திருப்பூர், மார்ச் 8- இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத் தினர் நடத்தும் போதையற்ற தமிழ்நாடு என்ற ஒரு கோடி கையெழுத்து பெறும் இயக்கத்தின் ஒரு பகுதியாக, திருப்பூ ரில் நாடாளுமன்ற உறுப்பினர் கே.சுப்ப ராயன், மாநகர மேயர் ந.தினேஷ்கு மார் ஆகியோர் பங்கேற்று கையெழுத் திட்டனர். இந்திய ஜனநாயக வாலிபர் சங்க திருப்பூர் தெற்கு மாநகரம் மற்றும் தெற்கு ஒன்றியம் இணைந்து புதனன்று திருப்பூர் பழைய பேருந்து நிலையம் அருகில் கையெழுத்து இயக்கம் நடத்தி னர். இந்நிகழ்வில் வாலிபர் சங்க மாவட்ட தலைவர் எஸ்.அருள் வரவேற் றார். திருப்பூர் நாடாளுமன்ற உறுப்பி னர் கே.சுப்பராயன், திருப்பூர் மாநகர மேயர் ந.தினேஷ்குமார் ஆகியோர் சிறப்புரையாற்றி கையெழுத்து இட்டு ஆதரவு தெரிவித்தனர். இதில், மாநகராட்சி துணை மேயர் ரா.பாலசுப்பிரமணியம், திருப்பூர் தமிழ் சங்க செயலாளர் மோகன் கே.கார்த்திக், மார்க்சிஸ்ட் கட்சியின் திருப்பூர் மாவட்ட செயலாளர் செ.முத்துகண்ணன், சிஐ டியு மாவட்டத் தலைவர் சி.மூர்த்தி, மாவட்டத் துணைத் தலைவர் கே.உண் ணிகிருஷ்ணன், இடுவாய் ஊராட்சி மன்ற தலைவர் கே.கணேசன் 53 ஆவது வார்டு மாமன்ற உறுப்பினர் ஆர்.மணி மேகலை, மாற்றுத் திறனாளிகள் சங்க மாவட்டத் தலைவர் த.ஜெயபால், வாலி பர் சங்க மாவட்டச் செயலாளர் செ.மணி கண்டன், தெற்கு மாநகரச் செயலாளர் தா.நவீன் லட்சுமண், தெற்கு ஒன்றிய செயலாளர் தா.உமாசங்கர் மற்றும் பொதுமக்கள் திரளானோர் போதைக்கு எதிராக கையெழுத்து இட்டனர். முடி வில் வாலிபர் சங்க மாநகர துணை செய லாளர் செல்லமுத்து நன்றி கூறினார்.