districts

img

விடுபட்ட குடும்பங்களுக்கு பட்டா வழங்க பூம்புகார் நகர் மக்கள் கோரிக்கை

திருப்பூர், மே 9- திருப்பூர் மாநகராட்சி, பல்லடம் சாலை, பூம்புகார் நகர் கிழக்கு பகுதியில் வசித்து வருவோரில், விடுபட்ட குடும்பத்தினருக்கு பட்டா வழங்குமாறு திருப்பூர் மாவட்ட ஆட்சியர் எஸ்.வினீத்திடம் கோரிக்கை மனு அளித்துள்ளனர். திருப்பூர் தெற்கு வட்டத்துக்கு உட்பட்ட இப்பகுதி யில் கடந்த 1972ஆம் ஆண்டு தமிழக அரசால் பட்டா வழங்கப்பட்டது. 1989ஆம் ஆண்டு ரீ சர்வே செய்து பட்டா  வழங்கப்பட்டதில் 33 குடும்பங்களுக்கு பட்டா வழங்கப் படவில்லை. இவர்கள் வசிக்கும் வீட்டிற்கான அரசு கொடுத்த பட்டா, கிரையப் பத்திரம், சொத்து வரி,  தண்ணீர் வரி செலுத்தியதற்கான ரசீதுகள் வைத்துள்ள னர். 50 ஆண்டுகளுக்கும்  மேலாக வசித்து வரும் இந்த 33  குடும்பங்களுக்கும் பட்டா வழங்கிட நடவடிக்கை எடுக்கு மாறு மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளித்த னர். திருப்பூர் தெற்குத் தொகுதி எம்எல்ஏ க.செல்வராஜ் இவர்களுக்கு பட்டா கிடைத்திட பரிந்துரைக் கடிதம் வழங்கினார். இந்த கடிதமும் மாவட்ட ஆட்சியரிடம் வழங்கி கோரிக்கை வலியுறுத்தப்பட்டது. இதில் மார்க் சிஸ்ட் கட்சியின் முன்னாள் நகர்மன்ற உறுப்பினர் ஜி.ரத் தினசாமி உள்பட பூம்புகார் பகுதி மக்கள் திரளானோர் பங்கேற்றனர்.