அவிநாசி,டிச.8- அவிநாசி அருகே ராக்கியாபாளை யம் பகுதியில் சாக்கடை கால்வாய் அமைக்க பொதுமக்கள் நிலம் அளித் தும். சாக்கடை கால்வாய் அமைக்கபடா ததால் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியி னர் வெள்ளியன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடு பட்டனர். திருமுருகன்பூண்டி நகராட்சிக்கு உட்பட்ட ராக்கியாபாளையம், 17 ஆவது வார்டு பேருந்து நிறுத்ததில் இருந்து உமையஞ்செட்டிபாளையம் சாலை வரை 500க்கும் மேற்பட்ட குடியிருப்பு கள் இருக்கிறது. இப்பகுதியில் 30 ஆண் டுகளுக்கு மேலாக சாக்கடை வசதி இன்றி பொதுமக்கள் அவதிப்பட்டு வந்த னர். நகராட்சி நிர்வாகம் போதிய இடம் இல்லாததால் சாக்கடை அமைக்க முடி யாது என கூறியுள்ளனர். இதனால், அப்பகுதி மக்களே இருபுறமும் 5 அடி நிலம், சாக்கடை கால்வாய் அமைப்ப தற்கு என்று நகராட்சி நிர்வாகத்திற்கு அளித்துள்ளனர். இந்நிலையில், நிலம் அளித்து பத்து மாதங்கள் ஆகியும் நக ராட்சி நிர்வாகம் சாக்கடை கால்வாய் அமைக்காமல் கால தாமதப்படுத்தி வரு கின்றனர். இது குறித்து மார்க்சிஸ்ட் கம் யூனிஸ்ட் கட்சி நகர மன்ற உறுப்பி னர்களும் நகர மன்ற கூட்டத்திலும் பணி களை விரைவில் தொடங்குமாறு வலியு றுத்தினர். இருப்பினும் எந்த வித நடவ டிக்கையும் எடுக்கவில்லை. இந்நிலை யில், நகராட்சி நிர்வாகத்தின் இந்த போக்கை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியினர் ராக்கியாபாளையம் பேருந்து நிறுத்தம் முன்பு ஆர்ப்பாட்டத் தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டக் குழு உறுப்பினர்கள் வெங்கடாசலம், பழனி சாமி, ஒன்றியக்குழு உறுப்பினர்கள் பால சுப்பிரமணியம், மோகனசுந்தரம், நகர மன்ற உறுப்பினர்கள் சுப்பிரமணியம், தேவராஜன், சிவக்குமார் கிளைச் செய லாளர் அவிநாசியப்பன், காளிமுத்து உட்பட பலர் கலந்து கொண்டனர்.