திருப்பூர், செப்.8- திருப்பூர் மாவட்டம், திருமுருகன்பூண்டி நகராட்சி அலுவ லக கட்டிடம் கட்டும் பணிகயை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் துவக்கி வைத்தார். திருமுருகன்பூண்டி நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் ரூ.3. 90 கோடி மதிப்பீட்டில் 15 ஆவது நிதிக்குழு மானியத்திட்டத்தின் கீழ் மண்சாலையை தார்சாலையாக அமைக்கும் பணியினை யும் மற்றும் கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டுத்திட்டத்தின் கீழ் திருமுருகன்பூண்டி புதிய நகராட்சி அலுவலக கட்டிடம் கட்டும் பணிகளை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் துவக்கி வைத்தார்கள். இந்நிகழ்ச்சியில் திருமுருகன்பூண்டி நகராட்சி தலைவர் குமார், திருப்பூர் மாநகராட்சி 4 ஆம் மண்டலத்தலைவர் இல. பத்மநாபன், துணைத்தலைவர் பொன்னுசாமி, திருமுரு கன்பூண்டி நகராட்சி ஆணையாளர் த.முகமது சம்சுதீன், நக ராட்சி பொறியாளர் மணி, சுகாதார ஆய்வாளர் செல்வராஜ் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.