கோவை, அக்.10- வேளாண் பட்டப்படிப்பு படித்த இளைஞர்களை தொழில்முனை வோ ராக்கும் திட்டம், கோவை மாவட்டத் தில் உள்ள 56 கிராம ஊராட்சிகளி லும் செயல்படுத்த முடிவு செய்யப்பட் டுள்ளது. இதுகுறித்து கோவை மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர் (பொறுப்பு) ஷபி அகமது வெளி யிட்டடுள்ள செய்திக்குறிப்பில் கூறியி ருப்பதாவது: கோவை மாவட்டத்தில் உள்ள 56 கிராம ஊராட்சிகளிலும் செயல் படுத்தப்பட உள்ளது. அக்ரி கிளினிக் அல்லது வேளாண் சார்ந்த தொழில் தொடங்குவதற்கு பட்டதாரி ஒருவ ருக்கு தலா ரூ.1 லட்சம் வீதம் 5 பட்டதாரி இளைஞர்களுக்கு நிதியுதவி பின் னேற்பு மானியமாக வழங்கப்படும். பிரதமரின் உணவு பதப்படுத்தும் குறு நிறுவனங்களை முறைப்படுத்தும் திட்டம் அல்லது வேளாண்மை உட்கட்ட மைப்பு நிதி திட்டத்தின் கீழ் பயன டைந்த தகுதியுடைய பயனாளிகளுக்கு மட்டும் 25 சதவீதம் மானியமாக அதிக பட்ச நிதி உதவியாக ரூ.1 லட்சம் பின் னேற்பு மூலதன மானியமாக வழங்கப் படும். தேர்ந்தெடுக்கப்பட்ட பயனாளி கள் அரசு வங்கி மற்றும் தனியார் நிறு வனங்களிடம் இருந்து கடன் பெற லாம். இத்திட்டத்தில் பயன் பெற விரும் புவோரின் வயது 21 முதல் 40-க்குள் இருக்க வேண்டும். வேளாண்மை, தோட்டக்கலை, வேளாண்மை பொறி யியல் பிரிவில் குறைந்தபட்சம் இள நிலை பட்டப்படிப்பு முடித்தவராகவும், அரசு மற்றும் தனியார் நிறுவனத்தில் பணி புரியாதவராகவும் இருக்க வேண் டும். கணினி திறன் பெற்ற மற்றும் குடும் பத்துக்கு ஒரு வேளாண் பட்டதாரி மட் டுமே நிதியுதவி பெற தகுதியுடையவர். வங்கி மூலம் கடன் பெற்று தொழில் புரிவோரது நிறுவனத்தின் உரிமையா னது தனியுரிமையாகவும், தனது மூல தனத்தில் வேளாண் மற்றும் வேளாண் சார்ந்த பிரதமரின் உணவு பதப்படுத்தும் குறு நிறுவனங்களை முறைப்படுத்தும் திட்டம், வேளாண்மை உட்கட்டமைப்பு நிதியின் கீழ் அனுமதிக்கக்கூடிய திட் டங்களின் அடிப்படையில் சுய தொழில் கள் நிறுவ வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.