districts

img

தார்ச்சாலை அமைக்க வலியுறுத்தி சிபிஎம் கையெழுத்து இயக்கம்

அவிநாசி, நவ.14- அவிநாசி அருகே தொட்களம்புதூர் பகுதியில் தார்ச்சாலை அமைக்க வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் ஞாயிறன்று கையெழுத்து இயக்கத்தில் ஈடுபட்டனர். அவிநாசி ஒன்றியம், ராமநாதபுரம் ஊராட்சிக்குட்பட்ட 3ஆவது வார்டு தொட்களம்புதூர் பகுதி விநாயகர் கோவில் பகுதியில் முறையான சாலை  வசதி இல்லாமல் மிகவும் அவதிப்பட்டு வருகின்றனர். குறிப்பாக, மழைக் காலங்களில் மழை நீர் தேங்குவதால் சாலையில் செல்ல முடியாமல் பாத சாரிகள், வாகன ஓட்டிகளுக்கு விபத்து ஏற்படுகிறது. மேலும் முறையான சாக்கடை கால் வாய் இல்லாததால், சாக்கடை நீர்  சாலையில் தேங்கும் அபாய நிலை உரு வாகியுள்ளது. இதன் மூலமாக நோய் தொற்று அபாயம் ஏற்பட்டுள்ளது. உடனடியாக தார்ச்சாலை வசதி மற்றும்  சாக்கடை கால்வாய் அமைக்க கோரி  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தொட் களம்புதூர் கிளை சார்பாக மக்களை சந்தித்து கையெழுத்து இயக்கம் நடத்தி  வருகின்றனர். நிறைவாக வட்டார வளர்ச்சி அலுவலர் சந்தித்து மனு அளிக்க உள்ளனர்.  இதில், சிஐடியு ஆட்டோ தொழி லாளர் சங்கத்தின் கருவலூர் கிளை செய லாளர் சரவணன் உட்பட பலர் கலந்து  கொண்டார்.