தாராபுரம், ஏப்.26 - தாராபுரம் அருகே உள்ள ஆயிரம் ஆண்டு பழமையான கொங்கூர் உக்கிர காளியம்மன் கோவில் நகைகள் மற்றும் நிலங்கள் முறைகேடாக பயன்படுத்தப் படுவதாக இந்து சமய அறநிலையத் துறை அதிகாரியிடம் புகார் மனு அளிக் கப்பட்டுள்ளது. கொங்கூர் உக்கிரகாளியம்மன் கோவிலை சார்ந்த 100க்கும் மேற்பட்ட வர்கள் தாராபுரத்தில் உள்ள இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகளிடம் அளித்த புகார் மனுவில் கூறியிருப்பதா வது: ஆயிரம் ஆண்டு பழமையான கொங்கூர் உக்கிரகாளியம்மன் கோவி லில் வழி வழியாக ஏராளமான குடும் பத்தை சேர்ந்தவர்கள் வழிபட்டு வரு கிறோம். கோவிலின் அறங்காவலர் எனக்கூறிக்கொண்டு ஒருவர் சட்ட விரோதமாக பெயர் பலகை வைத்தது டன், தனி உண்டியல் வைத்து அதன் மூலம் லட்சக்கணக்கான ரூபாய் பண மோசடியில் ஈடுபட்டு வருகிறார். மேலும் கோவிலுக்காக பக்தர்கள் கொடுத்த 300 பவுன் நகைகளும் முறைகேடாக பயன்படுத்தப்பட்டுள்ளது. இது மட்டு மன்றி கோவிலுக்கு சொந்தமான நிலங் களையும் முறைகேடாக அவரது குடும் பத்தினர் பயன்படுத்தி வருகின்றனர். கோவிலுக்கு வரும் பக்தர்களிடம் ரூ.500 கொடுத்து பிரசாத பைகளை வாங்க வற் புறுத்துகிறார். கோவில் பெயரைப் பயன்படுத்தி பல கோடி ரூபாய் நிதி வசூல் முறைகேட்டில் ஈடுபட்டு உள்ள தாக கூறப்படுகிறது.எனவே கோவிலை ஆக்கிரமித்து, அறங்காவலர் எனக் கூறிக் கொண்டு முறைகேட்டில் ஈடு பட்டு வரும் நபர் மீது நடவடிக்கை எடுத்து, அவரிடமிருந்து கோவிலுக்கு சொந்தமான சொத்துகளை மீட்டுத் தர வேண்டும். இல்லையென்றால் மக் களை திரட்டி போராட்டத்தில் ஈடுபடு வோம் என கூறப்பட்டுள்ளது. மனுவை பெற்றுக்கொண்ட அதிகா ரிகள் இதுகுறித்து விசாரணை நடத்தப்ப டும் எனத் தெரிவித்துள்ளனர்.