districts

img

தொழிலாளர் விரோத போக்கை கடைபிடிக்கும் ஹட்சன் நிறுவனத்தை கண்டித்து சிபிஎம் ஆவேசம்

தருமபுரி, ஜன.12- தொழிலாளர் விரோத போக்கை கடை பிடிக்கும் ஹட்சன் ‌பால் நிறுவனம் மீது  நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு  ஆர்ப் பாட்டத்தில் ஈடுபட்டனர். தருமபுரி மாவட்டம், பாலக்கோடு வட் டத்தில் ஹட்சன் அக்ரோ புராடெக்ட் என்கிற  பால் மற்றும் பால் சார்ந்த உற்பத்தி நிறுவ னம் கடந்த 12 ஆண்டுகளாக செயல்பட்டு  வருகிறது. இந்நிறுவனத்தில் நிரந்தர தொழி லாளர்கள் 400 பேரும், ஒப்பந்த தொழிலாளர் கள் 300 பேர் என மொத்தம் 700 பேர் பணி யாற்றி வருகின்றனர். இத்தொழிற்சாலை  ஆரம்பிக்கப்பட்ட நாள் முதல் தொழிலா ளர்களுக்கு சட்டப்படியான சம்பளம் உள்ளிட்ட பண சலுகைகள் மறுக்கப்பட்டு  வருகிறது. இச்சூழலில் தொழிற்சாலையில் தொழிலாளர்களின் உரிமைகளுக்கு சங்கம்  ஆரம்பித்ததால் தொழிலாளர்கள் 100க்கும் மேற்பட்டோரை நிர்வாகம் வெளி மாநி லங்களுக்கு பணிமாறுதல் செய்துள்ளது. இதனை திரும்பப்பெற வேண்டும். தொழி லாளர் நலச்சட்டங்களை மீறும் ஹட்சன்‌  நிறுவனம் மீது நடவடிக்கை எடுக்க வேண் டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக் கைகளை வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கட்சி யினர் புதனன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடு பட்டனர்.  தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவல கம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு சிபிஎம் மாவட்ட செயலாளர் ஏ.குமார் தலைமை வகித்தார். இதில், மாவட்ட செயற் குழு உறுப்பினர்கள் எம்.மாரிமுத்து, சி.நாக ராசன், எம்.முத்து, ஆர்.சிசுபாலன், சோ. அருச்சுணன், வே.விசுவநாதன், ஆர்.சின்ன சாமி, நகரச் செயலாளர் ஆர்.ஜோதிபாசு, ஒன்றிய செயலாளர்கள் என்.கந்தசாமி, எஸ்.எஸ்சின்னராஜ், தனுஷன், மாவட்ட குழு உறுப்பினர்கள் டி.எஸ்.ராமச்சந்திரன், கே.குப்புசாமி, கே.எல்லப்பன், வழக்கறி ஞர் டி.மாதையன், ஜி.நாகராஜன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.