தமிழ்நாட்டில் வேலை வாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்து காத்தி ருப்போர் எண்ணிக்கை ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து வந்தது. ஆனால் தற்போது வேலை வாய்ப்பு அலுவ லகங்களின் அடிப்படை பணித்தன்மை மாற்றம் அடைந்துள்ளதால், இங்கு பதிவு செய்து வேலைக்காக காத்தி ருப்பதில் பயன் இல்லை என்று பெரும் பாலானோர் பதிவு செய்வதில் அக் கறை காட்டாமல் விட்டு விடுகின்றனர். வேலை தேடுவோர் எண்ணிக்கை பெருகி வருவதை மட்டுப்படுத்தி காட்டுவதற்காக, அரசும் இதில் கண்டும், காணாத போக்கைக் கையாளுகிறது. தமிழ்நாட்டில் வேலை வாய்ப்பு அலுவலகங்களில் மாணவர்கள் தங்கள் பெயரைப் பதிவு செய்து வைத்தால் அரசு வேலையோ அல்லது பொதுத்துறை உள்ளிட்ட மற்ற துறை களில் நிரந்தரத் தன்மை உள்ள வேலை களோ கிடைக்கும் என்று ஆரம்ப காலத்தில் ஆர்வமுடன் பதிவு செய் தனர்.
ஆண்டுக்கு ஆண்டு வேலை வாய்ப்புக்கு பதிவு செய்வோரின் எண் ணிக்கை அதிகரித்து வந்தது. வேலை வாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்து காத்திருப்போரின் எண் ணிக்கை, மாநிலத்தில் வேலையில்லா திண்டாட்டத்தை அளவிடுவதற்கான ஒரு குறியீடாகவும் பார்க்கப்பட்டது. ஆரம்பத்தில் பதிவு செய்து குறிப்பிட்ட காலத்தில் வேலை கிடைக்கும் என்ற நிலை இருந்தது, காலப்போக்கில் அந்த நிலையும் மாறியது. ஆண்டுக் கணக்கில் தொடர்ந்து பதிவைப் புதுப்பித்து வைத்தால் 40 வயதுக்கு மேலாவது ஏதேனும் ஒரு வேலை கிடைக்கக்கூடும் என்ற நம்பிக்கையில் பலர் பதிவைப்புதுப்பித்தனர். ஆனால், அந்த நிலையும் தற்போது மாறி விட்டது. முன்பு வேலை வாய்ப்பு அலுவ லகங்களுக்கு சென்று பதிவு செய்த என்ற நிலையில், இணையதளம் வாயிலாகவே வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்யலாம் என்ற வசதி வந்தது. இதனால் அரசுப் பொதுத் தேர்வுகள் முடிந்து மதிப் பெண் சான்றிதழ் தரும்போதே அந்தந்த கல்வி நிலையங்களிலேயே வேலை வாய்ப்பு அலுவலகப் பதிவு செய்து கொள்ளவும் அரசு ஏற்பாடு செய்து கொடுத்தது. ஆனால் கொரோ னாவுக்கு பிந்தைய காலத்தில் பள்ளி களில் வேலை வாய்ப்பு அலுவலகப் பதிவு என்பது நடைபெறவில்லை. இது பற்றி அரசு, மாவட்ட நிர்வாகத் தரப் பிலும் எவ்வித அறிவிப்பும் செய்யப் படவில்லை.
இது பற்றி வேலை வாய்ப்பு அலுவ லகங்களில் விசாரித்தபோது, வேலை வாய்ப்பு அலுவலகங்களின் வேலைத் தன்மை என்பது அடிப்படையில் மாற்ற மடைந்து உள்ளது. போட்டித் தேர்வு கள், ஆசிரியர் பயிற்சி, வங்கித் தேர்வு களுக்கு தயாராவதற்கான பயிற்சி அளிக்கும் மையங்களாக இந்த அலு வலகங்கள் செயல்படுகின்றன. அத்துடன் அரசு, பொதுத்துறை உள் ளிட்ட வேலை வாய்ப்புகள் என்பதை விட, தனியார் துறை வேலைவாய்ப்பு, அதற்கான முகாம்களை நடத்துவது என்பதாகவும் மாறிவிட்டது. ஒன்றிய அரசும், மாநில அரசும் தனியார் துறையை ஊக்கப்படுத்தும் கொள்கை களை கடைப்பிடிக்கும் நிலையில், அதற்கேற்ப வேலை வாய்ப்பு அலுவ கங்களின் தன்மையில் இந்த மாற்றம் ஏற்பட்டுள்ளது. ஆண்டுக்கு ஒரு முறை மெகா வேலைவாய்ப்பு முகாம்களை நடத்துவது, மாதந்தோறும் மூன் றாவது வெள்ளிக்கிழமைகளில் வேலைவாய்ப்பு முகாம் நடத்துவது என செயல்படுகின்றன. இதனால் வேலை வாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்து வேலை பெறுவது என் பதன் மீதான எதிர்பார்ப்பும், நம்பிக் கையும் மாணவர்கள், இளைஞர் களுக்கு குறைந்துவிட்டது.
வேலை வாய்ப்பு அலுவலகங்கள் மூலம் கிடைக்கும் வேலை சட்டப்படி யான ஊதியம் உள்ளிட்ட சமூகப் பாது காப்பு, பணி நிரந்தரம் போன்றவை இருந்தன. ஆனால் இப்போது தனி யார் வேலை வாய்ப்பு என்பது எவ்வித சட்ட, சமூக பாதுகாப்பு, பணி நிரந்தரம் இல்லாமல், அமர்த்து, துரத்து என்ற கொள்கைகளின் அடிப்படையில் செயல்படுவதாக உள்ளன. கல்வித் தகுதிக்கு ஏற்ற கண்ணியமான வேலை என்பது மிகவும் அருகிவிட்டது. இத்தகைய பல்வேறு போக்குகள் காரணமாக, வேலை வாய்ப்பு அலு வலகத்தில் படித்தோர், மாணவர், இளைஞர்கள் பதிவு விசயத்தில் மாநில அரசும் கண்டும், காணாமல் விட்டு விடும் நிலைபாட்டை மேற்கொண்டுள் ளதாக தெரிகிறது. அதேசமயம் கடந்த காலத்தில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் போராடிப் பெற்ற உரிமையான வேலையில்லா கால நிவாரணம் என்பது மிகச் சொற்பமாக நடை முறைப்படுத்தப்படுகிறது. வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து ஐந்தாண்டுகளாக வேலை இல்லாத நிலையில் அவர்களுக்கு அரசு மூன்று ஆண்டுகளுக்கு உதவித்தொகை வழங்குகிறது. இதுவும் பெயரளவுக் கான திட்டமாக மாறிய நிலையில் மாணவர்கள், இளைஞர்கள் மத்தியில் வேலை வாய்ப்பு அலுவலகப் பதிவு என்பது தேவையில்லாததாக மாறிக் கொண்டிருக்கிறது. எனினும் மக்கள் நல அரசு, இவ் விசயத்தில் படித்தவர்களுக்கு உரிய வேலைவாய்ப்பு வழங்கவும், சட்ட, சமூகப் பாதுகாப்பு அம்சங்களை அனைவருக்கும் முறையாக அம லாக்கவும், வேலை வாய்ப்பு பதிவு அலுவலகங்களின் அடிப்படை பணியை உறுதிப்படுத்த வேண்டும்.கல்வி நிலையங்களில் வேலை வாய்ப்பு பதிவை இந்த கல்வி ஆண்டி லேயே முன்பு போல தொடர்ந்து தொய் வின்றி நடத்தவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இளைஞர்கள் எதிர் பார்க்கின்றனர்.
- வே.தூயவன்