உதகை,ஏப். 9- முதுமலை புலிகள் காப்பகம், மசினகுடி கோட்டம், சிங்காரா வனச்சரகத்திற்குட்பட்ட பகுதியில் ஒற்றை ஆண் யானை கடும் வெயில் மற்றும் வறட்சி காரணமாக உயிரி ழந்தது நீலகிரி மாவட்டம், கூடலூர் அடுத்த முதுமலை புலிகள் காப்பகம், மசினகுடி கோட்டம், சிங்காரா வனச்சரகத்திற்குட் பட்ட பகுதியில் கோடை வெயில் தாக்கம் அதிகரித்து வந்த நிலையில் வனவிலங்குகள் உணவு மற்றும் நீரின்றி தவித்து வருகின்றன. இரண்டு நாட்களுக்கு முன்பாக தனியார் தோட்டத்தில் ஒரு யானை மயங்கி இருந்த நிலையில் அதற்கு முதுமலை மருத்துவக் குழு சிகிச்சை அளித்து அந்த யானை யை உடல் நல்ல நிலைக்கு திரும்பிய பின்னர் அந்த யானை எழுந்து வனப்பகுதிக்கு சென்றுள்ளது. இதனை கண்கா ணிக்க குழு அமைக்கப்பட்டது பின்னர் இந்த யானையா னது கூட்டத்துடன் சேர்ந்து விட்டதாகவும் வனத்துறை அதிகா ரிகள் தெரிவித்துள்ளன. இதனை அடுத்து செவ்வாயன்று இப்பகுதியில் ஒரு ஆண் யானை உயிரிழந்து கிடந்தது. பின்பு அங்கு வந்த வனக்கால்நடை உதவி மருத்துவர், துணை இயக்குநர் மசினகுடி கோட்டம், முன்னிலையில் யானைக்கு பிரேத பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. பிரேத பரிசோத னையின் முடிவில் யானைக்கு வயது சுமார் 8 இருக்க லாம் எனவும் யானையானது உடல் சத்து குறைபாடு மற்றும் உடல் பலவீனம் காரணமாக இறந்திருப்பது கண்டுபிடிக் கப்பட்டது. மேலும் யானையின் உள்ளுருப்புகளில் ஒட் டுண்ணி புழுக்கள் அதிக அளவில் இருப்பது கண்டுபி டிக்கப்பட்டது. தொடர்ந்து கோடை வெயில் அதிகரித்து வரும் நிலையில் வனப்பகுதிகளில் உணவையும் நீரையும் தேடி வரும் வனவிலங்குகளுக்கு போதுமான உணவு, தண்ணீர் அளிக்க ஏற்பாடுகள் செய்திட வேண்டும் என சூழ லியலாளர்கள் வலியுறுத்துகின்றனர்.