districts

img

குன்னூர்: பள்ளி மாணவிக்கு கத்திகுத்து

உதகை, ஏப்.29- குன்னூர் அருகே தனியார் பள்ளி மாணவியை, வாலி பர் ஒருவர் கத்தியால் குத்திய சம்பவம் தொடர்பாக காவல் துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்ற னர். நீலகிரி மாவட்டம், குன் னூர்  புனித மரியன்னை மேல்நிலைப் பள்ளியில், கிருஷ்ணா புரம் பகுதியைச் சேர்ந்த பிரியா (17) என்ற மாணவி 12 ஆம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில், வழக்கம்  போல் வெள்ளியன்று காலை பள்ளிக்கு சென்று கொண்டி ருந்தார். அப்போது குன்னூர்  ராஜாஜி நகர் பகுதியைச்  சேர்ந்த ஆசிக் (26) என்பவர், மாணவியை வழிமறித்து  கத்தியால் குத்திவிட்டு தப்பியோடினார். இதையடுத்து படுகாயமடைந்த மாணவியை பொதுமக்கள் மீட்டு, சிகிச் சைக்காக குன்னூர் லாலி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதன்பின் குன்னூர்  காவல்துறை யினர் வழக்குப்பதிவு செய்து, தப்பியோடிய ஆசிக்கை பிடித்து தீவிர  விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.