரி சுற்றுச்சூழல் சங்கங்களின் கூட்டமைப்பு பல பகுதி களில் ஆய்வு மற்றும் கணக்கெடுப்பு நடத்தியுள்ளது. உள்ளாட்சி அமைப் புகளில் ஒரு சில உரிமம் பெற்ற கட்டி டக் கலைஞர்கள் மற்றும் ஒப்பந்த தாரர்களின் தவறான ஆலோசனை யின் கீழ் அனைத்து விதிகளையும் மீறி கட்டிடத்தை தங்கள் வணிக நோக் கங்களுக்கு விரிவுபடுத்துகின்றனர். அதே நேரத்தில் உள்ளூர் அதிகாரி கள் பல காரணங்களை காட்டி இதனை கண்டுகொள்வதில்லை. பூர்வீக மக்களின் வாழ்விடங்க ளான மந்து, கோக்கால், பாடிகள் மற் றும் நத்தம் நிலங்களில் வாழும் படுகர்கள், இவர்களின் வாழ்க்கை நடைமுறைகள் மற்றும் கலாச்சார பாரம்பரியம் கட்டிட விதிகளின் கீழ் பாதுகாக்கப்பட வேண்டும். மாவட்டத் தில் இயற்கை எழில் மற்றும் சுற்றுச் சூழலை பாதுகாக்க கட்டிட வீதிமீறல் களை உடனடியாக கண்டு கடும் நடவ டிக்கை எடுக்க வேண்டும், என்றார்.