districts

கோயம்புத்தூர் முக்கிய செய்திகள்

அருவிகளில் நீர்வரத்து சரிவு சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றம்

அருவிகளில் நீர்வரத்து சரிவு சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றம் நாமக்கல், பிப்.12- கொல்லிமலையில் உள்ள அருவிகளில் தண்ணீர் வரத்து குறைந்து விட்டதால், சுற்றுலாப் பயணிகள் ஏமாற் றம் அடைந்தனர். நாமக்கல் மாவட்டத்தில், கொல்லிமலை சிறந்த சுற்றுலாத் தலமாக இருந்து வருகிறது. தமிழ்நாடு மட்டுமின்றி அண்டை  மாநிலமான ஆந்திரா, கேரளம், கர்நாடகா உள்ளிட்ட பகுதி களிலிருந்து சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கின்றனர். விடு முறை தினமான ஞாயிறன்று பல்வேறு பகுதிகளிலிருந்து ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வந்திருந்தனர். கொல்லி மலையில் குளிர் அதிகமாக உள்ளதால், இதமான சூழ்நிலை நிலவி வருகிறது. மாலை தொடங்கிய குளிர், அடுத்த நாள்  காலை வரை நீடிக்கிறது. காலை நேரங்களில் மழைச்சாலை யில் மேகமூட்டங்கள் சாலையை கடந்து செல்கிறது. மதியத் தில் கடுமையான வெயில் நிலவி வருகிறது. இந்நிலையில், மழை இல்லாததால் அங்குள்ள ஆகாய கங்கை நீர்வீழ்ச்சி, மாசிலா அருவி, நம் அருவியில் தண்ணீர் குறைந்த அளவே கொட்டுகிறது. இதனால் பல்வேறு பகுதியில் இருந்து வந்த சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றமடைந்தனர்.

சாலை விழிப்புணர்வு பேரணி

சாலை விழிப்புணர்வு பேரணி பென்னாகரம், பிப்.12- பென்னாகரத்தில் போக்குவரத்து காவல் துறை சார்பில், பள்ளி மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு சாலை விழிப் புணர்வு பேரணி நடைபெற்றது. தருமபுரி மாவட்டம், பென்னாகரத்தில், சாலை விழிப்பு ணர்வு பேரணி நடைபெற்றது. அரசு மாவட்ட தலைமை மருத்துவமனை அருகே தொடங்கிய இப்பேரணியை, காவல்  துணை கண்காணிப்பாளர் மகாலட்சுமி கொடியசைத்து துவக்கி வைத்தார். இந்த பேரணியானது தாசம்பட்டி பிரிவு  சாலை வழியாக தற்காலிக பேருந்து நிலையம், பழைய  பேருந்து நிலையம் கடைவீதி, வட்டாட்சியர் அலுவலகம், போடூர் நான்கு ரோடு, அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி  வரை சென்றடைந்தது. இப்பேரணியில் தலைக்கவசம் அணிய  வேண்டும். இருசக்கர வாகனத்தில் இருவர் மட்டுமே பய ணிக்க வேண்டும். ஓட்டுநர் உரிமம் இன்றி வாகனங்களை இயக்கக்கூடாது என்பது குறித்து பொதுமக்களுக்கு விழிப்பு ணர்வு ஏற்படுத்தப்பட்டது. இதில் பென்னாகரம் போக்குவ ரத்து காவல் ஆய்வாளர் ஜாகிர் உசேன், உதவி ஆய்வாளர் சின்னசாமி உட்பட ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ, மாண விகள் கலந்து கொண்டனர்.

பிப்.17 ஆம் தேதி வேலைவாய்ப்பு முகாம்

நாமக்கல், பிப்.12- குமாரபாளையத்திலுள்ள தனியார் கல்வி  நிறுவனத்தில், மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் பிப்.17 ஆம் தேதி நடைபெற உள்ளது. நாமக்கல் மாவட்ட நிர்வாகம், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழி காட்டும் மையம் இணைந்து, மாபெரும் தனி யார் துறை வேலைவாய்ப்பு முகாம் பிப்.17  ஆம் தேதி காலை 8.30 மணி முதல் 3 மணி வரை  குமாரபாளையத்திலுள்ள எக்ஸல் கல்வி நிறுவனத்தில், மாவட்ட ஆட்சியர் தலை மையில் நடைபெற உள்ளது. இம்முகாமில் 5  ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரையி லான பள்ளிக்கல்வி முடித்தோர், டிப்ளமோ, ஐடிஐ, பட்டதாரிகள் மற்றும் பொறியியல் பட் டதாரிகளும், தையற் பயிற்சி, நர்சிங் பயிற்சி உள்பட பல்வேறு பயிற்சி பெற்றவர்களும் கலந்து கொண்டு பணிவாய்ப்பு பெறலாம். இம்முகாமில் 100க்கும் மேற்பட்ட நிறுவனங் கள் கலந்து கொண்டு 10,000-ற்கும் மேற்பட்ட பணிக்காலியிடங்களை நிரப்பப்பட உள்ள னர். வேலையளிப்போரும், வேலைநாடுபவர் களும் www.tnprivatejobs.tn.gov.in என்ற  இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும். இதுதொடர்பான விவரங்களுக்கு மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழி காட்டும் மையத்தை நேரிலோ அல்லது தொலைபேசி எண்: 04286-222260, 63803 69124  என்ற எண்ணிலோ தொடர்பு கொள்ளலாம் என நாமக்கல் மாவட்ட ஆட்சியர் ச.உமா தெரிவித்துள்ளார்.

பிப்ரவரி மாதத்திலேயே காட்டுத்தீ ஏற்படும் அபாயம்

சேலம், பிப்.12- ஏற்காட்டில் வெயிலின் தாக்கத் தால், பிப்ரவரி மாத்திலேயே காட்டுத்தீ  ஏற்படும் அபாயம் நிலவி வருவதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க  வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள் ளது. சேலம் மாவட்டத்திலுள்ள ஏற்காடு தமிழ்நாட்டின் முக்கிய சுற்றுலாத் தல மாக விளங்கி வருகிறது. இங்கு தமிழ் நாடு மட்டுமின்றி கேரளம், ஆந்திரா, கர் நாடகா, பாண்டிச்சேரி போன்ற பல மாநி லங்களிலிருந்து சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கின்றனர். ஏற்காட்டில் வரு டத்தின் அனைத்து மாதங்களும் சரி யான பருவ காலங்களில் சரியான படி  மழை பெய்து வந்தது. இதனால் ஏற்காடு எந்த நேரமும் குளுமையான காலநிலை நிலவி வந்தது. இதனால் அதிகப்படி யான சுற்றுலாப் பயணிகள் ஏற்காட் டிற்கு வந்து, தங்கி மலை அழகை ரசித்து மகிழ்ந்தனர். கடந்த சில ஆண்டுகளாக பெய்யும் மழையின் அளவு குறைந்த தால், பருவ நிலையை மாறிவிட்டது. இதனால் குளிர்காலங்களான நவம்பர், டிசம்பர் மாதங்களில் கூட ஏற்காட்டில் வெளியில் தாக்கம் அதிகமாகி வருகி றது. கோடை காலமான ஏப்ரல் மற்றும்  மே மாதங்கள் வர உள்ள நிலையில், தற்போதே வெயிலின் தாக்கம் வழக் கத்தை விட அதிகரித்து கொண்டே வரு கிறது. இதனால் ஏற்காடு மலை பகுதி யில் உள்ள மரங்கள் காய்ந்து விடுகிறது. சில சமயங்களில் காட்டு தீ ஏற்பட்டு வனப் பகுதியில் உள்ள அரிய வகை மரம் மற்றும் செடி, கொடிகள் தீக்கிரையா கின்றன இந்நிலையில், கடந்தாண்டு ஜூன் மாதம் முதல் அக்டோபர் மாதம் வரை மழை பெய்தது. ஆனால், டிசம்பர் மாதம் முதல் வெயிலின் தாக்கம் அதிகரித்து விட்டது. அதனால் தற்போது வழக் கத்தை விட அதிகளவில் வெயில் அடிப் பதால், வனப்பகுதியிலுள்ள மரம், செடி, கொடிகள் இப்போதே காய்ந்து, அதி லுள்ள இலைகள் உதிர்ந்து காணப்படு கின்றன. மேலும், மலைப்பகுதி முழுவ தும் நிலத்தடி நீர் குறைந்து, நீரோடை கள் அனைத்தும் வறண்டுவிட்டன. ஆங் காங்கே ஓடும் நீர்வீழ்ச்சிகள் வறண்டு காய்ந்து கிடக்கின்றன. இதனிடையே, ஏப்ரல், மே மாதங்களில் தான் காட்டுத்தீ  ஏற்படும். ஆனால், இந்த ஆண்டு பிப்ர வரி மாதத்திலேயே காட்டுத்தீ ஏற்பட்டு வனப்பகுதி எரிந்து விடுமோ என்ற அச் சத்தில் உள்ளூர் மக்கள் மற்றும் சுற்று லாப் பயணிகள் உள்ளனர். எனவே, வனத்துறையினர் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும் என வன ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

வில்லுப்பாட்டு போட்டியில் முதலிடம் அரசுப்பள்ளி மாணவிகளுக்கு பாராட்டு

சேலம், பிப்.12- வில்லுப்பாட்டு போட்டியில் முதலிடம் பெற்ற வாழப்பாடி அரசுப்பள்ளி மாணவிகளுக்கு மாவட்ட ஆட்சியர் ஆர்.பிருந்தாதேவி பாராட்டு தெரிவித்தார். தமிழக அரசு பள்ளிக்கல்வித்துறை சாா்பில், பள்ளி மற்றும் வட்டார அளவில் நடைபெற்ற கலைத்திறன் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு இடையே, மாவட்ட  மற்றும் மாநில அளவில் கலைத்திறன் போட்டிகள் சேலத்தில் நடைபெற்றன. இப்போட்டியில் வில்லுப்பாட்டுப் பிரிவில் பங்கேற்ற, வாழப்பாடி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவிகள் செ.பாரதி, செ.தனுஷ்ஸ்ரீ, செ.கிருத்திகா, பெ. பிருந்தா, அ.சந்தியா ஆகியோர் கொண்ட குழுவினர் சேலம்  மாவட்டத்தில் முதலிடம் பிடித்தனர். மேலும், இந்த மாணவி கள், மாநில அளவிலான போட்டியில் பங்கேற்று, வில்லுப் பாட்டு கலைத்திறனை சிறப்பாக வெளிப்படுத்தினர். இந்நி லையில், சேலத்தில் நடைபெற்ற விழாவில், சேலம் மாவட்ட ஆட்சியர் இரா.பிருந்தாதேவி, இந்த மாணவிகளுக்கு சான்றி தழ்கள், பதக்கம், கோப்பைகள் ஆகியவற்றை வழங்கிப் பாராட்டு தெரிவித்தார்.

இரட்டை குழந்தைகளுடன் தம்பதி தற்கொலை முயற்சி

சேலம், பிப்.12- சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், இரட்டை குழந்தைகளுடன் தம்பதியினர் தற்கொலைக்கு முயன்ற சம்பவத்தால், அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. சேலம் மாவட்டம், ஜாகிர் சின்னம்மாபாளையம், கல் யாணசுந்தரம் காலனியைச் சேர்ந்தவர் சேட்டு. இவரது மனைவி அகிலாண்டேஸ்வரி. இவர்களுக்கு கடந்த 24 ஆண்டு கள் கழித்து தற்போது இரட்டை பெண் குழந்தைகள் பிறந் துள்ளன. இந்நிலையில், இவர் தனது மனைவி மற்றும்  இரட்டை குழந்தைகளுடன் சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவ லகம் முன்பு தீக்குளித்து தற்கொலை செய்து கொள்ள முயன் றார். அப்போது, அங்கிருந்த காவலர்கள், அவர்களை தடுத்து நிறுத்தி பேச்சுவார்த்தை மேற்கொண்டனர். இதுகுறித்து சேட்டு கூறுகையில், ஜாகிர் சின்னம்மாபாளையம் பகுதியைச் சேர்ந்த கார்த்திகேயன், அவரது மனைவி பரிமளா மற்றும் தாயார் பழனியம்மாள் ஆகியோர் கல்யாணசுந்தரம் காலனி யில் உள்ள வீட்டினை கடந்த 2020 ஆம் ஆண்டு விற்பனை செய்வதாக கூறினர். அதனை ரூ.7 லட்சம் கொடுத்து நோட்டரி பப்ளிக் முன்னிலையில் வாங்கினோம். மூன்று மாத கால அவ காசத்திற்குள் கிரையம் செய்து வைப்பதாக கூறினர். ஆனால், இதுநாள் வரை கிரையம் செய்து கொடுக்க மறுத்து வருகின்ற னர். இதுகுறித்து கேட்ட பொழுது நாங்கள் வாங்கிய பணத்தை  திருப்பி தருகிறோம். வீட்டை மீண்டும் எங்களுக்கு எழுதிக்  கொடுத்து விடுமாறு கடந்த பிப்.10 ஆம் தேதி கார்த்திகேயன், பரிமளா, பழனியம்மாள் பவிஸ்ரீ ஆகியோர் எங்கள் வீட்டிற்கு  வந்து கொலை மிரட்டல் விடுகின்றனர். இதுகுறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்தும் நடவ டிக்கை எடுக்கவில்லை. எனவே எங்களுடைய சொத்தினை மீட்டு தரும்படியும், கொலை மிரட்டல் விடுத்த நபர்கள் மீது  உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றார். இச்சம்பத் தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

பட்டா வழங்கவில்லை: பொதுமக்கள் முறையீடு

பட்டா வழங்கவில்லை: பொதுமக்கள் முறையீடு அவிநாசி, பிப்.12- அவிநாசி அருகே சுண்டக்காம்பாளையம் பகுதியில்  பட்டா வழங்கப்படவில்லை என வருவாய்த்துறையினரிடம் பொதுமக்கள் முறையிட்டனர். அவிநாசி ஒன்றியம் நம்பியாம்பாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட சுண்டக்காம்பாளையம் ஆதிதிராவிடர் காலனி பகுதி யில் 200க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இதில், வீடு  இல்லாதவர்களுக்கு இலவச வீட்டுமனைப் பட்டா கேட்டு தொடர்ந்து 10 ஆண்டுகளுக்கும் மேலாக போராடி வந்தனர்.           இந்நிலையில், இவர்களில் சிலருக்கு மட்டும் ஞாயிற்றுக் கிழமை பட்டா வழங்கப்பட்டது. தகுதியானவர்கள் பலருக்கு  பட்டா வழங்கவில்லை எனக் கூறி அப்பகுதி மக்கள்  அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். தகவல றிந்து சம்பவ இடத்திற்கு வந்த அவிநாசி போலிஸார்  மற்றும் வருவாய்த்துறையினர் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இதில், ஏற்கனவே வழங்கப்பட்டு உபயோகப்படுத்தாமல் தகுதியற்று இருந்த 27 பட்டாக்கள் ரத்து செய்யப்பட்டு, தகுதி யானவர்களுக்கு பட்டா வழங்கப்பட்டுள்ளது. மேலும், 90 க்கும் மேற்பட்டோர் பட்டா கேட்டு விண்ணப்பித்துள்ளனர். மீத முள்ளவர்களுக்கு விரைவில் பட்டா வழங்க உரிய நடவ டிக்கை எடுக்கப்படும் என்றனர். இதையடுத்து அனைவரும் கலைந்து சென்றனர்.

உடுமலையில் மாவட்ட அளவிலான சிலம்பப் போட்டி

உடுமலையில் மாவட்ட அளவிலான சிலம்பப் போட்டி உடுமலை, பிப்.12- உடுமலையில் திருப்பூர், கோவை மாவட்ட அளவிலான  சைலாத் சிலம்பச் சங்கம் நடத்தும் 4 வது ஆண்டு மாவட்ட  அளவிலான சைலாத் சிலம்பப் போட்டி  வரும் 17 ஆம் தேதி  உடுமலை - பொள்ளாச்சி சாலையில் உள்ள லெப்டினன்ட் சுபாஷ் ரேணுகா தேவி நினைவு அறக்கட்டளை வளா கத்தில் நடைபெறுகிறது.  இதில் திருப்பூர் கோவை மாவட்டங்களைச் சேர்ந்த சிலம்ப  போட்டியாளர்கள் கலந்து கொள்கின்றனர். போட்டிக்கான ஏற் பாடுகளை பகத்சிங் சிலம்பம் களரி மார்ஷியல் ஆர்ட்ஸ் கல்ச்சு ரல் சேரி டபுள் ட்ரஸ்ட்,  திருப்பூர் கோவை மாவட்ட சைலாத்  சிலம்பச் சங்கம்  மற்றும் லெப்டினென்ட் சுபாஷ் ரேணுகா தேவி  நினைவு அறக்கட்டளை நிர்வாகிகள் செய்து வருகின்றனர். நடைபெறும் போட்டிகள் நெடுங்கம்பு, நடுங்கம்பு, சுவடுகள்,  தொடுமுறை என நான்கு பிரிவின் கீழ் போட்டிகள் நடத்தப் படுகிறது. இதில் ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை படிக்கும்   10 வயதிற்கு உட்பட்டவர்கள் பிரிவு மற்றும் ஆறாம் வகுப்பு  முதல் எட்டாம் வகுப்பு வரையிலான  சப்ஜுனியர் பிரிவு,  ஒன்பது மற்றும் பத்தாம் வகுப்பு வரை சீனியர் பிரிவுகளிலும்,  11 ஆம் வகுப்பு மற்றும் 12 ஆம்  வகுப்பு பிரிவுகள் என,  சீனியர், சப் ஜுனியர், சூப்பபர் சீனியர் என்ற  பிரிவுகளாக போட் டிகள் நடைபெறுகிறது. உடுமலை, திருப்பூர், பொள்ளாச்சி மற்றும் கோவை மாவட்ட அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் இருந்து 300க்கும்  மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொள்கிறார்கள் என்று  பகத்சிங் சிலம்பம் களரி மார்ஷியல் ஆர்ட்ஸ் அறக்கட்டளை நிறுவனர் செயலாளர் ஆசான் வீரமணி தெரிவித்தார்.

தண்ணீர் திருட்டை தடுக்க விவசாயிகள் கோரிக்கை

திருப்பூர், பிப்.12- தண்ணீர் திருட்டை தடுக்க கோரி விவசா யிகள் திங்களன்று மாவட்ட ஆட்சியர் அலுவ லகத்தில் கோரிக்கை வைத்துள்ளனர். இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது,  தாராபுரம் உப்பாறு அணை சார்ந்து 6 ஆயிரத் துக்கும் மேற்பட்ட ஏக்கர் விவசாய பாசனம்  மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும் 5 ஆயிரத்துக்கு மேற்பட்ட குடும்பத்தினருக்கு குடிநீர் ஆதாரமாகவும் இருந்து வருகிறது. இந்நிலையில் திருமூர்த்தி அணையிலிருந்து வெளியேறக்கூடிய உபரி நீரை உப்பாறு அணைக்கு திருப்பிவிட வலியுறுத்தி கடந்த  19 நாட்களாக காத்திருப்புப் போராட்டத்தில்  ஈடுபட்ட விவசாயிகள் ஞாயிறன்று செல் போன் கோபுரத்தில் ஏறி ஏழு மணிநேர போராட்டம் மேற்கொள்ளப்பட்டது. இதைய டுத்து அதிகாரிகளுடன் நடைபெற்ற பேச்சு வார்த்தையில் உடன்பாடு ஏற்பட வில்லை. எனவே மாவட்ட ஆட்சியரிடம் நேரடியாக தங் களது கோரிக்கை தொடர்பாக சந்திக்க வந்த தாக கூறினர். அப்போது பிஏபி வாய்க்காலில்  தொடர்ந்து தண்ணீர் திருட்டு நடைபெற்று வரும் நிலையில் அந்த சம்பவங்கள் தொடர் பாக இதுவரை சட்டபூர்வ நடவடிக்கை எடுக் காததாலேயே தங்களது வாழ்வாதாரமாக உள்ள உப்பாறு அணைக்கு தண்ணீர் திறந்து  விட முடியவில்லை. உப்பாறு அணைக்கு தண்ணீர் வரத்தை உறுதி செய்ய அதிகாரிகள்  ஆவண செய்ய வேண்டும் என கோரிக்கை  விடுத்தனர். பிஏபி பாசனத்திற்கு போதுமான நீர் கிடைப்பதில்லை எனக் கூறி விவசாயிகள் போராடி வரும் நிலையில், உப்பாறு அணைக்கு தண்ணீர் வழங்குவதற்கான சாத் தியக்கூறு இல்லை என்றே கூறப்படுகின்றது. அமராவதி அணையில் நீர் நிரம்பி வரும்  காலங்களில் வடிகின்ற தண்ணீரை உப்பாறு  அணைக்கு பயன்படுத்தினால் பயனுள்ள தாக இருக்கும் என்று தெரியவருகிறது.

நாய்கள் கடித்து மான் பலி

நாய்கள் கடித்து மான் பலி திருப்பூர், பிப்.12- வெள்ளக்கோவிலில் நாய்கள் கடித்து புள்ளிமான் உயிரி ழந்தது. வெள்ளக்கோவில் - அகலரைப்பாளையம்புதூர் செல் லும் வழியில் உள்ள வனத்தில் உலவிய புள்ளி மானை தெரு நாய்கள் துரத்தி கடித்துக் கொண்டிருந்தன. இதை பார்த்த அப் பகுதியைச் சோ்ந்த சிலர் நாய்களை விரட்டியுள்ளனர். இதைய டுத்து, வெள்ளக்கோவில் தீயணைப்பு நிலையம், வனத் துறை யினருக்குத் தகவல் தெரிவித்துள்ளனர். சம்பவ இடத்துக்கு  வந்த வெள்ளக்கோவில் தீயணைப்புத் துறையினர், வனக் காப்பாளர் ஆகியோர் பார்த்தபோது மான் உயிரிழந்தது தெரி யவந்தது.

தீண்டாமைச் சுவரை முழுமையாக இடிக்க கோரிக்கை

அவிநாசி, பிப்.12- சேவூரில் விஐபி கார்டனில் தீண் டாமைச் சுவர் அகற்றப்பட்ட நிலையில்,  மீதமுள்ள பகுதியையும் முழுமையாக அகற்ற வேண்டும் என கோரிக்கை எழுந் துள்ளது. அவிநாசி ஒன்றியம் சேவூர் ஊராட்சி  விஐபி கார்டன் பகுதியில் தீண்டாமைச் சுவர் இருந்து வந்தது. இதனை அப்புறப் படுத்த வேண்டும் என அப்பகுதி பொது மக்களும் சமூக ஆர்வலர்களும் தொடர்ந்து குரல் கொடுத்து வந்தனர்.  இதையடுத்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்  கட்சியினர் மாவட்ட நிர்வாகத்தை சந் தித்து உடனடியாக் தீண்டாமைச் சுவரை  அகற்ற வலியுறுத்தினர். தீண்டாமை ஒழிப்பு முன்னணி தமிழ்நாடு மாநிலக் குழு சார்பிலும் வலியுறுத்தப்பட்டது. இதனைத் தொடர்ந்து அப்பகு தியைச் சேர்ந்த பொதுமக்கள் சிலர்  நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழியி டம் சுவரை அகற்றுமாறு கோரிக்கை மனு அளித்தனர். இதையடுத்து, தீண் டாமைச் சுவரை அகற்ற வந்த அரசு அலுவ லர்கள் மொத்தமுள்ள மூன்று பாதைக ளில் ஒரு பாதையை மட்டும் அகற்றி விட்டு சென்று விட்டனர். இதனை அறிந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் ச. நந்தகோபால், ஒன்றிய செயலாளர் ஈஸ் வரமூர்த்தி, தீண்டாமை ஒழிப்பு முன் னணி மாவட்டச் செயலாளர் சி.கே.கனக ராஜ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின்  மாவட்டக் குழு உறுப்பினர் பழனிச்சாமி ஆகியோர் தீண்டாமைச் சுவரை பார் வையிட்டு மீதமுள்ள இரண்டு பாதைக ளையும் அகற்றுமாறு மாவட்ட நிர்வாகத் திடம் வலியுறுத்தினர். இதை அமைதிப்  பேச்சுவார்த்தையிலும் வலியுறுத்துவ தாகவும் தெரிவித்தனர். இந்நிலையில், திங்கட்கிழமை இரு தரப்பினரையும் அழைத்து அமைதி பேச்சு வார்த்தை நடத்துவதென அரசு தரப்பில் முடிவு செய்யப்பட்டிருந்தது. சுவர் அகற்றப்பட்டதால் அமைதிப் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை. இரண்டு பாதைகளிலும் உள்ள தீண் டாமைச் சுவர் அகற்றப்படும் என அப்பகு தியை சேர்ந்த பொதுமக்கள் எதிர்பார்த் திருந்தனர். ஆனால் சுவர் முழுமையாக  அகற்றப்படாமல் உள்ளது.

திம்பம் மலைப்பகுதியில் சிறுத்தை நடமாட்டம்

ஈரோடு, பிப்.12- திம்பம் மலைப்பாதையில் சிறுத்தை நடமாட்டத்தால் வாகன ஓட்டிகள் அச்சம் அடைந்துள்ளனர். ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் புலிகள்கள் காப்பகத் தில் மொத்தம் 10 வனச்சரகங்கள் உள்ளன. இங்கு புலி, யானை, மான், கரடி, காட்டெருமை, சிறுத்தைப்புலி உள்ளிட்ட  பல்வேறு வனவிலங்குகள் காணப்படுகின்றன. இந்த வனப்பகுதி வழியாக சத்தியமங்கலம் - மைசூரு தேசிய நெடுஞ்சாலை அமைந்துள்ளது. இங்கு அவ்வப்போது இரவு நேரங்களில் வனவிலங்குகள் நடமாடுவது வழக் கம். இந்த நிலையில், 19 ஆவது கொண்டை ஊசி வளைவு அருகே சாலையில் சிறுத்தை ஒன்று நடமாடியுள்ளது. இதனை  அந்த வழியாகச் சென்ற வாகன ஓட்டிகள் நேரில் பார்த்து  அதிர்ச்சி அடைந்தனர். அதுமட்டுமின்றி, வாகனங்களில் இருந்தபடியே சிறுத்தைப்புலியின் நடமாட்டத்தை புகைப் படம் மற்றும் வீடியோ எடுக்க, அக்காட்சிகள் தற்போது வைர லாக வருகிறது. திம்பம் மலைப்பாதையில் சிறுத்தை நடமாட்டத்தால் வாகன ஓட்டிகள் அச்சம் அடைந்துள்ளனர்.

மைவி3 ஏட்ஸ் உரிமையாளருக்கு ஆதரவு  போராட்டத்தில் ஈடுபட்ட 5 பேர் கைது 

மைவி3 ஏட்ஸ் உரிமையாளருக்கு ஆதரவு  போராட்டத்தில் ஈடுபட்ட 5 பேர் கைது  கோவை, பிப்.12- கோவையில் மைவி3 ஏட்ஸ் உரிமையாளர் சக்தி ஆனந்தை விடுவிக்கக் கோரி நள்ளிரவில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அந்நிறுவன இயக்குநர் உட்பட ஐந்து பேரை போலீ சார் கைது செய்தனர். மைவி3 ஏட்ஸ் நிறுவனம் தொடர்பாக, சமூக வளை தளங்களில் அவதூறு பரப்புபவர்களின் மீது நடவடிக்கை  எடுக்கக் கோரி, கடந்த சனிக்கிழமை அதன் உரிமையா ளர் சக்தி ஆனந்த் மற்றும் அந்த நிறுவனத்தின் வாடிக்கையா ளர்கள் கோவை மாநகர காவல் ஆணையர் அலுவல கத்திற்கு வந்தனர். மாநகர காவல் ஆணையர் முக்கிய கூட்டத் தில் இருப்பதால், அவரை சந்திக்க சக்தி ஆனந்த்-க்கு  அனுமதி மறக்கப்பட்டது. இதனை அடுத்து சக்தி ஆனந்த்  மற்றும் வாடிக்கையாளர்கள் மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தின் முன்பு அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனைத்தொடர்ந்து, சக்தி ஆனந்த்  உட்பட 188  பேரை போலீசார் கைது செய்தனர். அதில் கைது செய்யப் பட்ட 187 பேரும் நள்ளிரவில் விடுவிக்கப்பட்ட நிலையில், சக்தி ஆனந்த் மீது நான்கு பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப் பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இதனிடையே சனிக்கிழமை நள்ளிரவில் கோவை மாவட்ட  ஆட்சியர் அலுவலக முன்பு மைவி3 ஏட்ஸ் உரிமையாளர்சக்தி ஆனந்தனை விடுதலை செய்ய வலியுறுத்தி 5 பேர் திடீர்  ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனையடுத்து, நள்ளிரவில்  ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போலீசார், கோவையை சேர்ந்த விநாயகமூர்த்தி, கணேசன், பிரவீன் அருள்மணி, சிவனந்த பெருமாள் ஆகிய 5 பேர் மீது நான்கு பிரிவுக ளின் கீழ் வழக்கு பதிவு செய்து, சிறையில் அடைத்தனர்.

கால்நடை பராமரிப்பு உதவியாளர் பணியிடம் நேர்காணல் தேதி அறிவிப்பு

கால்நடை பராமரிப்பு உதவியாளர் பணியிடம் நேர்காணல் தேதி அறிவிப்பு ஈரோடு, பிப். 12- கால்நடை பராமரிப்பு உதவியாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான நேர்காணல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் ராஜகோபால் சுன்கரா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ஈரோடு மாவட்டம், கால்நடை பராமரிப்புத்துறையில் காலியாக உள்ள 19 கால் நடை பராமரிப்பு உதவியாளர் பணியிடங்களை நிரப்பு வதற்கு 26.4.2022 முதல் 29.4.2022 ஆகிய 4 நாட்கள் நேர்காணல்  நடத்த அழைப்பாணை அனுப்பப்பட்டது. அதன்படி 2 நாட்களுக்கு நேர்காணல் நடைபெற்ற நிலையில், நிர்வாக காரணத்தினால் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது. தற்போது மீதமுள்ள இரண்டு நாட்களுக்கு நடைபெற விருந்த நேர்காணலில் கலந்து கொள்ளவிருந்த விண்ணப்ப தாரர்களுக்கும் மற்றும் ஈரோடு மாவட்ட வேலைவாய்ப்பு அலு வலகத்திலிருந்து தற்போது பெறப்பட்ட பெயர்ப்பட்டியலில் உள்ள நபர்களுக்கும் சேர்த்து நேர்காணல் தேர்வு நடத்தப் படுகிறது. அதன்படி, வருகின்ற பிப். 19 மற்றும் பிப். 20 ஆகிய  தேதிகளில் காலை 9.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை,  கால்நடை பராமரிப்புத்துறை மண்டல இணை இயக்குநர் அலு வலகத்தில் நேர்காணல் நடைபெறும் என தெரிவிக்கப் பட்டுள்ளது. மேலும் கூடுதல் விவரங்களுக்கு 0424-2257512 என்ற தொலைபேசி எண்ணைத் தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வஜ்ரம் விளையாட்டு வளர்ச்சி கூட்டமைப்பு : கராத்தே போட்டி

வஜ்ரம் விளையாட்டு வளர்ச்சி கூட்டமைப்பு : கராத்தே போட்டி உதகை, பிப்.12- குன்னூர் ஒய்எம்சிஏ அருகே உள்ள தனியார் அரங்கில் சிறுவர்களுக்கான கராத்தே போட்டி நடைபெற்றது. நீலகிரி மாவட்டம், குன்னூர் ஒய்எம்சிஏ அரங்கில் வஜ்ரம்  விளையாட்டு வளர்ச்சி கூட்டமைப்பு சார்பில், மாணவ மாணவி களுக்கான கராத்தே மஞ்சள் நிற பெல்ட் தேர்வு போட்டி கள் நடைபெற்றது. இதில் ஏராளமான கராத்தே பயிற்சி  பெற்ற மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர். பின்பு  ஐந்து நபர்களை தேர்வு செய்து அவர்களுக்கு சான்றிதழ் கள் வழங்கப்பட்டது.  இந்நிகழ்ச்சியில் வஜ்ரம் விளையாட்டு வளர்ச்சி கூட்ட மைப்பின் மாவட்ட கராத்தே பயிற்சியாளர் உமாசங்கர் நடுவராக பங்கேற்று மாணவர்களை தேர்வு செய்தார். மேலும் இந்நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக வஜ்ரம்  விளையாட்டு வளர்ச்சி கூட்டமைப்பின் மாவட்டத் தலைவர் நெடுமாறன் பங்கேற்றார். மேலும், சிலம்பம் பயிற்சியாளர் இளவரசன் பயிற்சி பெற்று வரும் மாணவ மாணவிகளை பாராட்டினார்.

பள்ளி அருகே செல்போன் கோபுரம்: எதிர்ப்பு

ஈரோடு, பிப். 12- பவானி அருகே கேசரிமங்கலம் பகுதி யில் 5ஜி செல்போன் கோபுரம் அமைக்க பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். ஈரோடு மாவட்டம், பவானி அருகே உள்ள குப்பிச்சிபாளையம் பகுதி மக்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு  ஒன்றை அளித்தனர். அதில், எங்கள் கிராமத் தில் ‘5ஜி’ செல்போன் கோபுரம் அமைக் கப்போவதாக நோட்டீஸ் ஒட்டி உள்ளனர். மாவட்ட ஆட்சியர் மூலம் அனுமதி பெற்றுள்ள தாகவும் கூறப்படுகிறது. செல்போன் கோபு ரத்தால் நன்மை இருந்தாலும், கதிர்வீச் ச்சால், புற்றுநோய், நரம்பு தொடர்பான பிரச் சனைகள், மூளை பாதிப்பு ஏற்படும் வாய்ப் புள்ளதாக கூறப்படுகிறது. தவிர, இக்க திர்வீச்சால் உடலில் வெப்பத்தை உயர்த்தி,  உடல்நலம் பாதிக்கும் எனவும் சொல்லப்பகி றது. டவர் அமையும் இடத்தின் அருகே பள்ளி கள், குடியிருப்புகள் அதிகம் உள்ளன.  எனவே, பள்ளி குழந்தைகள் மற்றும் குடியிருக்கும் மக்களின் நலன் கருதி  பள்ளி அருகே டவரை அமைக்காமல், சிறிது  துாரத்துக்கு அப்பால் அமைக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

தவறான சிகிச்சையால் பாதிக்கப்பட்ட பெண் ஆட்சியரிடம் புகார் மனு

ஈரோடு, பிப்.12- தவறான சிகிச்சை மேற்கொண்டு இரு தய பிரச்சனைக்கு உள்ளாக்கிய மருத்து வர்கள் மீது உரிய நடவடிககி எடுக்க வேண் டும் என பாதிக்கப்பட்ட பெண் மாவட்ட ஆட்சி யர் அலுவலகத்தில் புகார் மனு அளித்தார். ஈரோடு மாவட்டம் தாளவாடி பகுதியைச் சேர்ந்தவர் பிரதீப் குமார். அவரது மனைவி  அனுபல்லவி. இவர்களுக்கு திருமணம் ஆகி  இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில், அனுபல்லவி ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார்  மனு ஒன்றை அளித்தார். அதில் கூறியிருப் பதாவது, கடந்த 22ஆம் தேதியன்று தாள வாடி அரசு மருத்துவமனையில் குடும்ப கட்டுப்பாடு அறுவை சிகிச்சை முகாம் நடத் தப்பட்டது. என்னுடன் சேர்த்து எட்டு பேர் அன்று குடும்ப கட்டுப்பாட்டு அறுவை சிகிச்சை செய்வதற்காக, இருந்தோம். பின் னர் மதியத்தில் அறுவை சிகிச்சை செய்யப் பட்டு சுய நினைவின்றி இருந்தேன். பின்னர் சுயநினைவு வந்தபோது கோவை  தனியார் மருத்துவமனை அவசர பிரிவில் அனுமதிக்கப்பட்டு, 25 நாள் ஐசியு வார்டில் வைக்கப்பட்டேன். இதன்பிறகு அங்கிருந்த மருத்துவர்கள் கூறுகையில், எனக்கு குடும்ப கட்டுப்பாடு சிகிச்சை செய்வதற்கு பதி லாக, என்னுடைய இருதயத்துக்கு ரத்தம்  செல்லும் லேயரை துண்டித்து விட்டதா கவும், எனது உயிருக்கு எப்போது வேண்டு மானாலும் பிரச்சனை ஏற்படலாம் எனவும்  கூறியுள்ளனர். தற்போது, அடிக்கடி மயக் கம் ஏற்பட்டு, தொடர்ந்து இருதய நோய் பிரச்ச னைக்கு உள்ளாகி வருகிறேன்.  எனவே தவறான முறையில் அறுவை சிகிச்சை செய்த மருத்துவர் மீது நடவ டிக்கை மேற்கொண்டு, எனக்கும் எனது  குழந்தைகளுக்கும் அரசு உரிய இழப்பீடு  வழங்க வேண்டும் என அதில் குறிப்பிட்டி ருந்தார்.

போதை பொருட்கள் விற்பனை குறித்த ஆய்வு 50 கடைகளுக்கு சீல், ரூ.5 லட்சம் பறிமுதல்

உதகை, பிப்.12-  நீலகிரி மாவட்டத்தில், மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை, காவல்துறையுடன் இணைந்து நடத்திய தொடர் ஆய்வில் தடை  செய்யப்பட்ட பான் மாசாலா, புகையிலை பொருட்கள் விற்பனை செய்த சுமார் 50 கடைக ளுக்கு சீல் வைக்கப்பட்டு ரூ.5 லட்சம் அபரா தம் வசூலிக்கப்பட்டுள்ளது.  கஞ்சா மற்றும் குட்கா, பான்மசாலா போன்ற உடலுக்கு தீங்கு விளைவிக்கும் பொருட்கள் விற்பனை செய்ய தமிழக அரசு தடை விதித்துள்ளது. போதை பொருட்கள் இல்லாத தமிழ்நாடு திட்டம் துவக்கப்பட்டு, போதைப்பொருள் ஒழிப்புக்கான சோதனை கள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. அந்த வகையில், போதை பொருளை தடுக்க  காவல்துறை மற்றும் உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் இணைந்து ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.  நீலகிரி மாவட்டத்தில், கடந்த ஆண்டு நவம்பர் மாதத்தில் இருந்து தொடர்ச்சியாக மாவட்ட உணவு பாதுகாப்பு துறை, காவல் துறையுடன் இணைந்து, மாவட்டம் முழு வதும் பெட்டி கடைகள், வணிக நிறுவனங் கள் உள்ளிட்ட ஏராளமான கடைகளில் தொடர்ச்சியாக ஆய்வு மேற்கொண்டு வரு கின்றனர். இந்த ஆய்வில் இதுவரை சுமார் 50க்கும் மேற்பட்ட வணிகர்கள் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை பதுக்கி வைத்து விற்பனை செய்யப்படுவது கண்டறியப்பட்டது. தொடர்ந்து, அந்தகடைக ளுக்கும் சீல் வைக்கப்பட்டது மட்டுமின்றி, மொத்தம் ரூ.5 லட்சம் அபராதமாக வசூ லிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து உணவு பாதுகாப்புத்துறை மாவட்ட நியமன அலுவலர் சுரேஷ் கூறுகை யில், நீலகிரி மாவட்டத்தில் தடை செய்யப் பட்ட புகையிலை பொருட்கள் பயன்பாட்டை  தடுக்கும் விதமாக காவல்துறையுடன் இணைந்து ஆய்வு நடத்தப்பட்டு வருகிறது. இது போன்ற புகார்களை தெரிவிக்க 93615- 23197 என்ற எண்ணிற்கு தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்கும் பட்சத்தில் விரைந்து நடவ டிக்கை எடுக்கப்படும். எனவே வியாபாரி கள் புகையிலை பொருட்கள் விற்பனை செய் வதை தவிர்க்க வேண்டும், என்றார்.

வாலிபர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது 

உதகை, பிப்.12- உதகையில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை  செய்து கைதான வாலிபர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது. நீலகிரி மாவட்டம், உதகை அருகே கூலித் தொழிலாளி தம்பதியின் 9 வயது மகள், அதே பகுதியில் உள்ள ஒரு தனி யார் பள்ளியில் படித்து வந்தார். இந்நிலையில், கடந்த மாதம் 17 ஆம் தேதியன்று திருவிழாக்கு சென்ற சிறுமியை, உறவி னர்கள் அழைப்பதாக கூறி, காந்திநகர் பகுதியைச் சேர்ந்த  அஜித்(23) என்பவர் அழைத்துச் சென்று, வலுக்கட்டாய பாலி யல் பலாத்காரத்தில் ஈடுபட்டுள்ளார். அப்போது சிறுமி எதிர்ப்பு தெரிவித்து சத்தம் போட, அஜித் அங்கிருந்து தப்பி யுள்ளார்.  இதனையடுத்து, அலறிய சிறுமியை அங்கிருந்த வர்கள் மீட்டு சிகிச்சைக்கு மருத்துவமனையில் அனுமதித்த னர். இதைத்தொடர்ந்து, வழக்கு பதிவு செய்த புதுமந்து போலீசார் போக்சோ உட்பட 6 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு  செய்து, அஜித்தை கைது செய்து சிறையில் அடைத்தனர்.  இதனிடையே, அஜித்தை குண்டர்  தடுப்பு சட்டத்தில்  கைது செய்ய வலியுறுத்தி மாவட்ட எஸ்.பி. சுந்தரவடிவேல், மாவட்ட ஆட்சியர்க்கு பரிந்துரை செய்தார். இந்நிலையில், அஜித்தை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய ஆட்சி யர் அருணா உத்தரவிட்டார். இந்த நகல் கோவை மத்திய சிறையில் உள்ள அஜித்திடம் வழங்கப்பட்டது.

சாலை விபத்துகளால் கடந்தாண்டில் மட்டும் 17,200 பேர் பலி

சாலை விபத்துகளால் கடந்தாண்டில் மட்டும் 17,200 பேர் பலி தருமபுரி, பிப்.12- தமிழ்நாடு முழுவதும் கடந்தாண்டில் ஏற்பட்ட சாலை  விபத்துகளால் 17,200 பேர் உயிரிழந்துள்ளதாக சேலம்  மண்டல போக்குவரத்து அலுவலர் பிரபாகர் தெரிவித்துள் ளார். தமிழ்நாடு அரசு போக்குவரத்து துறை சார்பில், முத்த மிழறிஞர் கலைஞரின் நூற்றாண்டை முன்னிட்டு, வாகன  ஓட்டுநர்களுக்கான சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு முகாம்  தருமபுரி வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் நடை பெற்றது. இந்நிகழ்ச்சியில், சேலம் மண்டல போக்குவரத்து துணை இயக்குநர் பிரபாகர் பேசுகையில், பொது இடங்க ளில் நாம் மற்றவர்களை பாதிக்கக்கூடிய அளவில் நடந்து  கொள்ளக்கூடாது. ஓட்டுநர்களுக்கு குடும்ப பிரச்சினை இருக் கும், இதற்காக கவலைப்படக்கூடாது. நாம் செய்யும் தொழி லில் நியாயமாக நடந்து கொள்ள வேண்டும். சமீபத்தில் நடந்த  தொப்பூர் விபத்து மிகவும் கவலை அளிக்கிறது. ஒருவர் விபத் தில் இறந்தால் அவர்களின் குடும்பம் பொருளாதார ரீதி யாக பெரும் சிரமத்திற்குள்ளாகும். தமிழ்நாட்டில் 2023 ஆம்  ஆண்டு கணக்கெடுப்பின்படி சாலை விபத்தில் 17 ஆயிரத்து  200 பேர் இறந்துள்ளனர். இறந்தவர்களில் 50 சதவீதம் இருசக் கர வாகனத்தில் சென்றவர்கள் தான். இருசக்கர வாகனத் தில் செல்லும் போது மிகவும் கவனமாக ஓட்ட வேண்டும். பேருந்து பேருந்து நிறுத்தம், பெட்ரோல் பங்க் ஆகிய இடங்க ளில் விபத்து அதிகமாக நடக்கிறது, என்றார். முன்னதாக, சீட் பெல்ட் அணிதல் விழிப்புணர்வு வாகன  பேரணி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் மோட்டார் வாகன ஆய்வாளர்கள் தரணிதர், வெங்கட்டகிரி, குலோத்துங்கன், ஓட்டுநர் பயிற்சி உரிமையாளர் சங்க தலைவர் ரபீக் ஜான், செயலாளர் சரவணன், பொருளாளர் மோகன்குமார் உட்பட  பலர் கலந்து கொண்டனர்.

வீட்டுமனை கேட்டு தர்ணா

வீட்டுமனை கேட்டு தர்ணா ஈரோடு, பிப். 12- ஈரோடு வெட்டுக்காட்டு வலசு பகுதியைச் சேர்ந்த பொது மக்கள் வீட்டுமனை கேட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலக வளா கத்தில் தர்ணாவில் ஈடுபட்டனர். ஈரோடு, வாஞ்சிநாதன் நகர், போஸ்டல் நகர் பகுதியைச்  சேர்ந்த பொதுமக்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு கொடுக்க வந்தனர். அப்போது திடீர் தர்ணாவில் ஈடு பட்டனர். இதுகுறித்து அவர்கள் கூறுகையில், ஈரோடு, வாஞ் சிநாதன் நகரில் 106 குடும்பத்தை சேர்ந்தவர்கள், கடந்த 60  ஆண்டுகளாக வசித்து வந்தோம். அப்பகுதி நீர் நிலை புறம் போக்கு எனக்கூறி, கடந்த 2007 முதல் எங்களை காலி செய்யும் படி கூறினர். இந்நிலையில் எங்களை காலி செய்ய வைத்து, அவ்விடம்  அரசுக்கு சொந்தமானது எனக்கூறி கம்பி வேலி அமைத்த னர். நாங்கள், அதே பகுதியில் வாடகை வீடு எடுத்து தங்கி,  கூலி வேலை செய்து வருகிறோம்.  எங்களுடன் வசித்த சிலருக்கு லக்காபுரம் உட்பட சில இடங்களில் குடியிருப்பு வழங்கி உள்ளனர். எங்களுக்கு அதே  இடத்தில் அல்லது அருகே காலி இடம் அல்லது குடியிருப்பு  வழங்க வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம். இதுவரை எங்களுக்கு இடம் வழங்கப்படவில்லை. விரை வில் நிலம் அல்லது குடியிருப்பு வழங்க வேண்டும், என  கோரினர்.

பிப்.15ல் கல்விக்கடன் முகாம்

பிப்.15ல் கல்விக்கடன் முகாம் நாமக்கல், பிப்.12- நாமக்கல் ஞானமணி கல்லூரி வளாகத்தில், மாணவ, மாணவிகளுக்கான கல்விக்கடன் முகாம் பிப்.15 ஆம் தேதி  நடைபெற உள்ளது. இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் ச.உமா விடுத்துள்ள செய் திக்குறிப்பில் கூறியிருப்பதாவது, மாவட்ட நிர்வாகமும், மாவட்ட முன்னோடி வங்கியும் (இந்தியன் வங்கி) இணைந்து  நடத்தும் கல்விக்கடன் முகாம் அனைத்து வங்கிகளின் சார்பில்  வரும் பிப்.15 ஆம் தேதி காலை 9 மணி அளவில் ஞானமணி  கல்லூரி வளாகத்தில் (NH -7) பாச்சலில் நடைபெற உள்ளது. இதில் ஏற்கனவே நாமக்கல் பாவை கல்லூரி, ஞானமணி கல் லூரி, திருசெங்கோடு விவேகானந்தர் கல்லூரி, கேஎஸ்ஆர்  கல்லூரி உள்ளிட்ட கல்வி நிறுவனங்களில் பெறப்பட்ட கல்விக் கடன் விண்ணப்பங்களில் தகுதியான மாணவர்களுக்கு ஒப்பு தல் ஆணை வழங்கப்படுகிறது. மேலும், முகாமில் நாமக்கல்  மாவட்டத்தில் உள்ள கல்லூரிகளில் பயிலும் மாணவர்கள் புதி தாக கல்விக்கடன் பெற விண்ணப்பங்கள் இணையத்தில் பதி வேற்ற வசதிகள் செய்யப்பட்டுள்ளது. கல்விக்கடனுக்கு இது வரை விண்ணப்பிக்காத மாணவர்கள் ஆதார், பான்கார்டு  மற்றும் கல்வி தொடர்பான ஆவணங்களுடன் கலந்து கொண்டு, தங்கள் விண்ணப்பங்களை www.vidyalakshmi. com என்ற இணையதளத்தில் பதிவு செய்து கொள்ளலாம். பெறப்பட்ட விண்ணப்பங்கள் வங்கி விதிமுறைகளுக்கு உட் பட்டு பரிசீலனை செய்து உடனடியாக கல்விக் கடன் அனு மதி வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தியாகி இலட்சுமண அய்யரின் பிறந்தநாள் விழா கோபியில் பிப்.22 ஆம் தேதி நடக்கிறது!

கோபி, பிப்.12- கோபிசெட்டிபாளையத்தில் பிப்.22 ஆம்  தேதி தியாகி இலட்சுமண அய்யரின் பிறந்த  நாள் விழா நடைபெற உள்ளதென தெரிவிக் கப்பட்டுள்ளது. ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளை யத்தில் தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன் னனி விரிவுபட்ட கூட்டம், தாலுகாத் தலைவர் மாரிமுத்து தலைமையில், செயலாளர் ரங்க சாமி முன்னிலையில் நடைபெற்றது. இக்கூட் டத்தில் பிப்.22 ஆம் தேதியன்று சுதந்திர  போராட்ட தியாகி இலட்சுமண அய்யரின்  பிறந்தநாள் விழாவை மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் மத்தியக்குழு உறுப்பி னர் பி.சண்முகம் தலைமையில் சிறப்பாக  கொண்டாடுவது என தீரமானம் நிறைவேற் றப்பட்டது. மேலும், ஒடுக்கப்பட்ட மக்களுக் காக அயராது உழைத்த தியாகி இலட்சுமண அய்யரின் வாழ்க்கை வரலாற்று நூலை பொதுமக்களிடம் கொண்டு சேர்ப்பது உள் ளிட்ட பல்வேறு ஆலோசனைகள் மேற்கொள் ளப்பட்டன. இக்கூட்டத்தில் தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாவட்டச் செயலா ளர் அண்ணாதுரை, மாவட்ட செயற்குழு உறுப்பினர் முனுசாமி, மாவட்டக்குழு உறுப் பினர்கள் முத்துசாமி, கிருஷ்ணவேணி உள் ளிட்டோர் கலந்து கொண்டனர்.