districts

img

நவீன தொழில் நுட்பத்தால் தமிழக காவல்துறை பொதுமக்களின் பாதுகாவலனாக திகழ்கிறது: டி.ஜி.பி சைலேந்திரபாபு பெருமிதம்

தாராபுரம், பிப்.3-  தாராபுரம் காவல் நிலையத்தில் ஆய்வு பணியை மேற்கொண்ட பின் , நவீன தொழில் நுட்பத்தால் தமிழக காவல்துறை பொதுமக்களின் பாதுகா வலனாக திகழ்வாதாக டிஜிபி சைலேந் திரபாபு பெருமிதத்துடன் கூறினார். தமிழக காவல்துறை இயக்குநர் சைலேந்திரபாபு தாராபுரம் காவல் நிலையத்திற்கு திடீர் ஆய்வுக்காக வந் தார். கோப்புகளை ஆய்வு செய்து கையொப்பமிட்டார். மேலும், கடந்த ஆண்டு பதிவு செய் யப்பட்ட கொலை மற்றும் கொள்ளை வழக்குகள், நிலுவையில் உள்ள வழக் குகள் குறித்து கேட்டு அந்த வழக்கு களை கண்டுபிடிக்க டிஜிபி அறிவுரை  வழங்கினார். மேலும் திருப்பூர் மாவட் டத்திலேயே முதன்முறையாக நமக்கு நாமே திட்டத்தில் நகராட்சியுடன் இணைந்து 280 கேமராக்கள் பொருத்தப் பட்டதை கேட்டு, தாராபுரம் காவல் நிலை யத்தில் கண்காணிப்பு கேமராக்கள்  கொண்ட கட்டுப்பாட்டு அறையை பார் வையிட்டு ஆய்வு செய்தார். இதைத் தொடர்ந்து தாராபுரம் கோட்ட அளவி லான காவலர்களிடம் குறைகளை  கேட்டதுடன் காவலர் குடியிருப்பு பகுதி யையும் பார்வையிட்டார். 

இதையடுத்து டிஜிபி சைலேந்திர பாபு கூறியதாவது, தமிழக காவல் துறை நவீன தொழில் நுட்பத்தின் முலம் பொதுமக்களுக்கு உதவி வருகிறது. 100,101,108,112 எண்ணுக்கு அழைக் கும் பொதுமக்களுக்கு அடுத்த 5 ஆவது  நிமிடத்தில் காவல்துறை பணியாற்றி வருகிறது. திருச்சி என்.ஐ.ஐ.டியுடன் இணைந்து சி.டாக் எனும் செயலியை  தமிழக காவல்துறை உருவாக்கியுள் ளது. இந்த செயலியின் முலம் குற்றசெய லில் ஈடுபட்ட 5 ஆயிரத்து 500 குற்றவாளி கள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளனர். காவ லன் உதவி செயலி மூலம் தனியாக உள்ள பெண்கள், வேலைக்கு செல் வோர், வயதான தனியாக உள்ள முதிய வர்கள் தங்களுக்கு சிரமம் ஏற்பட்டால்  செயலியை  பயன்படுத்தினாலேயே காவல் கட்டுப்பாட்டு அறை முலம் பாதிக் கப்பட்டவர்கள் வசிக்கும் பகுதியுள்ள காவல் நிலையத்துக்கு தகவல் வரும். அங்கு பணியில் உள்ள காவலர்கள் சம் பவ இடத்திற்கு உடனடியாக வந்து நட வடிக்கை மேற்கொள்வார். எனவே  இந்த செயலியை அனைத்து பொது மக்களும் தங்களது செல்போனில் பதி விறக்கம் செய்து கொள்ள வேண்டும். இவ்வாறு டிஜிபி கூறினார். தாராபுரத் தில் ஆய்வு பணியை முடித்த பின் பொள் ளாச்சிக்கு சென்றார்.  இந்த ஆய்வில், திருப்பூர் எஸ்.பி  சஷாந்த் சாய், தாராபுரம் டி.எஸ்பி  தனராசு, தாராபுரம் ஆய்வாளர் மணி கண்டன், செல்லம், அன்புச்செல்வி ஆகி யோர் உடனிருந்தனர்.