districts

போராடிய விவசாயிகள் மீது வழக்கு: ஆட்சியரிடம் புகார்

திருப்பூர், ஜூன் 30 - மடத்துகுளம் தாலுகா தாந்தோணியில் காட்டுபன்றிகள் விவசாய நிலங்களை சேதப் படுத்துவதால், உரிய நடவடிக்கை எடுக்க  வலியுறுத்தி போராடிய விவசாயிகள் மீது  வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அதை உடனடியாக திரும்பப்பெற வலியுறுத்தி தமிழ் நாடு விவசாயிகள் சங்கதினர் மாவட்ட ஆட்சி யர் அலுவலகத்தில் வெள்ளியன்று நடை பெற்ற விவசாயிகள் குறைதீர்ப்பு கூட்டத்தில் மனு அளித்தனர். தமிழ்நாடு விவசாய சங்க மாவட்ட தலை வர் எஸ்.ஆர்.மதுசூதனன் மாவட்ட ஆட்சிய ரிடம் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது, திருப்பூர் மாவட்டம், மடத்துகுளம் தாலுகா தாந்தோணியில் காட்டுபன்றிகளால் விவ சாய நிலங்கள் பதிப்புக்குள்ளாகி வருகிறது. பாதிக்கப்பட்ட விவசாயிகள் உரிய நடவ டிக்கை எடுக்க கோரி ஜூன் 5 ஆம் தேதி சாலை  மறியலில் ஈடுபட்டனர். போலீசாரின் பேச்சு வார்த்தைக்கு பின் கலைந்து சென்றனர். இந்நி லையில் அந்த போராட்டத்தில் பங்கேற்ற 36  விவசாயிகள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட் டுள்ளது. அதை உடனடியாக திரும்ப பெற  வேண்டும். திருப்பூர் மாவட்டத்தில் உள்ள  குளம் குட்டைகள் மற்றும் திருமூர்த்தி அணை,  அமராவதி அணை உட்பட்ட பகுதிகளில் வண் டல் மண் எடுக்க 6 மாத காலமாக அகில இந்திய  விவசாயிகள் சங்கத்தின் சார்பாகவும் விவசா யிகள் சார்பாகவும் மனுக்கள் கொடுத்து வரு கிறோம். எந்த  நடவடிக்கை  எடுக்கப்படாம லேயே இருந்து வருகிறது. அருகாமையில் உள்ள கோவை மாவட்டத்தில் 40 க்கும் மேற் பட்ட குளம் குட்டைகளில் மண் எடுக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதனால் அப் பகுதி விவசாயிகள் பயனடைந்து வருகின்ற னர். திருப்பூர் மாவட்டத்தில் மட்டும் வண்டல்  மண் எடுக்க அனுமதி வழங்க காலதாமதம்  செய்து வரப்படுகிறது. எனவே விவசாயிக ளுக்கு பயன்படும் வகையில் அனுமதி  வழங்கு வேண்டும்.  

உடுமலைப்பேட்டையில் வேளாண்மை பொறியியல் துறை அலுவலகம் இருக்கும் இடம் தனியார் இடம் என்பதால் தற்போது காலி  செய்துவிட்டு அலுவலகம் குடியிருப்பு  பகுதியான சங்கர் நகர் பகுதிக்கு ஒரு கட்டி டத்திற்கு இடம் மாற்றம் செய்துவிட்டனர். நக ரின் புறநகரில் இப்பகுதிக்கு சென்று வர விவ சாயிகள் பெரிதும் சிரமப்படும் நிலை உள் ளது. பொள்ளாச்சி - பழனி போன்ற பகுதிக ளில் வேளாண்மை துறை அலுவலகம் தோட் டக்கலை துறை அலுவலகம் மார்க்கெட்டிங் கமிட்டி மற்றும் வேளாண்மை பொறியியல் துறை அலுவலகங்கள் ஒரேவளாகத்தில் அமைந்துள்ளது. அதேபோல உடுமலை நக ரில் கொல்லம்பட்றைக்கு வடபுறம் அமைந் துள்ள வேளாண்மை அலுவலகம் அமைந் துள்ள பகுதியில் போதுமான இடம் உள்ளது.  அதில் வேளாண்மை பொறியியல் அலுவல கம் இயங்கிட உரிய அனுமதி பெற்றுத்தர வேண்டும். உடுமலைப்பேட்டை வட்டம் பெரி யவாளவாடி கிராமத்தில் வரதராஜ பெரு மாள் திருக்கோவிலுக்கு சொந்தமான நிலம் 31  ஏக்கர் உள்ளது. மேலும், அந்நிலத்தில் இருக் கும் சீமைகருவேல மரங்கள் வளர்ந்து தரி சாக இருப்பதால், அங்கு காட்டுபன்றிகளின் எண்ணிக்கை அதிகரித்து விவசாயிகளுக்கு பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. எனவே  அந்த நிலத்தை 2 ஏக்கர், 3 ஏக்கராக பிரித்து  பொது ஏலத்திற்கு விட்டு அதில் வரும் வருமா னத்தை வைத்து கோயில் பராமரிப்பும், கோயில் நிர்வாகமும் சிறப்பாக செயல் படுத்த முடியும். மேலும், விவசாயிகளும் பயன் பெறுவார்கள் என்பதால் பொது, ஏலத்திற்கு  கொண்டு வர வேண்டும். மேலும் மாவட்டத் தில் பல பகுதிகளில் தரிசாக உள்ள கோவில்  நிலங்களை உரிய பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும். 

ஜம்புக்கல் மலை சுமார் 2500 ஏக்கர் பரப் பளவு கொண்டதாகும். இந்த மலைப்பகுதி களில் விவசாயம் செய்வதற்கு ஏதுவாக உள்ள மண் பாங்கான இடங்களை சுமார் 500  ஏக்கர் பரப்பளவு முன்னாள் முதல்வர் கலை ஞர் ஆட்சிக்காலத்தில் முதன்முறையாக பல் வேறு சமுதாய மக்களுகும் விவசாயம் செய்ய பட்டா வழங்கப்பட்டது. நாளடை வில் ஏற்பட்ட பருவநிலை மாற்றங்களின் கார ணமாக விவசாயம் செய்ய முடியாமல் வேறு  தொழில் ஏதும் செய்ய இயலாத காரணத் தாலும் தங்கள் ஏழ்மையின் காரணமாக விவ சாயத் தொழிலாளர்களாக இடம் பெயர்ந்த னர். இந்தச்சூழவில் உடுமலை நகரம், சாய் ராம் லேஅவுட் பகுதியைச் சேர்ந்த வசந்த குமார் என்ற தனிநபர் ஒருவரும், அவர் சார்ந்த  குடும்பத்தினரும் ஓட்டுமொத்த மலையை யும் தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டுவ ரும் வண்ணம் அதிகார ஆதிக்க மனப்பான் மையோடு இந்த மலைக்குச் செல்லக்கூடிய வழித்தட பொதுப்பாதையில் கம்பி வேலி மற்றும் கேட் அமைத்து மற்றவர்கள் மலை யின் அரசு நிலமான  உள்ள செல்ல  முடியாதபடி தடுப்புகளை ஏற்படுத்தி மற்ற வர்களுக்கு உள்ள சமூகத்தின் பொதுவான உரிமையைப் பறித்துள்ளனர். இந்த ஜம்புக் கல் மலை முழுவதையும் தங்கள் கட்டுப்பாட் டிற்குள் கொண்டுவருவதற்காக கிரையத் தின் மூலமாகவும் 99 வருட குத்தகை மூல மாகவும் அந்த பகுதி மக்களின் ஏழ்மையைப்  பயன்படுத்தி முறையற்ற வகையில் எழுதி வாங்கியுள்ளனர். மேலும் பலரது விவசாய நிலங்கள் நிலங்களுக்கு செல்லமுடியாத வகையில் பொது வழித்தடத்தில் கம்பி வேலி  அமைப்பது, அகழி வெட்டுவது என்பதுடன் மற்றும் சுமார் 200 டன் அளவிலான மரங் களை வெட்டி கடத்தியுள்ளது போன்ற முறை யற்ற செயல்களைச் செய்து விவசாயிக ளுக்கு எதிராகவும் அந்தப் பகுதி மக்கள்  நலனுக்கு விரோதமாகவும் ஈடுபட்டு வரு கிறார். எனவே, பொது வழித்தட பாதையில் தனிநபர் அமைத்துள்ள கேட் நீக்கப்பட வேண்டும். முறையற்றவகையில் எழுதி வாங்கப்பட்ட வாங்கப்பட்ட குத்தகை பத்தி ரங்கள் ரத்து செய்யப்பட வேண்டும்.  ஆக்கி ரமிப்பில் ஈடுபட்ட நபர்கள் மீது உரிய நடவ டிக்கை எடுக்க வேண்டும். மலைவாழ் மக்க ளுக்கும் ஏழை எளிய விவசாய தொழிலாளர் களுக்கும் பட்டா வழங்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது.