அவிநாசி, நவ. 25 – தூய்மைக் காவலர்களுக்கு அரசு நிர்ணயித்த ஊதியம் வழங்க வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர் பி. முத்துச்சாமி வலியுறுத்தினார். அவிநாசியில் ஊராட்சி ஒன்றியக் குழுக் கூட்டம் ஊராட்சி ஒன்றியத் தலை வர் ஜெகதீசன் தலைமையில் வெள்ளி யன்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த ஒன்றிய கவுன்சிலர் பி.முத்துச் சாமி பேசுகையில், வஞ்சிபாளையத் திலிருந்து முருகம்பாளையம் செல்லும் சாலையை புதுப்பித்து உடனடியாக தீர்வு காண வேண்டும். வஞ்சிபாளை யம் வருகை தரும் பேருந்துகள் ஆங் காங்கே நின்று விடுகின்றன.
இதனால் பயணிகள் குழப்பமடைகின்றனர். இதற்கு தீர்வு ஏற்படுத்தும் வகையில் வஞ்சிபாளையம் ரயில்வே பாலம் அருகே பேருந்துகளை நிறுத்த வேண் டும். 2006 முதல் 2013ஆம் ஆண்டு கால கட்டத்தில் பணியில் சேர்ந்த தூய்மை காவலர்களுக்கு, ரூ.6600 மாத ஊதி யம் வழங்க வேண்டும். ஆனால் ரூ.3000 மட்டுமே வழங்கப்படுகிறது. இது சரி யல்ல. அரசு நிர்ணயித்த ஊதியத்தை குறைக்காமல் முழுமையாக வழங்க வேண்டும். உள்ளாட்சித் துறையில் பத்தாண்டுகளுக்கு மேலாக பணி யாற்றி வரும் ஊழியர்களை நிரந்தர பணியாளராக நியமனம் செய்ய வேண் டும். கணியாம்பூண்டி பகுதியில் சமு தாயம் நலக்கூடம் அமைத்து தர வேண்டும். தெக்கலூர் பகுதியில் ஆயத்த ஆடை நிறுவனத்தில் சுத்திகரிக் காமல் கழிவு நீர் வெளியேற்றப்ப டுவதால், பொதுமக்கள் அவ்வழியில் செல்ல முடியாத அளவில் துர்நாற்றம் ஏற்படுகிறது, உடனடியாக சுகாதாரத் துறையினர் ஆய்வு மேற்கொண்டு, கழிவு நீர் வெளியேற்றுவதை தடுத்து நிறுத்த வேண்டும், அரசு பள்ளிகளில் சுவர்களை சுத்தம் செய்யாமல் முறை யில்லாமல் வர்ணம் அடித்து வருகின்ற னர், முறையாக வர்ணம் அடிக்க வேண் டும், அதேபோல பள்ளிக்கு மட்டும் வர் ணம் அடிக்கிறார்கள் பள்ளி சமையல் கூடம், கழிப்பிடங்களுக்கும் வர்ணம் அடிக்க வேண்டும் என வலியுறுத்தி யுனார்.
இதனைத் தொடர்ந்து திமுகவைச் சேர்ந்த சேது மாதவன் பேசும்போது தேவம்பாளையம் இந்திரா காலனி, பெரியாயிபாளையம் காமராஜ்நகர், குளத்துப்பாளையம் ஸ்ரீராம் நகரில் தார் சாலை அமைக்க வேண்டும். அரசுப் பள்ளி சத்துணவுக்கூடங்களில் சமை யலர் மற்றும் சமையலர்கள் உதவியா ளர் இல்லாமல் அவதிப்பட்டு வருகின்ற னர். காலியாக இருக்கும் இடங்களுக்கு, பணியாளர்களை சேர்க்க வேண்டும் என் றார். ஒன்றிய கவுன்சிலர் கார்த்தி கேயன் பேசுகையில், ஊராட்சி ஒன்றி யக்குழு கூட்டத்திற்கு துறைசார்ந்த அதி காரிகள் வருகை தருகின்றனர். ஆனால் குறைகள் நிவர்த்தி அடைவதில்லை, வட்டாட்சியர் அலுவலகத்திற்கு பொதுமக்கள் அடிப்படை தேவை களுக்கு மனு கொடுப்பதற்கும் பல வேலைகளுக்கும் சென்றால் வெயிலில் காத்துக் கிடக்கும் சூழல் உருவாகிறது, அதேபோல குடிப்பதற்கு தண்ணீர் கிடைப்பதில்லை, இதன் காரணமாக பொதுமக்கள் அவதிப்படுகின்றனர், வட்டாட்சியர் அலுவலகத்தில் பொது மக்கள் அமர்வதற்கு இருக்கை ஏற்படுத் தவும், தண்ணீர் வசதி கழிப்பறை வசதி கள் உள்ளிட்டவை ஏற்படுத்தித் தர வேண்டும் என கூறினார். இறுதியாக ஊராட்சி ஒன்றியத் தலைவர் ஜெகதீசன் பேசுகையில், வட் டாட்சியர் அலுவலகமே வெள்ளைக் காரர் காலத்தில் இருப்பதைப் போலத் தான் உள்ளது. பொதுமக்கள் மனு கொடுக்கச் சென்றால், அடிப்படை குறைகளை கூற சென்றால் வட்டாட் சியர் மேடையில் அமர்ந்தும் பொது மக்கள் கீழே நின்றபடியும் பேசும் சூழ் நிலை இருக்கிறது. இந்த சூழ்நிலை யை மாற்ற வேண்டும், ஒன்றிய கவுன்சி லர்கள் கூறியதை விரைவில் நிறை வேற்றித் தருவதாக தெரிவித்தார்.