உதகை, செப்.28- உப்பட்டியில் கிராம சுகாதார செவிலியர் மீது தாக்குதல் நடத்திய சமூக விரோதிகளை கைது செய்யக் கோரி தமிழ்நாடு கிராம சுகாதார செவி லியர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட் டத்தில் ஈடுபட்டனர். நீலகிரி மாவட்டம், உப்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்குட் பட்ட குந்தலாடி துணை சுகாதார நிலையத்தில் பணிபுரிந்த கிராம சுகா தார செவிலியர் ஜெகதீஸ்வரி, சமூக விரோதிகளால் கடந்த செப்.24 ஆம் தேதியன்று தாக்கப்பட்டு உதகை அரசு மருத்துவமனையில் சிகிக்சை பெற்று வருகிறார். இந்நிலையில், அவரை தாக்கியவர்களை உடனடி யாக காவல் துறை கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தி நெலாக் கோட்டை அரசு மேம்படுத்தப்பட்ட சுகாதார நிலையம் முன்பு தமிழ்நாடு கிராம சுகாதார செவிலியர்கள் சங்கத் தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தமிழ்நாடு கிராம சுகாதார சங்கத் தின் துணைத்தலைவர் பிரபாவதி ஆர்ப்பாட்டத்திற்கு தலைமை தாங்கி னார். ஆர்ப்பாட்டத்தை துவக்கி வைத்து தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் மாவட்ட மாவட்ட தலைவர் சலீம் கண்டன உரையாற் றினார். இதில், சுகாதார செவிலியர் சங்க மாநிலச் செயலாளர் மகேஸ்வரி, மாவட்ட செயலாளர் பத்மா, கூடலூர் வட்டக்கிளை செய லாளர் சிவபெருமாள், பந்தலூர் வட்ட கிளை செயலாளர் ரவிச்சந்திரன், துணைத் தலைவர் மருதாசலம் உட் பட பலர் கலந்து கொண்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் சங்கத் தின் மாநிலத் தலைவர் சி. பரமேஸ்வரி பேசுகையில், கடந்த சில ஆண்டுகளாக கிராம சுகாதார செவிலியர்களுக்கு தொடர்ந்து இது போன்ற தாக்குதல்கள் நடை பெற்று வருகிறது.
இதற்கு முக்கிய காரணம் மரு.முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு நிதி உதவித்திட்டத்தின் மூலம் உதவித் தொகை வழங்கு வதில் ஏற்படும் பிரச்சனைகளே ஆகும். ஒரு கர்ப்பிணியை இணை யத்தில் பதிவு செய்து அப்பெண் ணுக்கு கர்ப்பகால பராமரிப்பு வழங்குவதே கிராம சுகாதார செவி லியர்களின் பணி. ஆனால், நிதி வழங்குவதற்கும், கிராம சுகாதார செவிலியருக்கும் எந்தவித நேரடி தொடர்பு இல்லை. பயனாளிக்கு பணப்பயன் கிடைக்கவில்லை என்றால், முதலில் கிராம சுகாதார செவிலியர்களையே கை காட்டு கிறார்கள், இதுவே காரணமாகும். தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் ஆட்சிக்கு வந்த பிறகு தமிழகத்தில் பெண்கள் இலவச பயணம், உள்ளாட்சி தேர்தலில் பெண்களுக்கு 33 சதவிகித இட ஒதுக்கீடு, பெண்கள், பெண் குழந் தைகள் பாதுகாப்பு கருதி இலவச தொலைபேசி வசதி என பெண் களுக்கு முக்கியத்துவம் கொடுத்து வருகிறார். அதேபோன்று பொது சுகாதார துறையில் கிராமபுறங்களில் பணிபுரியும் கிராம சுகாதார செவி லியர்கள் பெண்களின் பாது காப்புக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். பெண் அரசு ஊழியரை தாக்கிய சமூக விரோதிகளை காவல் துறை உடனடியாக கைது செய்ய வேண்டும். அவ்வாறு செய்யாத பட்சத்தில் தமிழ்நாடு கிராம சுகா தார செவிலியர் சங்கத்தின் சார்பில் அடுத்த கட்ட போராட்ட நடவ டிக்கை எடுக்கப்படும், என்றார்.