புதுதில்லி, செப்.5- உடல்நலிவுற்றுள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக்குழு உறுப்பினரும் காஷ்மீர் சட்டமன்றத் தில் நான்கு முறை உறுப்பினராக வும் இருந்த தோழர் முகமது யூசுப் தாரிகாமியை மருத்துவ சிகிச்சைக் காக புதுதில்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதித்திட வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருக்கிறது. இதனை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வரவேற்றுள்ளது. இது தொடர்பாக கட்சியின் அர சியல் தலைமைக்குழு வெளி யிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டி ருப்பதாவது: தோழர் முகமது யூசுப் தாரிகாமி யை, முறையான மருத்துவ சிகிச்சைக் காக, புதுதில்லியில் உள்ள எய்ம்ஸ் (அகில இந்திய மருத்துவ அறிவியல் கழக) மருத்துவமனையில் அனுமதித்திட வேண்டும் என்றும், அவர் விரும்பும் குடும்ப உறுப்பினர் ஒருவர் அவருடன் தங்கியிருக்க அனுமதிக்கப்படுவதாகவும், உச்சநீதி மன்றத்தின் தலைமை நீதிபதி உத்தரவு பிறப்பித்திருக்கிறார். இதனை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு வரவேற்கிறது. இன்று (வியாழன் ) நீதிமன்றத் தில் நடைபெற்ற விசாரணையின் போது, கட்சியின் பொதுச் செய லாளர் சீத்தாராம் யெச்சூரியால் தாக்கல் செய்யப்பட்ட உறுதி வாக்குமூலத்தை (அபிடவிட்டை) பரிசீலனை செய்த பின் உச்சநீதி மன்றம் இவ்வாறு உத்தரவு பிறப்பித் துள்ளது. சீத்தாராம் யெச்சூரி தாக்கல் செய்துள்ள உறுதிவாக்குமூலத்தில், முகமது யூசுப் தாரிகாமி மீது எவ்விதக் குற்றச்சாட்டும் இல்லாத நிலையிலும்கூட, சட்டவிரோதமான முறையில் அவர் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ளார் என்று சுட்டிக்காட்டி இருந்தார். உண்மையில், அவரை வீட்டுக் காவலில் வைத்திட அரசாங்கத்தின் தரப்பில் எழுத்துப்பூர்வமான உத்தரவு எதுவும் கிடையாது. மாறாக அரசின் வாய்மொழி உத்தரவு களின்மூலமே இவ்வாறு அவர் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டிந் ந்தார் என்றும் சீத்தாராம் யெச்சூரி தன் உறுதி வாக்குமூலத்தில் குறிப்பி ட்டிருந்தார். இவ்வழக்கில், சீத்தாராம் யெச்சூரி தாக்கல் செய்திட்ட ஆட்கொ ணர் மனுவின் மீது உச்சநீதிமன்றம் மத்திய அரசுக்கு நோட்டீஸ் அனுப்பி இருக்கிறது. அரசாங்கத்திட மிருந்து இதற்குப் பதில் வந்தபின் உச்சநீதிமன்றத்தில் விசாரணை தொடரும்.