districts

img

மோடி அரசிற்கெதிராய் சிபிஎம் கோபாவேசம்: ஆயிரக்கணக்கானோர் கைது

கோவை, செப்.7- விலைவாசி உயர்வு, வேலை யில்லா திண்டாட்டத்திற்கு காரணமான மோடி தலைமையிலான ஒன்றிய பாஜக அரசை கண்டித்து தமிழகமெங்கும் மார்க் சிஸ்ட் கட்சியினர் நடத்திய ஆவேச மறி யல் போராட்டத்தில் லட்சத்திற்கும் மேற் பட்டோர் கைதாகினர்.   ஆண்டுக்கு இரண்டு கோடிப்பே ருக்கு வேலை, விவசாயிகள் விளை வித்த பொருட்களுக்கு ஒன்றரை மடங்கு கூடுதல் விலை உள்ளிட்ட பொய் வாக் குறுதி அளித்து ஒன்றியத்தில் ஆட்சிக்கு வந்தது மோடி அரசு. அதிகாரத்தில் அமர்ந்த பிறகு, கார்ப்ரேட்டுகளுக்கு சேவகம் செய்வதற்கென்ற முழுநேர மும் உழைக்கிறது. மோடியின் 9 ஆண்டு  கால ஆட்சியில், வேலையின்மை தலை விரித்தாடுகிறது, விலைவாசி விண்ணை முட்டுகிறது. உழைக்கும் மக்களை அவ திக்குள்ளாக்கி வரும், ஒன்றிய மோடி அரசை கண்டித்து, செப்.7 தமிழகம் தழு விய மறியல் போராட்டத்திற்கு மார்க் சிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு அறை கூவல் விடுத்திருந்தது. இதனையேற்று வியாழனன்று தமிழகம் முழுவதும் ரயில் மறியல், ஒன்றிய அரசு அலுவல கங்கள் முற்றுகை என ஆவேச போராட் டத்தில் லட்சத்திற்கும் மேற்பட்டோர் பங் கேற்று கைதாகினர். கோவை மாவட்டத்தில், பிஎஸ் என்எல் தலைமையகம் முன்பு நடை பெற்ற போராட்டத்திற்கு மார்க்சிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பி னர் என்.குனசேகரன் தலைமை வகித் தார். இதில், கட்சியின் மாவட்ட செயற் குழு உறுப்பினர்கள் எஸ்.கிருஷ்ண மூர்த்தி, முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் யு.கே.வெள்ளிங்கிரி, என். ஆர்.முருகேசன், பீளமேடு, சிங்கை,  வடக்கு, கிழக்கு, மேற்கு, பேரூர், தொண் டாமுத்தூர் ஆகிய பகுதிக்குழுவிற்குட் பட்ட 500க்கும் மேற்பட்டோர் ஒன்றிய  அரசுக்கு எதிராக ஆவேச முழக்கமிட்டு கைதாகினர்.

முன்னதாக, என்.குணசேகரன் செய் தியாளர்களிடம் கூறுகையில், ஒன்றிய பாஜக அரசு அனைத்து வகையிலும் தோல்வியை தழுவி உள்ளது. அத்தியா வசிய பொருட்களின் விலை மோடி ஆட் சிக்கு வந்த இந்த 9 ஆண்டுகளில் பல மடங்கு உயர்ந்துள்ளது. அடித்தட்டு மக் களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக் கப்பட்டுள்ளது.இரண்டு முறை தேர்த லின் போதும் மோடி ஏராளமான வாக்கு றுதிகளை  வழங்கினார். இந்நேரம் 20  கோடி பேருக்கு வேலைவாய்ப்புகளை  உருவாக்கி இருக்க வேண்டும். ஆனால், ஒன்றிய அரசுத்துறையில் உள்ள காலிப் பணியிடங்களைக்கூட இந்த அரசு நிரப்ப வில்லை. வேலையில்லா திண்டாட்டம் தலைவிரித்து ஆடுகிறது. உழைக்கும் திறனுள்ள இளைஞர்கள் உள்ள இந் தியாவில், சரிபாதிக்கும் மேற்பட்ட இளைஞர்கள் சுகி, சுமோட்டா, ஓலா போன்ற நிறுவனங்களில் 2000, 5000 ரூபாய்க்கு அத்தக்கூலிகளாக பணி யாற்றும் அவலம் உள்ளது. மறுபுறம், அனைத்து வகைகளிலும் ஊழல் மலிந்த அரசாக மோடி அரசு உள்ளது. ஒன்றிய அரசின் மத்திய தணிக்கை ஆணையம் (சிஏஜி) இதனை அம்பலப்படுத்தியுள் ளது. இதில் இருந்து திசைதிருப்பத் தான், மக்களை வகுப்புவாத நடவ டிக்கையை தூண்டி விடுகிறது. உதய நிதி ஸ்டாலின் பேச்சை திரித்து கூறி  பதட்டத்தை உருவாக்குகிறது. சமூக பாதுகாப்புடன் கூடிய வேலை வேண் டும். விலைவாசி உயர்வை கட்டுப் படுத்த வேண்டும் என்கிற கோரிக்கை யோடு, ஒன்றிய அரசை கண்டித்து இந்த  மறியல் போராட்டம் நடைபெறுவதாக தெரிவித்தார். முன்னதாக, கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பி ருந்து ஊர்வலமாக சென்று பிஎஸ் என்எல் அலுவலகம் முன்பு மறியல் போராட்டம் நடைபெற்றது.  இதேபோன்று, பெரியநாயக்கன் பாளையம் பிஎஸ்என்எல் அலுவலகம் முன்பு நடைபெற்ற மறியல் போராட் டத்திற்கு மார்க்சிஸ்ட் கட்சியின் கோவை நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நட ராஜன் தலைமையேற்றார். இதில், கட்சி யின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் கே.அஜய்குமார் மற்றும் பெரியநாயக்கன் பாளையம் ஒன்றியம், இன்ஜினியரிங் அரங்கத்தை சார்ந்த 200க்கும் மேற்பட் டோர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு கைதாகினர். கோவை சூலூர் தாலுக்கா விற்குட்பட்ட இருகூர் ரயில் நிலையம் முன்பு நடைபெற்ற மறியல் போராட் டத்திற்கு மார்க்சிஸ்ட் கட்சியின் மாவட் டச் செயலாளர் சி.பத்மநாபன் தலைமை  வகித்தார். இதில், ஏரளாமானோர் பங் கேற்று கைதாகினர். 

சரவணம்பட்டி பிஎஸ்என்எல் அலு வலகம் முன்பு நடைபெற்ற முற்றுகை போராட்டத்திற்கு கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் யு.கே.சிவஞா னம் தலைமை வகித்தார். இதில், கட்சி யின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஆர்.கோபால் மற்றும் உஷா உள்ளிட்ட திரளானோர் பங்கேற்றனர். சுந்தராபுரம் தபால் நிலையம் முன்பு நடைபெற்ற மறி யல் போராட்டத்திற்கு மாவட்ட செயற் குழு உறுப்பினர் என்.ஆறுச்சாமி மற்றும் ஆர்.சாந்தா ஆகியோரும், மேட்டுப் பாளையம் ரயில் நிலையம் முன்பு நடை பெற்ற போராட்டத்தில், மாவட்ட செயற் குழு உறுப்பினர் கே.எஸ்.கனகராஜ், அன்னூர் எஸ்பிஐ வங்கி முன்பு நடை பெற்ற போராட்டத்தில், மாவட்ட செயற் குழு உறுப்பினர் கே.மனோகரன், பொள் ளாச்சி பிஎஸ்என்எல் அலுவலகம் முன்பு நடைபெற்ற மறியல் போராட்டத்தில் மாவட்ட செயற்குழு உறுப்பினர் வி.ஆர். பழனிச்சாமி, ஆனைமலை பிஎஸ் என்எல் முன்பு நடைபெற்ற போராட்டத் தில் சி.ஜோதிமணி, எம்.தினேஷ்ராஜா உட்பட மாவட்டம் முழுவதும் 1500க்கும் மேற்பட்டோர் பங்கேற்று கைதாகினர்.

திருப்பூர்

திருப்பூர் மாவட்டத்தில் 10 மையங் களில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நடத்திய மறியல் போராட்டத்தில் சுமார் 750 பெண்கள் உள்பட 2000 பேர் கைதா கினர். திருப்பூர் தெற்கு பகுதியில் முத் தமிழறிஞர் டாக்டர் கலைஞர் பேருந்து நிலையம் முன்பிருந்து மார்க்சிஸ்ட் கட்சி யின் மாநில செயற்குழு உறுப்பினர் என். பாண்டி தலைமையில் மறியல் ஊர்வ லம்  தொடங்கியது. பல்லடம் சாலை காட்டன் மார்க்கெட் தபால் நிலையம் முன்பாக மறியல் செய்வதற்காக புறப் பட்டுச் சென்றவர்களை பேருந்து நிலை யம் ரவுண்டானா அருகே காவல் துறை யினர் தடுத்து நிறுத்தி கைது செய்த னர். அதேபோல் திருப்பூர் வடக்குப் பகு தியில் கட்சியின் மாநிலக்குழு உறுப்பி னர் கே.காமராஜ் தலைமையில் நெசவா ளர் காலனி பஸ் நிறுத்தம் முன்பிருந்து ஊர்வலமாகப் புறப்பட்டு புதிய பேருந்து நிலையம் எதிரில் பிஎஸ்என்எல் அலுவ லகம் முன்பாக மறியல் செய்யச் சென்ற னர். அவர்களை காவல் துறையினர் பேருந்து நிலையம் முன்பாக தடுத்து நிறுத்தி கைது செய்தனர். அனைத்து மையங்களிலும் கணிசமான பெண்கள்  உள்பட பல நூறு பேர் பங்கேற்றனர். 750 பெண்கள் உள்பட சுமார் 2000 பேர் கைதா கினர்.

சேலம்

விலைவாசி உயர்வை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் சேலம் ஜங்ஷன் ரயில் நிலையம் முற்று கைப் போராட்டத்தில் ஈடுபட்டனர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் மேவை சண்முக ராஜா தலைமையில் நடைபெற்ற போராட்டத்தில் மாநில செயற்குழு உறுப்பினர் பி. செல்வசிங் உள்ளிட்ட திர ளானோர் பங்கேற்றனர்.  வாழப்பாடியில், பேருந்து நிலை யம் முன்புறமிருந்து பேரணியாக வந்து கனரா வங்கி முன்பு மறியல் நடைபெற் றது. இதில் 205 பேர் கலந்து கொண்டனர். இதில், தாலுகாச் செயலாளர் வி.தங்க வேல் தலைமை வகித்தார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஜி.கணபதி மற் றும் பி.கந்தசாமி உள்ளிட்ட ஏராளமா னோர் பங்கேற்றனர். சீலநாயக்கன் பட்டி பைபாஸ் பகுதியில் சிபிஎம் கிழக்கு மாநகர குழு மற்றும் பனமரத்துப்பட்டி ஒன்றிய குழு சார்பில் போராட்டம் நடை பெற்றது. இதில் மாவட்ட செயற்குழு உறுப்பினர் டி.உதயகுமார் மற்றும் பொன்.ரமணி, சுரேஷ், எ.கோவிந்தன், ஆர்.வைரமணி உள்ளிட்டு திரளானோர் பங்கேற்றனர். ஓமலூர் தாலுகா ஸ்டேட் பாங்க் அலு வலகத்தில் முன்பு என்.ஈஸ்வரன் தலை மையில் நடைபெற்ற போராட்டத்தில்,  மாவட்ட செயற்குழு ஆர். வெங்கடபதி உள்ளிட்ட திரளானோர் பங்கேற்றனர். மேச்சேரி பேருந்து நிலையம் அருகில் ஸ்டேட் பேங்க் முன்பு மறியல் போராட் டம் ஜி.மணிமுத்து தலைமையில் நடை பெற்றது. மாவட்ட செயற்குழு உறுப்பி னர் ஏ.ராமமூர்த்தி, பி.தங்கவேலு, அன் பழகன் உள்ளிட்டு நூற்றுக்கும் மேற் பட்டோர் மறியலில் பங்கேற்றனர். ஆத்தூரில் தலைமை தபால் நிலையம் முன்பு நடைபெற்ற பேராட்டத்திற்கு, எ.முருகேசன் தலைமை தாங்கினார். இதில், மாவட்ட செயற்குழு உறுப்பினர் பி.ராமமூர்த்தி, கே.காளிதாஸ் உள் ளிட்ட திரளானோர் பங்கேற்று கைதாகி னர். சங்ககிரியில் ஆறுமுகம் தலைமை யில் நடைபெற்ற போராட்டத்தில் மாவட்ட செயற்குழு உறுப்பினர் எஸ். கே.சேகர் உள்ளிட்ட பலர் பங்கேற்ற னர். மேட்டூர் பகுதியில் எஸ்.வசந்தி  தலைமையில் நடைபெற்ற போராட்டத் தில், மாவட்ட செயற்குழு உறுப்பினர் இளங்கோ மற்றும் எஸ்.எம்.தேவி உள் ளிட்ட பலர் பங்கேற்றனர். இதேபோல், கெங்கவல்லி கல்வராயன் மலை பகுதி யில் நடைபெற்ற போராட்டத்தில் திரளா னோர் பங்கேற்றனர். 

உதகை

நீலகிரி மாவட்டத்தில், ஒன்றிய  அரசை கண்டித்து மூன்று மையங்களில் நடைபெற்ற போராட்டத்தில், 300க்கும் மேற்பட்ட மார்க்சிஸ்ட் கட்சியினர் கைது செய்யப்பட்டனர். உதகையில் நவீன் சந்திரன் தலைமையில் நடைபெற்ற போராட்டத்தை கட்சியின் மாநிலக்குழு உறுப்பினர் வி.மாரியப்பன் துவக்கி வைத்தார். முன்னதாக ரயில் மறியலில் ஈடுபட முயன்ற போது தள்ளுமுள்ளு ஏற் பட்டது. இதேபோல் கூடலூர் தாலுகா வில் சி.கே.மணி தலைமையில் மறியல் போராட்டம் நடைபெற்றது. மாவட்ட  செயற்குழு உறுப்பினர் என்.வாசு  போராட்டத்தை துவக்கி வைத்தார். எரு மாடு பகுதியில் யோகண்ணன் தலை மையில் நடைபெற்ற போராட்டத்தில், மார்க்சிஸ்ட் கட்சியின் மாவட்டச் செய லாளர் வி.ஏ.பாஸ்கரன் உள்ளிட்ட திரளா னோர் பங்கேற்று கைதாகினர்.

தருமபுரி

தருமபுரி ரயில் நிலையத்தில் நடை பெற்ற மறியல் போராட்டத்திற்கு மாநி லக்குழு உறுப்பினர் ஆர்.சிசுபாலன் தலைமை வகித்தார். இதில், மாவட்ட  செயற்குழு உறுப்பினர்கள் எம்.மாரி முத்து, எம்.முத்து, எஸ்.கிரைஸாமேரி, வே.விசுவநாதன், ஆர்.ஜோதிபாசு மற் றும் என்.கந்தசாமி, எஸ்.எஸ்.சின்ன ராஜ், பி.ஜெயராமன், ராஜா, கே.என். மல்லையன், கே.குப்புசாமி, கே.பூபதி,  ஏ.ஜெயா, கே.எல்லப்பன் உள்ளிட்ட திர ளானோர் பங்கேற்றனர்.  அரூர் ஸ்டேட் வங்கி முன்பு நடை பெற்ற மறியல் போராட்டத்துக்கு மாவட் டச் செயலாளர் ஏ.குமார் தலைமை வகித்தார். இதில், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் சோ.அருச்சுணன், ஆர். மல்லிகா மற்றும் பி.குமார், கே.தங்க ராஜ், தி.வ.தனுசன், சி.வஞ்சி உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்று கைதாகி னர்.  பாலக்கோடு இந்தியன் வங்கி முன்பு  நடைபெற்ற மறியல் போராட்டத்திற்கு மாவட்ட செயற்குழு உறுப்பினர் சி. நாகராசன் தலைமை வகித்தார். இதில், டி.எஸ்.ராமச்சந்திரன், கவிதா உள்ளிட்ட திரளானோர் பங்கேற்று கைதாகினர்.  பென்னாகரத்தில் நடைபெற்ற மறி யல் போராட்டத்திற்கு மாவட்ட செயற் குழு உறுப்பினர் வி.மாதன் தலைமை ஏற்றார். இதில், சின்னசாமி, ரவி, எழி லரசு, சக்திவேல், இளங்கோவன், ஜீவா னந்தம், அன்பு, சுதா, செல்லன் உள் ளிட்ட திரளானோர் பங்கேற்றனர்.

நாமக்கல்

நாமக்கல் மாவட்டத்தில் மூன்று மையங்களில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் ஒன்றிய அரசை கண்டித்து  மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். நாமக்கல் பிஎஸ்என்எல் அலுவலகம் முன்பு நடைபெற்ற சாலை மறியல்  போராட்டத்திற்கு கட்சி மாவட்டச் செய லாளர் எஸ்.கந்தசாமி தலைமை வகித் தார். இதில், 150 க்கும் மேற்பட்டோர் இப்போராட்டத்தில் பங்கேற்று கைதாகி னர். எலச்சிபாளையம் பேருந்து நிறுத் தம் அருகே நடைபெற்ற சாலை மறி யல் போராட்டத்தில் 16 பேர் பங்கேற்று கைதாகினர். பள்ளிபாளையம் காவேரி  ஆர்எஸ் ரயில் நிலையத்தில் நடை பெற்ற ரயில் மறியல் போராட்டத்திற்கு கட்சி மாவட்ட செயற்குழு உறுப்பினர்  பி.பெருமாள் தலைமை வகித்தார். இந்த ரயில் மறியல் போராட்டத்தில் கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் எம்.அசோகன், ஜெயமணி, என்.வேலுச் சாமி, தங்கமணி, தமிழ்மணி, ஏ.டி.கண் ணன், கணேச பாண்டியன் மற்றும் சி. துரைசாமி, கே.மோகன், இ.கோவிந்த ராஜ், ஆர்.அலமேலு, எம்.ஆர்.முருகே சன், ஆர்.ரவி, ஐ.ராயப்பன், சந்திரமதி, மனோகரன் உள்ளிட்ட திரளானோர் பங் கேற்று கைதாகினர். 

ஈரோடு

ஈரோடு மாவட்டத்தில் 4 மையங்க ளில் மறியல் நடைபெற்றது. ஈரோடு ரயில் நிலையத்தில் நடைபெற்ற மறி யல் போராட்டத்திற்கு மாநிலக்குழு உறுப் பினர் ஏ.ராதிகா தலைமை வகித்தார். மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் ஜி். பழனிசாமி, சி.பரமசிவம், ஆர்.கோமதி, எஸ்.சுப்ரமணியன், சி.முருகேசன் மற் றும் பி.சுந்தரராஜன், எம்.பாலசுப்பிர மணி, முத்துபழனிசாமி, கே.பி.கனக வேல், எச்.ஸ்ரீராம், பா.லலிதா, க.சண் முகவள்ளி, பி.ராஜா, வி.ஏ.விஸ்வநா தன் உள்ளிட்ட 359 பேர் கைது செய்யப் பட்டனர். இதில் ஒரு பகுதியினரை ரயில் நிலையத்திற்குள் செல்ல விடாமல் காளை மாட்டு சிலை அருகில் தடுத்து  காவல் துறையினர் கைது செய்தனர்.  மற்றொரு பகுதியினரை ரயில் நிலை யத்திற்குள் சென்று இரண்டாவது நடை மேடையிலிருந்த பெங்களூர்-எர்ணா குளம் இன்டர்சிட்டி எக்ஸ்பிரசை செங் கொடிகளுடன் மறித்தனர். இதனை எதிர் பாராத காவல்துறையினர் பின்னர் வந்து குண்டு கட்டாக தூக்கி கைது செய்த னர்.  இதேபோல அந்தியூர் கனரா வங்கி முன்பு நடைபெற்ற மறியலுக்கு மாவட் டச் செயலாளர் ஆர்.ரகுராமன் தலைமை வகித்தார். இதில், மாவட்ட செயற்குழு உறுப்பினர் பி.பி.பழனிசாமி மற்றும் எஸ்.மாணிக்கம், ஆர்.முருகேசன், ஏ. ஜெகநாதன், எஸ்.வி.மாரிமுத்து மற்றும்  142 பெண்கள், 5 குழந்தைகள் உள்ளிட்ட  325 பேர் பங்கேற்று கைதாகினர். கோபி செட்டிபாளையம் பேருந்து நிலையம் அருகில் நடைபெற்ற மறியலுக்கு மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஏ.எம். முனுசாமி தலைமை வகித்தார். இதில், யுவராஜ், கே.எம்.விஜயகுமார், டி.சுப்பி ரமணி, எஸ்.சி.பிரகாசம், ஏ.சகாதேவன் மற்றும் 181 பெண்கள் உள்ளிட்ட 322 பேர் கைது செய்யப்பட்டனர். கடம்பூர் மலை பேருந்து நிலையம் அருகில் மாவட்ட செயற்குழு உறுப் பினர்கள் ஆர்.விஜயராகவன், சி.துரை சாமி ஆகியோர் தலைமையில் மறியல் நடைபெற்றது. இதில், பி.சடையப்பன் மற்றும் 26 பெண்கள் உட்பட 63 பேர் கைது செய்யப்பட்டனர்.