ஈரோடு பெருந்துறையில் இன்று சிபிஎம் மண்டலப் பேரவை சென்னை
, பிப். 11- மார்க்சிஸ்ட் கட்சியின் அகில இந்திய 24 ஆவது மாநாட்டு நகல் தீர்மானம் விளக்க மண்டலப் பேரவை, ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் இன்று (புதன் கிழமை) நடைபெற உள்ளது. மதுரையில் ஏப்ரல் 2 ஆம்தேதி முதல் 6 ஆம்தேதி வரையில் நடைபெறும் மார்க்சிஸ்ட் கட்சியின் அகில இந்திய மாநாட்டில் நிறைவேற்றப்பட உள்ள தீர்மானத் தின் நகல் அறிக்கை கட்சியின் மத்தியக்குழுவால் வெளி யிடப்பட்டுள்ளது. இந்த நகல் தீர்மான விளக்க மண்டலப் பேரவை ஈரோடு மாவட்டம் பெருந்துறை சக்தி மஹாலில் (பெருந்துறை பழைய பேருந்து நிலையம் அருகில்) புதனன்று நடை பெற உள்ளது. காலை 10 மணிக்கு துவங்கும் இந்த மண்டலப் பேரவை கூட்டத்தில், மார்க்சிஸ்ட் கட்சியின் மத்தியக்குழு உறுப்பினர் உ.வாசுகி, மாநில செயற் குழு உறுப்பினர் க.கனகராஜ் ஆகியோர் பங்கேற்று நகல் தீர்மானத்தின் முக்கிய அம்சங்கள் குறித்து உரை யாற்ற உள்ளனர். இந்த பேரவை கூட்டத்திற்கு, ஈரோடு, நாமக்கல், சேலம், கிருஷ்ணகிரி, கரூர், தர்மபுரி, திருப் பூர், கோவை, நீலகிரி மாவட்ட மாவட்டக்குழு உறுப்பினர் கள், மாவட்டக்குழு அல்லாத இடைக்குழு செயலா ளர்கள், மத்தியதர அரங்கமாநில ப்ராக்சன் உறுப்பினர் கள் பங்கேற்க வேண்டும் என கட்சியின் மாநிலச்செயலா ளர் பெ.சண்முகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரி வித்துள்ளார். மேலதிக தகவல்களுக்கு, ஜி.பழனிசாமி (ஈரோடு மாவட்ட செயற்குழு உறுப்பினர்) 94438 38890, ஆர். அர்ச்சுனன் (பெருந்துறை இடைக்கமிட்டி செயலா ளர்) 9487596299 தொடர்பு கொள்ளலாம் என தெரி விக்கப்பட்டுள்ளது.
உழவர் சந்தையில் பூண்டு விலை சரிவு பூண்டு விற்பனை செய்ய விவசாயிகள் மறுப்பு உதகை,
பிப்.11- உதகை உழவர் சந்தையில் பூண்டு விலை ரூ.100 மற்றும் ரூ.80 என நிர்ணயக்கப்பட்டதால், விவசாயிகள் பூண்டு விற்பனை செய்ய மறுத்து கடைகளை மூடி னர். நீலகிரி மாவட்டம், உதகையில் கடந்த சில மாதங்க ளாக பூண்டு கிலோ ரூ.350 முதல் ரூ.600 வரை விற்கப்பட்டது. பூண்டு விலை குறையாததால் மக்கள் கவலை கொண்டிருந்தனர். பூண்டுக்கு அதிக விலை கிடைத்ததால் நீலகிரி மாவட்டத்தில் பல ஏக்கரில் பூண்டு பயிரிடப்பட்டது. இந்நிலையில், கடந்த சில நாட்களாக பூண்டு விலை சரிந்தது. திங்களன்று நிலவரப்படி, உதகை பூண்டு கிலோ ரூ.100 ரூபாய், பிற மாநில பூண்டு கிலோ, ரூ.80க்கு விற்கப்பட்டு வருகிறது. உதகை உழவர் சந்தையில் பூண்டு விலை ரூ.100 மற்றும் ரூ.80 என நிர்ணயிக்கப்பட்ட தால், விவசாயிகள் பூண்டு விற்பனை செய்ய மறுத்து திங்களன்று கடைகளை திறக்கவில்லை.