சேலம், டிச.24- சேலம் மாவட்ட அளவில் பள்ளி மாணவர்களுக்கிடையே நடைபெற்ற சதுரங்க போட்டியில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். பள்ளி மாணவ, மாணவிகளிடையே விளையாட்டுத் திறனை மேம்படுத்தும் வகையில் அரசு மற்றும் தன்னார்வ அமைப்பின் சார்பில் பல்வேறு விளையாட்டு போட்டிகள் நடத் தப்பட்டு வருகிறது. அதன்ஒருபகுதியாக சனியன்று சேலம் மாவட்டம், குகை பகுதியில் சுதந்திர இயக்கம் சார்பில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கான மாவட்ட அளவிலான சதுரங்க போட்டி நடைபெற்றது. 9, 11, 13 மற்றும் 17 வயது ஆகிய நான்கு பிரிவுகளில் நடத்தப்பட்ட இப்போட்டியில், அரசு மற் றும் தனியார் பள்ளிகளைச் சேர்ந்த 100க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர்கள் கலந்து கொண்டனர். இறுதியில் வெற்றி பெற்ற அனைவருக்கும் பரிசு மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. மேலும், இதில் தேர்ந்தெடுக்கப்படும் மாணவ, மாணவியர்கள் மாநில அளவில் நடைபெறும் போட்டியில் பங்கேற்க உள்ளனர்.