districts

img

திருப்பூரில் கேமரா பொருத்தும் பணி காவல் துணை ஆணையர் ஆய்வு

திருப்பூர், மார்ச் 17- திருப்பூர் புஷ்பா பேருந்து நிறுத்தம் ரவுண்டானாவில் கண் காணிப்பு கேமரா பொருத்தும் பணியை வடக்கு மாநகர காவல்  துணை ஆணையர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.  திருப்பூர் மாநகராட்சி சார்பாக முக்கிய சாலைகள் மற்றும்  சந்திப்புகளில் தானியங்கி கண்காணிப்புக் கேமராக்கள் பொருத்தும் பணி நடைபெற்று வருகிறது. அதன் ஒரு பகுதி யாக வியாழனன்று திருப்பூர் புஷ்பா பேருந்து நிறுத்தம் ரவுண் டானா மற்றும் மாநகராட்சி அலுவலகம் சந்திப்பில் கேமரா  பொறுத்தும் பணி நடைபெற்றது. அதை வடக்கு காவல் துணை  ஆணையர் அபிஷேக் குப்தா பார்வையிட்டார். இந்நிகழ் வில், வடக்கு போக்குவரத்து காவல் ஆய்வாளர் பாண்டிய ராஜ் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.