திருப்பூர், மே 9- ரெட்டியபாளையம் ஊராட்சியில் குடிநீர், சாலை, மயானம் உள்ளிட்ட அடிப்படை மக்கள் நலக் கோரிக்கை களை வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி சார்பில் தெருமுனை பிரச்சார இயக்கம் நடத்தப்பட்டது. திருப்பூர் மாவட்டம், ஊத்துக் குளி ஒன்றியம், ரெட்டியபாளையம் ஊராட்சி கரைப்பாளையம் பகுதி யில் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் இருந்து தெற்கு செல்லும் சாலை யில் சாக்கடை அமைத்து தர வேண் டும். பழைய காலனியில் சாக்கடை வசதி அமைத்து தர வேண்டும். இங் குள்ள நவீன கழிப்பிடத்தை பயன் படுத்துவதற்கு ஏற்ப தண்ணீர் வசதி செய்து தர வேண்டும். வி.பி.சிந்தன் காலனி கிழக்கு வீதிகளில் சாக்கடை அமைத்து தர வேண்டும். சாக்க டையை உடனடியாக சுத்தம் செய்து தர வேண்டும். நவீன கழிப்பிடம், ஊராட்சி முழுவதும் பழுதான தெரு விளக்குகளை பழுதி நீக்கி தர வேண் டும். கூடுதலாக குடிநீர் வழங்க வேண் டும். அய்யா முத்தையன் காடு, டாக்டர் அம்பேத்கர் நகர் பகுதிக்கு அவசர தேவைக்கு ஆம்புலன்ஸ் வர முடி யாத நிலை உள்ளது. வீடுகளுக்கு கட்டுமான பொருள் கொண்டு வர கனரக வாகனங்கள் வர முடியாத அளவுக்கு சாலை மோசமாக உள் ளது. முறையான சாலை வசதி இல் லாமல் ஆதிதிராவிடர் நலத்துறை 300க்கும் மேற்பட்ட பட்டாக்களை வழங்கியுள்ளனர். இதனால் அங்கு குடியிருக்கும் மக்கள் சொல்லென துயரத்திற்கு ஆளாகி வருகின்றனர். எனவே, ஊத்துக்குளி - சென்னிமலை சாலையிலிருந்து வரும் மண் சாலையை தார்ச்சாலையாக மாற்றி தர வேண்டும். ரயில்வே நுழைவுப் பாலத்தின் அடியில் காங்கிரீட் சாலை அமைத்து தர வேண்டும். இந்த ஊரில் மயான வசதி இல் லாமல் அப்பகுதி மக்கள் பெரும் சிர மப்படுகின்றனர். உடனே மயான வசதி செய்து தர வேண்டும். அங்கன் வாடி கட்டிடம் அமைத்துத்தர வேண் டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலி யுறுத்தி இந்த பிரச்சார இயக்கம் நடை பெற்றது. இந்த தெருமுனை பிரச் சாரத்திற்கு கரைப்பாளையம் கிளை செயலாளர் கே.எஸ்.ராமசாமி தலைமை வகித்தார். தாலுகா செய லாளர் எஸ்.கே. கொளந்தசாமி துவக்கி வைத்து உரையாற்றினார். இந்நிகழ் வில் வார்டு உறுப்பினர் எம்.மணியன், கே.எஸ்.கருப்புசாமி, மாசிலாமணி, செளந்தர்யா, சசி, அம்பேத்கர் நகர் கிளை எம்.பழனிசாமி, சாலப்பாளை யம் கிளை கருப்புசாமி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.