கோவை, மே 11- கோவையில் ரசாயனம் மூலம் பழுக்க வைத்த 12 டன் மாம்பழம், 2 டன் சாத்துக்குடி அழிக்கப்பட்டது. கோவை மாவட்ட ஆட்சியர் ஜி.எஸ்.சமீ ரன் உத்தரவின் பேரில், மாவட்ட உணவு பாது காப்பு அலுவலர் தமிழ்ச்செல்வன் தலைமை யிலான அதிகாரிகள், கோவை பெரிய கடை வீதி, வைசியாள் வீதி, கருப்பண்ண கவுன்டர் வீதி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் 6 குழுக் களாக பிரிந்து புதனன்று அதிரடி சோதனை மேற்கொண்டனர். 42 கடைகளில் மேற் கொள்ளப்பட்ட இந்த ஆய்வில், ரசாயனம் மூலம் பழுக்க வைத்த சுமார் 12 டன் 350 கிலோ மாம்பழம் மற்றும் 2 டன் 350 கிலோ சாத்துக்குடி ஆகியவை பறிமுதல் செய்யப் பட்டது. இதையடுத்து பறிமுதல் செய்யப் பட்ட பழங்கள் குப்பை கிடங்கில் கொட்டி அழிக்கப்பட்டது. அழிக்கப்பட்ட பழங்களின் சந்தை மதிப்பு ரூ.8 லட்சம் ஆகும். இந்த ஆய்வின் முடிவில் 12 கடைகளுக்கு உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் நோட்டீஸ் வழங்கியுள்ளனர்.