districts

குடிநீர் விநியோகம் தனியாரிடம் விடுவதைக் கைவிடுக

ஈரோடு, ஜன.31- ஊராட்சிக்கோட்டை குடிநீர் விநியோகத்தை தனியாரிடம் விடக் கூடாது என மாமன்றக் கூட்டத்தில் உறுப்பினர்கள் வலியுறுத்தினர். ஈரோடு மாநகராட்சி மாமன்ற கூட்டம் மேயர் சு.நாகரத்தினம் தலைமையில் புதனன்று நடை பெற்றது. துணை மேயர் வி.செல் வராஜ், ஆணையர் வி.சிவகிருஷ் ணமூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர். அப்போது, கூட்டத்தில் மாமன்ற உறுப்பினர்கள் பேசுகை யில், ஊராட்சிக்கோட்டை குடிநீர்  திட்ட இணைப்புகளை அனைத்து  வீடுகளுக்கும் வழங்க நடவடிக்கை  எடுக்க வேண்டும். குடிநீர் திறக்கும் தனியார் நிறுவன ஊழியர்கள், மாநகராட்சி ஊழியர்களுடன் தொடர்பில் இருப்பதில்லை. பராமரிப்பிற்காக தோண்டப்பட்ட குழிகள் அப்படியே கிடக்கிறது. தனியார் செய்யவேண்டிய வேலைகளையும் மாநகராட்சி பணியாளர்கள்தான் செய்கின்ற னர். ஊராட்சிக்கோட்டை குடிநீர் திட்டத்தில் கட்டணம் வசூல், விநி யோகம் போன்றவை தனியாரிடம் விடுவது என்கிற முடிவைக் கைவிட வேண்டும் என்றனர். மேலும், சேகரிக்கப்படும் குப்பைகளை எடுத்துச்செல்ல போதுமான அளவு வாகனங்கள், பணியாளர்கள் இல்லை. ஜவுளி  நகரில் ரூ.92 லட்சம் கட்டப்பட்டுள்ள  இரவு நேர தங்கும் விடுதி சமூக  விரோதிகளின் கூடாரமாக மாறி யுள்ளது. இதனை சமுதாயக் கூடமாக மாற்றி அமைக்க வேண் டும். சூரம்பட்டி மயானத்தை சீர மைத்து, அங்கு பணியாளர்களை நியமிக்க வேண்டும் என்றனர். மாமன்ற உறுப்பினர்களுக்கு பதில் அளித்த ஆணையர் வி.சிவ கிருஷ்ணமூர்த்தி, விரைவில் சாலைகள் சீரமைக்கப்படும். மாநகராட்சி பூங்காக்களை குடி யிருப்போர் நலச்சங்கங்களிடம் ஒப்படைக்க மாநகராட்சி நிர்வா கம் தயாராக உள்ளது. ஊராட்சிக் கோட்டை குடிநீர் திட்டத்தில் சில வீடுகளுக்கு தண்ணீர் செல்ல வில்லை.  நீண்டகாலமாக தொட ரும் இப்பிரச்னை குறித்து ஆய்வு செய்து தீர்வுகாண தனியார் அமைப்பு ஆய்வுப் பணிகளை மேற்கொண்டு வருகிறது. கோடை காலம் தொடங்கும் முன்பு  தண்ணீர் விநியோகத்தில் உள்ள  பிரச்னைகளுக்கு முழுமையான தீர்வு காணப்படும் என்றார். இக் கூட்டத்தில் 111 தீர்மானங்க ளும், அவசர கூட்டத்தில் 8 தீர்மா னங்களும் நிறைவேற்றப்பட்டன.