திருப்பூர், ஜன. 21 - தஞ்சாவூர் மாவட்டம், திருமண்டக் குடி ஆரூரான் சர்க்கரை ஆலை நிர்வா கத்தை கண்டித்தும், 52 நாட்களுக்கு மேலாக காத்திருக்கும் போராட்டத்தை நடத்தி வரும் விவசாயிகளுக்கு ஆதர வாகவும், கோரிக்கைகளை தமிழ்நாடு அரசு தலையிட்டு நிறைவேற்றி கொடுக்க வலியுறுத்தி மடத்துக்கு ளத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தஞ்சாவூர் மாவட்டம் திருஆரூரான் சர்க்கரை ஆலை நிறுவனம் விவசாயி கள் பெயரில் வங்கிகளில் 140 கோடி ரூபாய் கடன் வாங்கி, அப்பணத்தை ஆலை நிர்வாகமே எடுத்துக் கொண் டது. விவசாயிகள் பெயரில் வாங்கிய கடனை கணக்கில் காட்டாமல், தனது இரண்டு சர்க்கரை ஆலைகளையும் கால்ஸ் டிஸ்டில்லரி என்ற நிறுவனத் திற்கு விற்று விட்டது. ஆலையை விற்ற நிறுவனமும், வாங்கிய நிறுவனமும் இந்த கடன் தொகைக்கு பொறுப்பேற்க மறுக்கின்றன.
இதன் விளைவாக, விவ சாயிகள் பெரும் துயரில் தள்ளப்பட்டுள் ளார்கள். இத்தகு சூழலில் பாதிக்கப்பட் டுள்ள கரும்பு விவசாயிகளை பாது காத்து அவர்களை கடன் வலையில் இருந்து விடுவிக்க தமிழக முதலமைச் சர் உடனடியாக தலையிட்டு பிரச்சனை களுக்கு தீர்வு காண வேண்டும் என விவ சாயிகள் வலியுறுத்தி வருகின்றனர். திருப்பூர் மாவட்ட தமிழ்நாடு விவசா யிகள் சங்கம், தமிழ்நாடு கரும்பு விவசா யிகள் சங்கத்தின் சார்பில் சனியன்று மாலை 5 மணிக்கு மடத்துக்குளம் நால் ரோட்டில் ஆரூரான் சர்க்கரை ஆலை விவசாயிகளுக்கு ஆதரவாக இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாநிலம் தழுவிய கண்டன ஆர்ப்பாட்டத்தின் ஒரு பகுதியாக நடைபெற்ற இந்த போராட் டத்திற்கு தமிழ்நாடு கரும்பு விவசாயி கள் சங்க அமராவதி கூட்டுறவு சர்க்கரை ஆலை அமைப்பாளர் எம்.எம்.வீரப்பன் தலைமை வகித்தார். தமிழ்நாடு விவசா யிகள் சங்க மாநில துணைத் தலைவர் எஸ்.ஆர். மதுசூதனன், மாவட்ட செய லாளர் ஆர்குமார், மாவட்ட பொருளா ளர் அ.பாலதண்டபாணி ஆகியோர் கண் டன உரையாற்றினார். விவசாயிகள் சங்கத்தின் மாவட்ட துணைத் தலைவர் சு.பரமசிவம், உடு மலை ஒன்றிய தலைவர் ஏ.ராஜகோ பால், குடிமங்கலம் ஒன்றியச் செயலா ளர் சி.ஜெ.ஸ்ரீதர், மடத்துக்குளம் தாலுக்கா செயலாளர் வி.ஏ.ஈஸ்வரன், சிஐடியு நிர்வாகி பன்னீர்செல்வம் மற் றும் கார்த்திகேயன் உள்ளிட்ட திரளான விவசாயிகள் கலந்து கொண்டனர். மடத் துக்குளம் விவசாயிகள் சங்க ஒன்றிய தலைவர் முத்துசாமி நன்றி தெரிவித் தார்.