districts

img

ஒப்பந்த ஊழியர்களுக்கு அரசாணைப்படி ஊதியம் வழங்கக்கோரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முற்றுகை

திருப்பூர், ஜூன் 25- மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளில் வேலை செய்யும் தினக்கூலி ஒப்பந்த ஊழியர் களுக்கு அரசாணைப்படி ஊதியம் நிர்ண யித்து நிலுவை தொகை வழங்கக்கோரி ஊரக  வளர்ச்சி உள்ளாட்சி துறை ஊழியர் சங்கம்  சிஐடியு சார்பில் திங்களன்று முற்றுகை போராட்டம் நடைபெற்றது. மேலும், பேச்சு வார்த்தையில் தீர்வு ஏற்படாததால், போராட் டம் புதன்கிழமையும் தொடரும் என தெரிவிக் கப்பட்டுள்ளது.  அரசாணைப்படி பேரூராட்சி தூய்மை பணியாளர்களுக்கு தினசரி ஊதியம் ரூ.562,  குடிநீர் பணியாளர்களுக்கு மற்றும் ஓட்டுநர்க ளுக்கு ரூ.638, நகராட்சி தூய்மைப் பணியாளர்க ளுக்கு தினசரி ஊதியம் ரூ.638, குடிநீர் பணியா ளர்களுக்கு மற்றும் ஓட்டுநர்களுக்கு ரூ.715, மாநகராட்சி தூய்மைப் பணியாளர்களுக்கு தினசரி ஊதியம் ரூ.753, குடிநீர் பணியா ளர்கள் மற்றும் ஓட்டுநர்களுக்கு ரூ.792 கணக் கிட்டு வழங்க வேண்டும். ஆனால் மேற்கண்ட  ஊதியம் வழங்காமல் மிகவும் குறைவாகவே  வழங்கப்படுகிறது. எனவே சென்னை உயர் நீதிமன்றத்தில் திருப்பூர் மாவட்ட ஊரக வளர்ச்சி உள்ளாட்சி துறை ஊழியர் சங்கம் சிஐடியு தொடுத்த வழக்கில் நீதிமன்ற உத்த ரவுபடியும், நகராட்சிகளின் நிர்வாக இயக்கு னர் உத்தரவின் படியும், திருப்பூர் மாவட்ட  ஆட்சியர் உத்தரவின்படியும், மாநகராட்சி,  நகராட்சி, பேரூராட்சிகளில் வேலை செய்யும்  தினக்கூலி ஒப்பந்த ஊழியர்களுக்கு அர சாணை 2டி எண் 62 இன் படி, ஊதியம் நிர்ண யித்து நிலுவை தொகையும் வழங்கிட வேண் டும். ஈபிஎப், இஎஸ்ஐ பிடித்தங்களை முறை யாக நிறுவனங்களின் பங்கு தொகையுடன் செலுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி திருப்பூர் மாவட்ட ஊரக வளர்ச்சி உள்ளாட்சி துறை  ஊழியர் சங்கம் சிஐடியு சார்பில் வேலை நிறுத்த போராட்டம் செவ்வாயன்று நடை பெற்றது. இதையடுத்து நடைபெற்ற பேச்சுவார்த்தையில் தீர்வு ஏற்படாததால், போராட்டம் புதன்கிழமையும் தொடரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.   முன்னதாக உள்ளாட்சி ஊழியர் சங்க  மாவட்டத் தலைவர் பழனிச்சாமி தலைமை யில் தலைமையில் நடைபெற்ற இந்த  போராட்டத்தில், மாவட்டச் செயலாளர் கே. ரங்கராஜ் கோரிக்கைகள் குறித்து பேசி னார். இதில், சிஐடியு மாவட்டத் தலைவர் சி. மூர்த்தி, துணைத்தலைவர்கள் கே.உன்னி கிருஷ்ணன், பாலன், சிஐடியு அட்டோ சங்க  மாவட்டத்தலைவர் சிவராமன், பூண்டி நக ராட்சி மன்ற உறுப்பினர் சுப்பிரமணி உட்பட  500க்கும் மேற்பட்ட மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி பணியாளர்கள் பங்கேற்றனர்.