திருப்பூர், ஜூன் திருப்பூர் மாவட்டத்தில் தேர்தல் பணிகள் தொடர்பான கலந்தாய்வு கூட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வெள் ளியன்று நடைபெற்றது. தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையர் பழனிக்குமார் தலை மையில், மாவட்ட ஆட்சியர் கிறிஸ்துராஜ் முன்னிலையில், திருப்பூர் மாவட்டத்தில் தேர்தல் பணிகள் தொடர்பாக கலந் தாய்வு கூட்டம் நடைபெற்றது. இதில், திருப்பூர் மாவட்டத் தில் உள்ளாட்சி அமைப்புகளின் காலிப்பணியிட விபரம், மாவட்டத்தில் வாக்குப்பெட்டிகள் இருப்பில் உள்ள விபரம், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களின் இருப்பு விபரம், தேர்தல் பொருட்கள் இருப்பு விபரம், தேர்தல் வழக்குகள் குறித்த விவரம் ஆகியவை குறித்து ஆய்வு மேற்கொள்ளப் பட்டது. மேலும் காவல்துறை பாதுகாப்பு விவரம் தொடர்பாக வும், ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. காலிப்பணியிடத்தினை பொறுத்தவரையில் ஊரக உள் ளாட்சி அமைப்பில் கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் 19, ஊராட்சி துணைத் தலைவர் 3, நகர்ப்புற உள்ளாட்சி அமைப் பின் பேரூராட்சி வார்டு உறுப்பினர் 2, நகராட்சி வார்டு உறுப்பினர் பதவி 1, அகியவற்றில் காலியிடம் ஏற்பட்டுள் ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும் தற்போது நடை பெற்று முடிந்த மாவட்ட திட்டக்குழு உறுப்பினர் தேர்தல் தொடர்பாகவும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இந்த கலந்தாய்வுக் கூட்டத்தில் மாநகர காவல் துணைய ஆணையர் வனிதா, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையும் திட்ட இயக்குனர் லட்சுமணன் மற்றும் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் வாணி ஆகியோர் கலந்து கொண்டனர்.