திருப்பூர், பிப்.6- மதசார்பற்ற ஜனநாயக முற்போக்குக் கூட்டணியின் 1ஆவது வார்டு வேட்பாளர் மீனாட்சியை ஆதரித்து ஞாயி றன்று ஊழியர் கூட்டம் நடைபெற்றது. மிகப்பெரும் வாக்கு வித்தியாசத்தில் மார்க்சிஸ்ட் கட்சி வேட்பாளர் ஜி.மீனாட் சியை வெற்றி பெறச் செய்வதென இக்கூட்டத்தில் தீர்மானிக் கப்பட்டது. திராவிட முன்னேற்றக் கழகத்தின் வார்டு செயலாளர் மகேந்திரன் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு உறுப்பி னர் கே.காமராஜ், திராவிட முன்னேற்றக் கழகம் 1வது மண் டல செயலாளர் கோ.ராமதாஸ், இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் மாநில பொதுக்குழு உறுப்பினர் ஏ.ராமசாமி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட நிர்வாக குழு உறுப் பினர் செல்வராஜ், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் செல்வக்குமார் மற் றும் ராமசாமி, மனித நேய மக்கள் கட்சி அசன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வடக்கு ஒன்றிய செயலாளர் ஆர்.காளியப் பன் ஆகியோர் மார்க்சிஸ்ட் கட்சி வேட்பாளர் ஜி.மீனாட் சிக்கு ஆதரவு கோரி பேசினர். வேட்பாளர் ஜி.மீனாட்சி உரை யாற்றினார். இக்கூட்டத்தில், முன்னாள் மாவட்ட குழு உறுப்பினர் கே. பழனிச்சாமி, முன்னாள் மாமன்ற உறுப்பினர் கே. மாரப் பன், மாவட்ட குழு உறுப்பினர் ஏ.சிகாமணி மற்றும் கூட்டணி கட்சியின் ஊழியர்கள் பங்கேற்றனர். மார்க்சிஸ்ட் கட்சியின் நெசவாளர் காலனி கிளைச் செயலாளர் மகேந்திரன் நன்றி கூறினார்.