தருமபுரி, நவ.5- அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்க பாப்பிரெட்டிப்பட்டி வட்ட 2ஆவது மாநாடு பாப்பிரெட்டிப்பட்டியில் நடை பெற்றது. மாநாட்டை கரும்பு விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் சி.வஞ்சி துவக்கி வைத்தார். தமிழ்நாடு பால் உற்பத்தி யாளர்கள் சங்க மாவட்ட செயலாளர் எஸ். தீர்த்தகிரி, அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்க வட்ட செயலாளர் பி.கிருஷ்ணவேணி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வட்ட செய லாளர் தி.வ.தனுஷன் ஆகியோர் வாழ்த்தி பேசினர். மாவட்ட பொருளாளர் இ.கே.முருகன் நிறைவுறை ஆற்றினார். பாப்பிரெட்டிபட்டி வட்டத் தலைவராக எம்.நாகராஜன், செயலாளராக சி.கருணா கரன், பொருளாளராக எம்.கணேசன் உள்ளிட்ட 15 பேர் கொண்ட புதிய வட்டக் குழு தேர்வு செய்யப்பட்டனர். பாப்பிரெட்டிப்பட்டி வட்டத்தில் உள்ள நிலமற்ற விவசாயத் தொழிலாளர்களுக்கு 2 ஏக்கர் நிலம் இலவசமாக வழங்க வேண்டும். மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு உறுதி திட்டத்தின் கீழ் விவசாய தொழிலாளர்களுக்கு ஆண்டுக்கு 200 நாள் வேலையும், தினக்கூலி ரூ.600 வழங்கவேண்டும். வீடற்ற மக்களுக்கு ரூ.10 லட்சத்தில் வீடு கட்டிக் கொடுக்க வேண்டும். 60 வயது பூர்த்தியடைந்த அனைத்து விவ சாயத் தொழிலாளர்களுக்கும் ரூ.3 ஆயிரம் ஓய்வூதியம் வழங்க வேண்டும். அனைத்து மாற்றுத்திறனாளி தொழிலாளர்களுக்கு நூறு நாள் வேலை திட்டத்தின் கீழ் வேலை வழங்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டன. முடிவில் இ.அன்னபூரணி நன்றி கூறினார்.