districts

img

சிபிஎம் எஸ்.எஸ்.குளம் கிழக்கு இடைக்குழு செயலாளராக எஸ்.வெள்ளியங்கிரி தேர்வு

கோவை, நவ.25- மார்க்சிஸ்ட் கட்சியின் எஸ். எஸ்.குளம் கிழக்கு இடைக்குழு  செயலாளராக எஸ்.வெள்ளியங் கிரி தேர்வு செய்யப்பட்டார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட் சியின் கோவை மாவட்டம், எஸ். எஸ்.குளம் கிழக்கு இடைக்குழு முதல் மாநாடு காளப்பட்டி ஸ்ரீ வடுகநாதர் கோவில் மண்டபம், தோழர் கே.கோபால் நினைவரங்கத்தில் ஞாயிறன்று நடைபெற்றது. இம்மாநாட்டில், இடைக்குழு உறுப்பினர் ஏ.புனிதா செங் கொடி ஏற்றி வைத்தார். எஸ்.வெள்ளிங்கிரி வர வேற்றார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் கே.மனோகரன் துவக்கவுரையாற்றினார். வேலையறிக்கையை  இடைக்குழு செயலா ளர் ஆர்.கோபால் முன் வைத்தார். மாவட்ட  செயற்குழு உறுப்பினர் வி.தெய்வேந்திரன் மாநாட்டை வாழ்த்திப் பேசினார்.  இதனைத் தொடர்ந்து, எஸ். எஸ்.குளம் கிழக்கு இடைக் குழு  செயலாளராக எஸ்.வெள்ளியங் கிரி மற்றும் 11 பேர் கொண்ட  இடைக் குழு உறுப்பினர்கள்  தேர்வு செய்யப்பட்டனர். மாவட்ட செயற்குழு உறுப்பி னர் கே.எஸ்‌கனகராஜ் நிறைவு ரையாற்றினார். முடிவில், எஸ். ஜெகதீஸ்வரன் நன்றி கூறினார். இதில், எஸ்.எஸ்.குளம் உள்ளிட்ட பகுதி களை மாநகராட்சியுடன் இணைப்பதை கைவிட வேண்டும். கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருள் விற்பனையை தடுக்க வேண்டும். மாநகராட்சி சொத்து வரியை ரத்து  செய்ய வேண்டும். எஸ்.எஸ்.குளம் கிழக்கு ஒன்றியத்துக்கு உட்பட்ட பகுதிகளில் குண் டும் குழியுமாக உள்ள சாலைகளை சீரமைக்க  வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டது.