உடுமலை, மார்ச் 19 - உடுமலை அருகே, வீட்டுமனை இல் லாத ஏழை மக்கள் அரசு நிலத்தில் குடிசை அமைக்க குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. திருப்பூர் மாவட்டம், உடுமலை தாலுகா, குடிமங்கலம் ஒன்றியத்திற் குட்பட்ட வடுகபாளையம் கிராமத்தில் வீட்டுமனை இல்லாத ஏழை மக்கள், தங்களுக்கு பட்டா வழங்க வேண்டும் என தொடர்ந்து கோரி வந்தனர். இந்நிலையில், குடிமங்கலம் பிர்க்கா வடுகபாளையம் கிராமத்தில் க.ச.எண் 301சி2 என்ற எண்ணில் தமிழ் நாடு அரசு ஆளுநர் என்ற பெயரில் சுமார் 2.98 ஏக்கர் பரப்பளவு நிலம் உள்ளது. அந்த நிலத்தில், அவர்கள் குடிசைகள் அமைக்க முயன்றனர். இந்த நிலம் முழுவதும் எந்த பயன் பாடும் இல்லாமல் பல ஆண்டுகள் தரிசு நிலமாக இருக்கிறது என மக்கள் கூறினார். அதேசமயம் இப்பகுதியில் ஒரு சென்ட் நிலம் கூட இல்லாமல் பல தலித் குடும்பங்கள் ஒரே வீட்டில் மிகுந்த சிரமங்களுக்கு மத்தியில் வசித்து வருவ தாக தெரிவித்தனர். இந்த மக்களுக்கு தமிழ்நாடு அரசு இலவசமாக வீட்டு மனை பட்டா வழங்க வேண்டும் என்று பல கட்ட போராட்டங்கள் நடத்தப்பட் டுள்ளன. வருவாய் குறைதீர் கூட்டங் களில் வீட்டுமனை கேட்டும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இந்நிலையில், விடுதலை சிறுத்தை கள் கட்சியின் நிர்வாகி விடுதலை மணி தலைமையில் இந்த நிலத்தில் குடிசை கள் அமைக்கும் போராட்டம் மேற் கொள்ளப்பட்டது. இதனால் இப்பகுதி முழுவதும் பரபரப்பு ஏற்பட்டது. இதையறிந்து, வருவாய்த்துறை யினர் மற்றும் காவல்துறை அதிகாரிகள் போராட்டம் நடந்த இடத்திற்கு வந்து போராட்டக்காரர்களிடம் பேச்சு வார்த்தை மேற்கொண்டனர். இதை தொடர்ந்து குடிசை அமைக்க போராட் டம் நிறுத்தப்பட்டது. இது குறித்து வட்டாட்சியர் கண்ணா மணியிடம் கேட்ட போது, தமிழ்நாடு அரசின் பயன்பாட்டிற்கு என்று இருக் கும் இடத்தில், தலித் மக்களுக்கு நிபந் தனை பட்டா வழங்க வேண்டும் என்று கூறி குடிசை போட முயன்ற பொது மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தப் பட்டது. இதில், திங்களன்று (இன்று) வட்டாட்சியர் அலுவலகத்தில் பேசி முடிவு செய்யலாம் என்று அவர் களிடம் தெரிவித்துள்ளதாக கூறினார்.